காட்சி.4) அ ம லா த த் ய ன் 103 கெள. old, அனுபவி. இப்பொழுதாவது தெரிகின்றதா, நமக் கடுக் காக காரியத்தில் பிரவேசித்தல் அபாயகரமானதென்று சிகையைப் பிசைந்தது போதும் நிறுத்தும் | உட்காரு மிப் படி, உமது மனத்தைக் கசக்கிப் பிழிகின்றேன், நியாயம் என்பது நுழைய இடங் கொடுக்குமாயின், அறிவென்பது அணுகாதபடி ஒராண்போல் கொடிய வழக்கத்தால் உமது மனம் கடினமாயிராவிட்டால், எப்படியும் அவ்வாறு இளகச் செய்வேன். நான் என்ன செய்தேன், என்னெதிரில் இவ்வாடி மரியா தையின்றி என்னைத்துவித்துக் கூச்சலிட உனக்குத் தைரிய முண்டாகும்படி? - இப்படிப்பட்ட செய்கை கற்பையே வெட்கத்தால் தலை வணங்கிக் கருத் தழியச் செய்து, நற்குணத்தையே பொய் வேடமென வழைத்து, காதலின் கவினைக் கெடுத்து கணிகை யர் உறவாக்கி, கடிமணத்திற்செய்த கட்டுறுதியெல்லாம் கவ முடுபவர்கள் வாக்கிற்படும் அசத்தியத்திற்கு இணையாக்கும் படியான பாதகத்திலும் பாதகமான காரியம் செய்தீர்! விவா கம் என்பதின் உயிர் நிலையை வேருடன் பறித்தெறித்து, நம து மதத்தின் மந்திரங்களை யெல்லாம் மடையர்கள் குளற லாகச் செய்யும் காதகத்திலும் காதகத்தைச் செய்தீர்! அதைக் கண்டு ஆகாயவாணியும் அவமானப்படுகின்றதே ! அம்மட்டோ அகிலத்தையும் பொறுக்கும்படியான இப் பூமிதேவியும் இச்செய்கையை கினைத்து யுகாந்த காலத்தில் வாடிவதங்குவதேபோல் வதங்கிய முகத்தை யுடையவளா யிருக்கின்றனளே. ! கேள. ஐயோ பீடிகையே இவ்வாறு பயங்கரமாய் இடிபோல் முழங் శ్రీLది. கின் ப்படிப்பட்ட பாதகம் நான் என்ன செய்தேன் ? குகனற அபபடி த த இதோ பாரும் இந்தப்படத்தையும், இதையும்,அச்சில் வார்த் ததுபோல் அப்படியே எழுதப்பட்ட இரண்டு சகோதர்க ளின் உருவங்கள்:பாரும், இந்த முகத்தில் என்ன களை தங்கி
பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/109
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை