பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உஉ தொல்காப்பியம் - இளம்பூரணம் இ - ள் :-- மான் வினை கிளப்பின் முதல் நிலை இயற்று - அத்தாய் என்னும் சொல் மானது வினையைக் கிளந்து சொல்லுமிடத்து இவ்வீற்று முதற்கண் கறிய நிலைமையின் இயல்பிற்றாய் அல்லெழுத்து மிக்க முடியும். உ - ம். மான் நாய்க்கலாம் ; செரு, தார், படை என வரும். 'மான் விளை' என்றது மகற்குத்தாயாய்ப் பயன்படும் நிலைமையன்றி, அவனோடு பசைத்த நிலைமையை. ஈ.சுக, மெல்லெழுத் துறழு மொழியுமா ருளவே. இஃது, இவ்வீற்றுட் சிலவற்றிற்கு எய்தாதது எய்துவித்தல் முதலிற்று. இ-ள் :- மெல்லெழுத்து உறழும் மொழியும் உள - மேற்கூறிய வல்லெழுத்தி னொடு மெல்லெழுத்து மிக்கும் உதழ்த்தும் முடியும் மொழிகளும் உள. உ - ம், வேய்க்குதை; வேய்க்குறை: சிறை, தலை, புதம் எனவரும். (சுரு) கூசுஉ. அல்வழி யெல்லா மியல்பென மொழிப. இஃது, இவ்வீற்று அல்வழிமுடிபு கூறுதல் முதலிற்று. இ - ள்.-- அல்வழி எல்லாம் இயல்பு என மொழிப- யாரவீற்று அல்வழியெல்லாம் இயல்பாய் முடியும் என்று சொல்லுவர் புலவர். உ - ம். காய்கடிது; சிறிது, தீது, பெரிது என வரும். 'எல்லாம்' என்றதனால், இல்வீற்று உருபு வாராது, உருபின் பொருள்பட வந்த இடைச்சொல் முடியும், வினையெச்சமுடியும், இருபெயரொட்டுப்பண்புத்தொகைமுடி பும், அல்வழியுறழ்ச்சிமுடிபும் கொள்க. அவ்வாய்க்கொண்டான், இவ்வாய்க்கொண்டான், உவ்வாய்க்கொண்டான், எவ்வாய்க்கொண்டான்; சென் மூன், தக் தான், போயினன் எனவும்: தாய்க்கொண்டான்; சென்சன், தந்தான், போயினான் எனவும்: பொய்ச் சொல், மெய்ச்சொல் எனவும்; வேய் கடிது, வேய்க்கடிது; சிறிது, தீது, பெரிது எனவும் வரும், (சுசு) கூசுக... சகார விறுதியகார வியற்றே , இது, ரகாரவீற்ற வேற்றுமைமுடிபு கூறுதல் நுதலிற்ற, இ'ன்:-வார இறுதி யான இயற்று. ரகரசவீற்றுப் பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் பசார வித்து இயல்பிற்றாய் வல்லெழுத்து வக் தவழி மிக்கு முடியும், உ-ம். தேர்க்கால்; செய்கை , தலை, புறம் எனவரும், கூசுச, ஆரும் வெதிருஞ் சாரும் பீரும் மெல்லெழுத்து மிகுதன் மெய்பெறத் தோன்றும். இஃது, இவ்வீற்றுட் சிலவற்றிற்குஎய்தியது விலக்கப் பிறி துவிதி கூறுதல் முதலிற்று. இ - ள்:- ஆரும் வெதிரும் சாரும் பீரும்-ஆர் என்னும் சொல்லும் வெதிர் என்னும் சொல்றும் சார் என்னும் சொல்லும் பீர் என்னும் சொல்லும், மெல்லெழுத்து மிகுதல் மெய்பெற தோன்றும் - மெல்லெழுத்து மிக்குமுடிதல் மெய்ம்மைபெறத் தோன்றும். உ -ம், ஆர்க்கோடு, வெதிர்க்கோடு, சார்க்கோடு, பீர்க்கோடு; செதின், தோல், பூ என வரும்.