________________
வலிமைக்க மார்க்கம். மனக்களைப்பும் சரீர நோவும் அவர்களை விட்டு நீங்கி யொழிந்துவிட்டன. நீங்கள் இந்நம்பிக்கையை உடையவர்களா யிருப்பின், உங்கள் வெற்றியைப் பற்றியாவது தோல்வியைப் பற்றியாவது நீங்கள் கவலையடைய வேண்டிய ஆவசியக மில்லை; வெற்றி நிச்சயமாக உங்கள் பால் வந்து சேரும். உங்கள் முயற்சியின் பலன்களைப்பற்றி நீங்கள் கவலையடைய வேண்டிய ஆவசியகம் உண்டாகாது. சரியான நினைப்புக்களும் சரியான முயற்சிகளும் சரியான பலன்களைத் தவறாது கொண்டுவருமென்று நீங்கள் தெரிந்து, சந்தோஷத்தோடும் சமாதானத் தோடும் உங்கள் வேலைகளைச் செய்வீர்கள். அநேக சுகங்களை அதுட வித்துக் கொண்டிருக் கிற ஒரு ஸ்திரீயை நான் அறிவேன். சமீபகாலத் தில் ஒரு நண்பர் அவளைப் பார்த்து ' ஆ : நீ எவ்வ ளவு அதிர்ஷ்ட ஈரலி! நீ ஒரு பொருளை அடைய விரும்புகின்றாய்; அஃது உடனே உன்னிடம் வந்து சேருகின்றது.” என்று கூறினார். அவளது காரியங்கள் மேலாந்தரப் பார்வையில் அவ்வாறு தோன்றின. உண்மையில், அவள் வாழ்வைப்பற்றிய சகல சுகங் களும் அவள் ஆயுள் நாளெல்லாம் கைக்கொண்டு வளர்த்து வந்த அவளது (சுகங்களென்னும்) அக நிலைமைகளின் நேரான பலன்கள். வெறும் விருப்பம் ஆசாபங்கத்தைத் தவிர வேறொன்றையும் கொண்டு வரமாட்டாது, சரியான வழியிற் செய்யப்படும் முயற் சியொன்றே விரும்பிய பொருளைக் கொண்டுவரும். 80