14 空I. ざff, ü, &Is. இடைச்சுவர் இருபுறமும் ைெரு நாயுடு எனக்குத் தெரியும், அவரும் எந்நோமும் மற்றவர்களைப்பற்றி கெடுதியாகவே பேசிக்கொண்டிருப் பார். எல்லா நாயுடுக்களும் இந்த மாதிரி தான் ! சீச்சி மடத்தனமாகப்பேசாதே அதில் என்ன கெடுதி ! வாஸ்தவத்தைத்தானே பேசினர் P நல்ல வாஸ்தவம் தான் இந்த விஷயங்களிலெல்லாம், இவர் மூக்கை துழைப்பானேன் மறுபடியும் இப்படி செய்யட்டும் பார்: ஏன் ? நீ என்ன செய்வாயோ ? கொஞ்சம் பொறு-பிறகு என்ன நடக்கிறதோ பார். (இருவரும் மேஜைகளின் மீதில் துணிகளைப் பரப்புகிரு.ர்கள்.) (வலது புறம்) (படுக்கையினின்றும் திடுக்கிட்டெழுத்து) நான் துரங்கினேனு என்ன ? என்ன பயங்கரமான கனவு ! (கிரும்பி அவனருகில் விரைந்து சென்று) என்ன ! என்ன சமாசாரம்? நான் கனவு கண்டிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். என்ன பயங்கரமானது ஒரு குன்றின் உச்சியிலிருந்து நான் கீழே விழுந்தது போல் தோன்றிற்று-அடியென் பதில்லாத மிகுந்த ஆழமான ஒர் பெரும்பள்ளத்தில் நேராக விழுந்தது போல் அப்பா அது என்ன திகிலைத் தந்தது. நான் உடம்பெல்லாம் நடுநடுங்கி எல்லாம் தீர்ந்த தென எண்ணினேன். பிறகு தரையின் பேரில் மோதி யதுபோல் ஒர் அதிர்ச்சி உண்டாச்சுது. திடுக்கிட்டெ ழுந்து-கண்விழிக்க-உடம்பெல்லாம் ஒன்றும் பின்ன மாகாததைப்பார்த்து ஆச்சரியப்பட்டேன்-அது நாகத் தின் படுகுழிபோலிருந்தது! . ஆ! ஈஸ்வாா இதெல்லாம் எதைக்குறிக்கிறதோ ?பரமேஸ்வரா ! கருணே கூரும் ! அவரைக்காப்பாற்றும் ! காப்பாற்றும் -எனக்காக (நடராஜன் பக்கம் திரும்பி)
பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/20
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை