கேள, அ.ெ அமலா தி க்யன் (அங்கம்-3. மேலுக்குப் பொதிந்து இன்னும் புழுக்கச் செய்யாதீர் - ஈசனே ஈசனே இவ்விஷயத்தில் என்னை மன்னிப்பீராக! இக் கடை கெட்ட கலிகாலத்தில் நற்குணமே தீமையிடம் சென்று, அதற்கு கல முண்டாக்கும்பொருட்டு, தாழ்ந்து வணங்கி நல்ல வார்த்தை பேசி, அதன் தயவைக் கேட்கும் படியிருக்கின்றது. அப்பா, அமலாகித்யா, என் விருதயத்தை இரண்டாகப் பிளந்துவிட்டனேயே ! ஆனல் அதன் கெட்ட பாகத்தைக் கிட்டெனவே யெறிந்து விட்டு, தற்பாகத்துடன் நாணயமாய் வாழும். நான் வருகின் றேன். என் சிற்றப்பன் படுக்கையைக் கிட்டாதீர், கருத்தினி லில்லாவிடினும் கற்புடையள்போல் காட்டும் மேலுக்கா வது எல்லா அறிவினையும் அழிக்கிடும் பழக்கம் என்னும் ξ%தமானது,பிசாசின் துர்க்குண மெல்லாம் உடையதாயினும் இந்த ஒரு நற்குணம் மாத்திரம் உடையதா யிருக்கின்றது. தற்குண நற்செய்கைகளைப்போல் மேலுக்குக் காட்டும் தொழில்கள், அதற்குத் தக்கபடி மேல் வேடமும் எளிதில் பூணச்செய்கிறது.-இன்றிரவு போகா திரும்; அதுவே மறு நாள் போகா திருப்பதற்கு மார்க்கத்தைச் சுலப மாக்கும், அதற் கப்புறம் அதினிலும் சுலபமாகும். வழக்கமானது மனுஷ்ய சுபாவத்தின் முத்திரையையே மாற்றி, பைசாச குணத்தை அடக்கி ஆளும், அல்லது அக்குண மிருக்கு மிடத்து அதைப் பலாத்காரமாய் அப்புறப்படுத்தினும் படுத் தும். நான் வருகின்றேன். அம்மணி, நீர் ஆசிர்வகிக்கப்பட வேண்டுமென்று விரும்பும் காலத்தில் நான் உம்மிடம் ஆசீர் வசனம் விரும்பிக் கேட்பேன். இந்த மந்திரியைப்பற்றி (பாலாேசனைக் குறிப்பிட்டு.) மன வருத்த மாகத்தா னிருக்கின் றது எனக்கு. இவரை தான் தண்டிக்க வேண்டுமென்றும், இவரால் நான் தண்டிக்கபட வேண்டு மென்றும் இங்கனம் ஈசன் திருவுள்ளங் கொண்டார். ஆகவே சிட்சை செய்பவ இவம் நானே, சிகிச்சை செய்ய வேண்டியவனும் நானே ஆக்
பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/114
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை