________________
எழுத்ததிகாரம் - உருபியல் சு 'முற்ற' என்றதனால், பிறசாரியை பெறுவனவும் கொள்க. வழக்கத்தாற் பாட்டா சாய்ர் தான், சரியதனை, கரியதெனொடு என வரும். சுசு. நெட்டெழுத் திம்ப சொற்று மிகத் தோன்றும் அப்பான் மொழிக ளல்வழி யான. இஃது, அவற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்குதல் நுதலிற்று, இ-ள் :- நெட்டெழுத்து இம்பர் ஒற்று மிகத்தோன்றும் நெட்டெழுத்தின் பின் னாக (இடை) இனவொற்று மிகத்தோன்றும், அப்பால் மொழிகள் அல்வழியான்அக்கூற்றுமொழிகள் அல்லாத இடத்தின்கண்ணே. அவ்வீறு இன்சாரியை பெறுவது ஆண்டாயின் பெறாது. உ-ம், யாட்டை, யாட்டொடு எனவரும். அப்பான்மொழிகளாவன க ச தபக்கள். இவை இனவொற்றுமிகாதென்று கொள்க. ‘தோன்றும்' என்ற தனான், உயிர்த்தொடர்மொழியும் இன்பொது இனவொ ற்று மிகுதல்கொள்க, முயிற்றை, மூயிற்றொடு என வரும். கூஎ, அவை தாம் இயற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப. இது, மேற் சாரியை விலக்கப்பட்டவற்றிற்கு முடிபுகூறுதல் நுதலிற்று. இ-ள் :- அவைதரம்-மேற் சாரியை பெரவென விலக்கப்பட்ட அவைதாம், இயற்சையவாகும் செயற்கைய என்ப-இயல்பாய்முடிதலையுடையவாகும் செய்தியை யுடைய வென்று சொல்லுவர். - R.-ம். யாட்டை , யாட்டொடு என ஒட்டுக. 'செயற்கைய' என்றதனான், இனவொற்றுமிக்கன சிறுபான்மை இன்பெறுதது ம்கொள்க. யாட்டினை, யாட்டினொக; முயிற்றினை, முயிற்றினொடு என வரும். (உG)
- அ. எண்ணி னிறுதி யன்னொடு சிவணும், இஃது, அவ்வீற்று எண்ணுப்பெயர் முடிபுகூறுதல் அதலிற்று.
இ-ள் ,--- எண்ணின் இறுதி அன்னொம் சிவனும் - எண்ணுப்பெயர்களினது குற்றுகரவீறு அன்சாரியையொடு பொருந்தும். உ-ம். ஒன்றனை, ஒன் றனொக; இரண்டனை, இரண்டனொடு என ஒட்டுத. (உக) .சு, ஒன்று முதலாகப் பத்தூர்ந்து வரூஉம் எல்லா வெண்ணுஞ் சொல்லுக் காலை , ஆனிடை வரினு மான மில்லை அ ஃதென் கிளவியாவயிற் கெடுமே உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே. இதுவும் அது,