பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். கருத்து. பிறன் கேட்டைக் கருதியவனுக்குக் கடவுள் கேடு விளைப்பர். ரு. இலனென்று தீயவை செய்யற்க செய்யி னிலனாகு மற்றும் பெயர்த்து. 174. பொருள். இயன் என்று தீயவை செய்யற்க (தான் பொருள் இல்லாதவன் என்று நினைத்து (ப்பொருள் ஈட்டுதற்காகத்) தீய வினை களை (ஒருவன்) செய்யாதிருக்கக் கடவன்; செய்யின் மற்றும் பெயர் த்து இலன் ஆகும்—(தீய வினைகளைச்) செய்யின் உள்ளதும் நீங்கி இல்லாதவன் ஆவன். அகலம். உள்ளதானது, தான் பொருள் இல்லாதவன் என்று அறிந்த அறிவு. மணக்குடவர் பாடம் 'இலமென்று'. இல்ல காரணமாகத் தீவினை செய்வின் என்தமையால், மற்றும் என்பதற்கு உள்ளதும் என்று பொருள் உரைக்கப்பட்டது. கருத்து. தீய வினை புரிபவன் தன் அறிவையும் இழப்பன். 175. க. தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால தன்னை யடல்வேண்டா தான். பொருள். கோய் பால தன்னை அடல் வேண்டாதான்-பிணிப் பகுதியன தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீ பால பிறர்கண் செய்யற்க - தீமைப் பகுதியனவற்றைப் பிறர்மாட்டுச் செய்யாதிருக் கக் கடவன். அகலம். பிணிப் பகுதியன-பிணி வகையிற் சேர்க்தவை. தீமைப் பகுதியன—தீமை வகையிற் சேர்ந்தவை.'தான கருத்து. தீவினை புரிவார் கோய்பல கொன்னர். எ. எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும். 210' ' அசை.

176.

210