பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - அகத்திணையியல் கக இ-ள் :--கொண்டு தலைக்கழிதலும் (உண்டு) பிரிந்து அவண் இரங்கலும் உண்டு. கொண்டு தலைக்கழிதலும் உண்டு பிரிந்தவண் இரங்கலும் உண்டு, ஓர் இடத்தான் என மொழிப-ஒரோவிடத்துக்கண் என்று கூறும். உண்டு என் பதை இரண்டிடத்தும் கூட்டும். அன்றியும் உண்டென்பதனை இல் லென்பதன் மாறாக்கி இரவுத் திணையாக்கிப் பொதுப்பட நின்ற தெனவுமாம். ஓரிடத் தென் நமைமன், மேற்சொல்லப்பட்ட ஐவகை உரிப்பொருளும்போல் எல்லாத் திணைக் கும் பொதுவாகி வருதலின்றி, கொண்டுதவைக்கழிதல் பாலைக்கண்னும், பிரிந்தவணிரங் கல் பெருந்திணைக்கண்ணும் வருமென்று கொள்க. கொண்டு தலைக்கழி தலாவது உடன் கொண்டு பெயர்தல். அது, நிலம் பெயர் தலின் புணர்தலின் அடங்காமையானும், உடன் கொண்டு பெயர் தலின் பிரிதலின் அடங்காமையானும், வேறு ஓதப்பட்டது. பிரித்தவணிரங்கலாவது ஒருாரை ஒருவர் பிரிந்தவிடத்து இரங்கல். அது, நெட்டாறு சென் றவழி இரங்குதலின்மையானும், ஒருவழித் தணந்த வழி ஆற்றுதலின்றி வேட்கை மிகுதியால் இரங்குதலானும், வேறு ஓதப்பட்டது. [இதற்கு) ஏறியமடற்றிறமும், தேறுதெலொழிந்த காமத்து மிகுதிறமும் முதலாயின பொருள், இது பெருந்திணைக்கு உரித்து. (இடத்தான்' என்பது வேற்றுமை மயக்கம். ஈந்நகரம் சாரியை) (எ) - ' கஅ. கலந்த பொழுதுங் காட்சியு மன்ன. - இதுவும் அது. இ-ள் :-(கலந்த பொழுதும்- தலைமகளைக் கண்ணுற்றவழி மன நிகழ்ச்சி உன தாங் - காலமும் (அதன்) பின்னர்க் குறிப்பறியத் துணையும் நிகழும் நிகழ்ச்சியும், காட்சியும் தலை வியை எதிர்ப்படுதலும், அன்ன-ஓரிடத்து நிகழும் உரிப்பொருள்,) கலந்த பொழு தென்பது தலைமகளைக் கண்ணுற்றவழி மன நிகழ்ச்சி யள தாங் காலம்; அக்காட்சிப் பின்னர்க் குறிப்பறியும் துணையும் நிகழும் நிகழ்ச்சி, காட்சியாவது தீலைவியை எதிர்ப்படுதல். குறிப்பறிந்த பின்னர்ப் புணரும் துணையும் நிகழும் முன்னிலையாக்கல் முதலாயின. புணர்தல் நிமித்தம், இவை அந்திகானவன் றிப் பொதுப்பட நிற்றலின் வேறு ஓதப்பட்டன. அன்னவென்பது (இவையும்) ஓர் இடத்து சிகழும் உரிப்பொரு ளென் றவாறு, ஒரிடமாவது கைக்கிளை. அஃதேல், இவையும் புணர்தல் நிமித்தமா யினால் வரும் குற்றம் என்னை பெனின், ஒருவன் ஒருத்தியை எதிர்ப்பட்டுழிப் புணர்ச்சி வேட்கை தோற்றலும் தோற்றாமையும் உண்மையின், காட்சி பொதுப்பட நின்றது. ஐயம் முதலாகக் குறிப்பறிதல் ஈராக் விகழும் மன நிகழ்ச்சி, தலைமகள் மாட்டுக் காமக்குறி ப்பு இல்வழிக் காமக்குறிப்பு உணராது கூறுதலின், புணர்தல் பிமித்தம் அன்று யிற்று. கசு. முதலெனப் படுவ தாயிரு வகைத்தே, - இதுவும், ஐயம் அறுத்தலை நதலிற்று. இ-ள் :-- முதல் எனப்படுவது- மேல் எடுத்தோதப்பட்டவற்றில் முதல் என்று சொல்லப்ப வெது, அ இருவகைத்து நிலமும் காலமுமாகிய அவ்விருவகையை உடையது. . எனவே',. ஏனையவெல்லாம் உரிப்பொருள் என்ற வாராம். இதனாம் பெற்ற தென்னை யெனின், முதல் கரு உரிப்பொருள் என அதிகரித்து வைத்தார் ; இனிக் சருப்பொருள் கூறுகின்றார்; உரிப்பொருள் பயான் நிக்கறிஞர் என ஐயம் நிகழும் ; அது விடுத்தல் என். (கட்டு நீண்மீ ன் து.) . - - (க்க)