பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் இஃது, அவ்வீற்றுவிரவுப்பெயருட் சிலவற்றிற்கு எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. இ-ள்:- ஆணும் பெண்ணும் அஃறினை இயற்கை -ஆண் என்னும்பெயரும் பெண் என்னும் பெயரும் மேல் தொகைமரபினுள் "மொழிமுத லாகும்" (சூத்திரம்- ரு]என் பதன்கண் அஃறிணைப்பெயர் முடிந்த இயல்புபோல் தாம் வேற்றுமைக்கண் இயல்பாய் முடியும். உ-ம். ஆண்கை, பெண்கை; செவி, தலை, புறம் எனவரும். மற்றிது தொகைமரபினுள்"அஃறிணை விரவுப்பெயர் [சூத்திரம்-யங) என்பதனுள் இயல்பாய் முடிந்ததன்றோ வெனின், இவை ஆண்டுமுடிந்தனபோலத் தத்தம் மரபின் வினையாற் பாலறியப்படுவனவன்றி, இருதிணைக்கண்ணும் அஃறிணையாய் முடிதலின் அவ்வஃறிணைப்பெயரது இயல்போடு மாட்டெறிந்து முடித்தான் எனக்கொள்க. இவ் வாறாதலின், ஆண்கடிது பெண்கடிது என்னும் அல்வழியும் "மொழிமுத லாகும்" [தொகைமரபு - ரு] என்பதனுட் கொள்ளப்படும். கூளரு. ஆண்மரக் கிளவி யரைமர வியற்றே (அ) இது, திரிபுவிலக்கிச் சாரியை வகுத்தமையின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. இ-ள்:-ஆண் மரக் கிளவி அரை மர இயற்று - ஆண் என்னும் மரத்தை உணர. நின்ற பெயர்ச்சொல் அரை மரம் அம்முப்பெறும் இயல்பிற்றாய்த் தானும் அம்முப் பெற்று முடியும். உ-ம். ஆணங்கோடு; செதிள், தோல், பூ எனவரும். ஙாக விண்ணென தன வரூஉங் காயப் பெயர்வயின் உண்மையு முரித்தே யத்தென் சாரியை (%) செய்யுஸ் மருங்கிற் றெழில்வரு காலை. இது, செய்யுளுள் திரிபு விலக்கிச் சாரியை வகுத்தல் நுதலிற்று. இ-ள்:- விண் என வரும் காயப் பெயர்வயின் விண் என்று சொல்லவருகின்ற ஆகாயத்தை உணரநின்ற பெயர்க்கண், அத்து என்னும் சாரியை உண்மையும் உரித்து- அத்து என்னும் சாரியை உண்டாதலும் உரித்து இல்லையாதலும் உரித்து, செய்யுள் மருங்கின் தொழில் வரு காலை-செய்யுளிடத்து வினை வரும் காலத்து. உ-ம். விண்ணத்துக் கொட்கும் எனவும், "விண்குத்து நீள்வரை"(நாலடி- உஉசு) எனவும் வரும். (ய) கூறஎ. தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெயரில். இஃது, இவ்வீற்றுட் சிலவற்றிற்குத் திரிபு விலக்கி உகரமும் வல்லெழுத்தும் வகுத்தல் நுதலிற்று. இ-ள்:- தொழிற் பெயரெல்லாம் தொழிற் பெயர் இயல-ணகாரவீற்றுத்தொழிற் பெயரெல்லாம் அவ்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் ஞகாரவீற்றுத்தொழிற் பெயரது இயல்பாய் வன்கணம் வந்தவழி வல்லெழுத்தும் உகரப்பேறும் மென்கணமும் இடைக்கணத்துவகரமும் வந்தவழி உகரமும் பெற்றுமுடியும்.