பொருளதிகாரம் - களவியல்
அங
'கொடிய னாயினு மாக
வவனே தோழியென் னுயிர்கா வலனே.”
(ஐங்குறு - தனி.)
என வரும்.
பொழுது மாறும் புரைவ தன்மையின் அழிவு தலைவந்த சிந்தையால் தலைவி கூறிய செய்யுள் :-
'கொடுவரி வேங்கை யிளைத்துக் கோட்பட்டு
மடிசெவி வேழ மிரிய---வடி யோசை
யஞ்சியொதுங்கு மதருள்ளி யாரிருட்
டுஞ்சா சுடர்க்கொடி கண்” (ஐந்திணையைம் - யசு)
வளைவாய்ச் சிறுகிளி விழைதினை கடியச்
செல்கென் றோளே யன்னை யெனநீ
சொல்லி னெவனாந் தோழி கொல்லை
நெடுங்கை 1வன்மான் கடும்பகை யுழந்த
குறுங்கை யிரும்புலிக் கோள்வ லேற்றை
பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கு
மாரிரு ணடுநாள் வருதி
சார னாட வாரலோ வெனலே.” (குறு - MP3]
எனவரும்.
காம மிக்கவழிக் கூறிய செய்யுள்:-
<poem>"அம்ம வாழி தோழி நலனே
யின்ன தாகுதல் கொடிதே புன்னை
பணிமலர் துறைதொறும் விரிக்கு
மணிதீர்ச் சேர்ப்ப்ப மறவா தோர்க்கே.'
(ஐங்குறு - எயா)
இது தன்வயின் உரிமை:
'நன்(என் றன்றே யாமஞ் சொல்லவிந்
தினி தடங் கினரே மாக்கண் முனிவின்றி
நனந்தலை யுலக முந் துஞ்சு
மோர்யான் மன்ற துஞ்சா தேனே.”
(குறுந் - சு)
இஃது அவன் வயிற் பரத்தை(மை):
"கொடுந்தா ளலவன் குறையா யிரப்பே மொதிங்கா வொலிகடற் சேர்ப்ப-னெடுந்தேர் கடந்த வழியையெங் கண்ணாரக் காண நடந்து சினதயாதி நீ . (ஐந்திணையைம் -) அவனளி சிறந்தவழித் தலைவி கூறிய செய்யுள்: ---
சேணோன் மாட்டிய ஈறும்புகை ஞெகிழி
வான மீனின் வயின்வயி னிமைக்கு
மோங்குமலை நாடன் சாந்துபுல ரகல
முள்ளி னுண்ணோய் மல்கும்
புல்லின் மாய்வ தெவன்கொ லன்னாய்.”
(குறுந் -- 180).
(பிரதி)-1. வளமான்: