பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/30

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
வலிமைக்கு மார்க்கம்.

விக்க வேண்டு மென்று அது காத்துக்கொண்டிருக் கிறது.ஆன்மாவின் அக ஒழுங்குகளை யெல்லாம் அறிந்த ஒருவர் " 'கடவுளுலகம் இதோ இருக்கிறது; அதோ இருக்கிறது.' என்று மனிதர் சொல்லும் பொழுது நீங்கள் அவர்பின் செல்லவேண்டாம். கடவுளுலகம் உங்கள் அகத்துள்ளேயே இருக்கிறது." என்று கூறியுள்ளார். நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், இவ்வாக்கை நீங்கள் நம்ப வேண்டும் ; இதனை நீங்கள் சந்தேகம் சிறிது மில்லாத மனத்தோடு பூரணமாக நம்பவேண்டும் ; பின்னர் இதனை நீங்கள் அபரோட்சமாகக் காணும் வரையில் இதனைத் தியானிக்க வேண்டும். நீங்கள் இவ்வாறு தியானிக்குங் காலையில் உங்கள் அகவுல கத்தைச் சுத்தப்படுத்தவும். புதுப்பிக்கவும் தொடங்குவீர்கள். நீங்கள் அதனைப் புதிப்பிக்குங்காலையில் உண்மைகளை ஒன்றன்பின் ஒன்றாக அறிவீர்கள் ; அநுபவங்களை ஒன்றன்பின் ஒன்றாக அநுபவிப்பீர்கள்' ; தன்னையாளும் ஆன்மாவின் மந்திர சக்தியைத் தவிரப் புறப்பொருள்களில் யாதொரு சக்தியும் இல்லையென்று காண்பீர்கள்.

22