பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

6 ருஉ தொல்காப்பியம் - இளம்பூரணம் ஞா முற்கூறாது யா முற்கூறியவதனான், யா முதன்மொழிக்கண், ஞா வரு மென்றுகொள்க. ஈச அ. மொழிமுத லாகு மெல்லா வெழுத்தும் வருவழி நின்ற வாயிரு புள்ளியும் வேற்றுமை வல்வழித் திரிபிட விலவே. (P) இது, ணகார வீற்றிற்கும் னகாரவீற்றிற்கும் அல்வழிக்கண் நிலைமொழிமுடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்:- மொழிமுதல் ஆகும் எல்லா எழுத்தும் வருவழி-மொழிக்கு முதலா மென்று சொல்லப்பட்ட இருபத்திரண்டெழுத்தும் வருமிடத்து, நின்ற அ இரு புள் ளியும் வேற்றுமை அல்வழி திரிபு இடன் இல-பெயர்ச்சொல்லினின்ற ண னக்களா கிய அவ்விருபுள்ளியும் வேற்றுமையல்லாத அல்வழியிடத்துத் திரியும் இடம் இல. உ-ம். மண், பொன் என நிறுத்து, கடிது, சிறிது, தீது, பெரிது என வன்கணத் தோடு ஒட்டுக. பிற கணத்துக்கண்ணும் அவ்வாறே ஒட்டுக. வருமொழி முற்கூறியவதனால், ணகாரத்திற்குச் சிறுபான்மை திரிபும் உண் டெனக்கொள்க. அது சாட்கோல் எனவரும். (ஏகாரம் ஈற்றசை.) ளசக. வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தல்வழி மேற்கூ றியற்கை யாவயினான. (®) இஃது, அவ்விரண்டு ஈற்றிற்கும் வேற்றுமைக்கண் நிலைமொழிமுடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்:-வேற்றுமைக்கண்ணும்-வேற்றுமைப் பெருநட்புணர்ச்சிக்கண்ணும்,வல் லெழுத்து அல் வழி-வெல்லெழுத்து அல்லாதவிடத்து, மேல்கூறு இயற்கை அ வயின் ஆன் - மேற்கூறிய இயல்புமுடிபாம் அவ்விரண்டு புள்ளியிடத்தும். உ-ம். மண், பொன் என நிறுத்து,ஞாற்சி நீட்சி என வன்கணம் ஒழித்து எல் லாவற்றோடும் ஒட்டுக. ளரு வென வரூஉம் புள்ளி முன்னர்த் த ந வெனவரிற் றனவா கும்மே. (fr) இது, புள்ளிமயங்கியலை நோக்கியதோர் வருமொழிக்கருவி கூறுதல் நுதலிற்று. இ-ள்:-லன என வரும் புள்ளி முன்னர்-ல ன என்றுசொல்ல வருகின்ற புள் ளிகளின்முன்னர், த ந என வரின்-த ந என வருமொழி வரின், றன ஆகும்-அத் தகர நகரங்கள் நிரனிறையானே றகர னகரங்களாம். உ-ம். கஃறீது, கன்னன்று, பொன்றீது, பொன்னன்று எனவரும். ளருக . ணளவென் புள்ளிமுன் டணவெனத் தோன்றும். இதுவும் அது. (எ) இ-ள்:-ணள என் புள்ளிகளின் - ணள என்னும் புள்ளிகளின் முன்னர் (அதிகா ரத்தினால் தகார நகாரங்கள் வரின்), ட ண எனத் தோன்றும்-அவை நிரனிறையால் டகார ணகாரங்களாய்த் தோன்றும்.