பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/52

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருளதிகாரம் - களவியல் ளஅரூ

    உம்மை எதிர்மறையாதலாற் கூறாமை பெரும்பான்மை.காலமும் என்றது இவ்வொழுக்கம் புறத்தார்க்குப் புலனாங் காலம். அக்காலத்துத் தோழி மத்தியடம்படாம லறிவிக்கும் என்றவாறு.
   
   இனி,வரைவிடைவைத்த காலத்து வருத்தமுற்றவழிக் கூறிய செய்யுள்:-
   
       புனவன் 1றுடவைப் பொன்போற் சிறுதினைக்
       கடியுண் கடவுட் கிட்ட சில்குர
       லறியா துண்டன மஞ்ஞை யாடுமகள்
       வெறியுறு வனப்பின் வேர்த்துற்று நடுங்குஞ்
       சூர்மலை நாடன் கேண்மை
       நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே  (குறுந்-ளரூ]
       
  எனவரும்.
  
  வரையா நாளிடை வந்தோன் முட்டியவழித் தலைவி கூறியதற்குச் செய்யுள் :-
  
      தாழை குறுகினுந் தண்ணந் துறைவனை
      மழைமா னோக்கின் மடமொழி -நூழை
      நுழையு மடமகன் யார்கொலென் றன்னை
      புழையு மடைத்தாள் கதவு. [கைந்நிலை- ரூகூ]
எனவும்,
     
     அறியா மையி யன்னை யஞ்சிக்
     குழையன் கோதையன் குறும்பைந் தொடியன்
     விழவயர் துணங்கை தழுவுகஞ் செல்ல
     நெடுநிமிர் தெருவிற் கைபுகு 2கொடுமிடை
     நொதும லாளன் [கதுமெனத் தாக்கலிற்]
     கேட்டோ ருளர்கொ லில்லைகொல் போற்றென
     3யாணது பசலை யென்றன னதனெதிர்
     4நாணிலை யெலுவ வென்றுவந் திசினே
     செறுநறும் விழையுஞ் செம்ம லோனெ[ன]
     நறுநுத லரிவை போற்றேன்
     சிறுமை பெருமையிற் காணாது துணிந்தே.  {நற்றிணை-ருய]
     
 எனவும் வரும். இதன்கண் என்றானென ஒருசொல் வருவிக்க.
 
 உரையெனத் தோழிக்கு உரைத்தற்குச் செய்யுள்:-
 
    பொன்னிணர் வேங்கை கவினிய பூம்பொழிலு
    ணன்மலை நாட னலம்புனைய- மென்முலையாய்
    போயின திந்நாள் புனத்து மறையினா
    லேயினா ரின்னு மினிது. [ஐந்திணையைம்--யக]
    
 எனவரும்.
 
  இன்னும், 'உரையெனத் தோழிக் குரைத்தற் கண்ணும்' என்பதற்குத் தலைவற்கு உரையெனத் தோழிக்கு உரைத்தற் கண்ணும் என்றுமாம்.

  (பிரதி) - 1. றொடவை. 2.கொடிமுடி. 3.யானது. 4. துணிலை யெறுவமென்றுவந்.
  24