பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - கற்பியல் உாசு மனை முதல் வினையொடு முவப்ப நினைமா நெஞ்ச நீங்குதன் மறக்தே.” (அகம் - இக) என வரும். சென்று கையிகந்து பெயர்த்துள்ளிய வழியும் என்பது மேற்கூறியவாறினைக் கையிகந்து முன்னொருகாற் சென்று மீட்டும் அந்நெறியினைப் போக நினைந் தவழியும் கூற்று நிகழும் என்றவாறு. இருங்கழி முதலை மேந்தோ லன்ன கருங்கா லோமைக் காண்பின் பெருஞ்சினைக் கடியுடை நனந்தலை யீன்றிளைப் பட்ட கொடுவாய்ப் பேடைக் கல்கிரை தரீ இயர் மான்றுவேட் டெழுந்த செஞ்செவி யெருவை 2வான்றோய் சிமய விறல்வரைக் கலா(அற் அளங்குநடை மரையா வலம்படத் தொலைச்சி யொண்செங் குருதி 3யும்வறியுண் டருந்துபு புலவுப்புலி துறந்த கலவுக்கழி கமுடைக் கொள்ளை மரந்தரி னானாது கவரும் புல்லிலை கிமராத்த வகன் சே ணத்தங் கலந்தா லுள்ள மொடு கழியக் காட்டிப் பின்னின்று துரக்கும் நெஞ்ச நின்வாய் வாய் போற் பொ[ய]ம் மொழியெம் மெவ்வங் களை இய.. கவிரித ழன்ன காண்பின் செவ்வா யந் தீங் கிளவி யாயிழை மடந்தை : கொடுங்குழைக் கமர்த்த நோக்கம் நெடுஞ்சே ணாரிடை விலங்கு ஞான்றே.” (அகம் - கூ.) எனவரும். காமத்தின் வலியும் என்பது--பொருளினுள் காமம் வலியுடைத்து என உட் கொண்ட வழியும் கூற்று நிகழும் (என்றவாறு.) உதாரணம்:-- "விரிதிரைப் பெருங்கடல் வளைஇய வுலகமும் அரிதுபெறு சிறப்பிற் புத்தே காகம் இரண்டுந் தூக்கிற் சீர்சா லாவே பூப்போ லுண்கட் பொன்போன் மேனி மாண்வரி யல்குற் குறுமகள் தோண்மாறு படூஉம் வைகலோ டெமக்கே.” (குறுர் - MA) எனவரும். கைவிடின் அச்சமும் என்பது.-- தலைவியைக் கைவிட்டவழி அவளது உயிர்ப்பொரு ட்டு அஞ்சுதற்கண்ணும் கூற்று நிகழும் (என்றவாறு.) உதாரணம்;-- அளிகிலை பெறாஅ தமரிய முகத்தள் விளிநிலை கேளா டமியண் மென்மெல் (பிரதி-1. கலதிரை. 2: 'யான்ரோய்-3. யும் வறி துண்டருந்தும், 4. பார்த்த.