பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதனூலைப் பற்றிய சில மதிப்புரைகள் . ’

“ இந்நூல் சுயஞானம் சுரக்கும் ஓர் ஊற்று." — லீஸெஸ்டர் பயொனியர்,

"இது நீங்கள் எல்லாரும் படிக்கவேண்டிய ஒரு புஸ்தகம்,"—நார்தெர்ன் வீக்லி.

"இச்சிறு புஸ்தகம் உண்மையில் ஜீவதத்துவ சாஸ்திரங்களின் ஆபரணங்களுள் ஒன்றாக இருக்கின்றது. நீங்கள் உதவிபுரிய விரும்பும் உங்கள் சிநேகிதர்களுக்கு அளிப்பதற்கு இதனிலும் நல்ல புஸ்தகம் ஒன்றைக் காட்டுவது நம்மால் இயலாது."— ஸையேன்ஸ் அவ் லைவ்.

" இந்நூலும், ஸ்ரீ. ஆலன் இயற்றியுள்ள மற்ற நூல்களைப்போன்று, மிகநன்றாகக் கூறப்பட்டுள்ள ஞானத்தை மிகுதியாகக் கொண்டுள்ளது. இதன் ஒவ்வொரு பக்கமும் சாந்தம், சிந்தனை, சமயம்-இவை பொருந்திய மனத்தை வெளிப்படுத்துகின்றது. இதன் நடை, விரைவில் சுயஞானம் சுரக்கச் செய்யத்தக்கதாகவும், ஆறுதல் செய்யத்தக்கதாகவுமுள்ள ஒரு நல்ல கீதத்திற்குச் சமமாயிருக்கிறது. 'இப்புஸ்தகத்தை வாங்கிப் படியுங்கள்' என்று கூற நாம் ஆசைப்படுகிறோம். இந்நூல் மனிதனது புறத்திலும் அகத்திலு முள்ள ஓர் இரத்தினம்.—பெய்ஸ்லே டெய்லி எக்ப்ரெஸ்.

8