நாடகமேடைநினைவுகள் 79 கும் போய்த் - திரும்பிவந்து - பென்ஷன் வாங்கிக்கொண்டு சுவாமி யின் அருளினுல் சஆக்கியுமாயிருக்கிறர்) இவருக்காக இக்காட கத்தில் சாரங்கன்” என்னும் நாட்டுப்புறத்து வழிப்போக்கன் பாத்திரம் எழுதினேன். எந்நேரமும் வேடிக்கையாய்ப் பேசி எல்லோரையும் சிரிக்கச் செய்யும் சக்திவாய்ந்த, எனது காலஞ் சென்ற நண்பர் ம. துரைசாமி ஐயங்காருக்காக இந்நாடகத்தில் விசித்ரசர்மா’ என்னும் விதூஷகன் பாக்கிரம் எழுதினேன். அவர் அக்காலம் யாராவது அவசரப்பட்டால், அவசரப் படேல்” என்று ஒரு விதமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்லி ஏளனம் செய்வார். இதையே அஸ்திவாரமாகக் கொண்டு, இந்நாடகத்தில் அவசாப் படேல் சீன் என்று என து கண்டர்களும் அந்நாடகத்தைப் படிப்பவர்களும் கூறும் காட் சியை எழுதி முடித்தேன். எனக்குப் பாடத் தெரியா தென் பதை இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு முன்பே நான் தெரிவிக்கிருக்கிறேன்; அன்றியும் அப்பொழுது எங்கள் சபை யில் ஒன்ருய்ப் பாடத்தக்கவர் எம். வை சங்கசாமி ஐயங்கார் என்பதையும் தெரிவித்திருச்கிறேன். நான் பாடாத குறையைப் பூர்த்தி செய்வதற்கும் அவரது சங்கீதஞானம் சபையோர் நன்ரு பனுபவிக்கும் படிக்கும், பாட்டு பாடுவதற்குப் பல சந்தர்ப்பங் களை அமைத் தி, அவருக்காக கமலா கான்’ பாத்திரத்தை எழுதலானேன். இப்படியே மற்ற அங்கத்தினர்க்கும் அவரவர் கள் நடிக்கும் சக்திக் கேற்றவாறு நாடக பாத்திரங்களை அமைத்து, எழுதினேன். விலாவதி-கலோசன’ போன்ற புதிய கதையையுடைய நாட்கங்களை நான் எழுதும் விதம் இப்படி என்று அறிய விகனது. நண்பர்கள் விரும்புவார்கள் என கினைக்கிறேன். ஒரு புதிய நாடகத்தின் கதை என் மனதில் தோற்றிய வுடன் பல தினங்கள் அக்கதையை என் மனதில் திருப்பிக் திருப்பி எனக்கு சாவகாசமிருக்கும் பொழுதெல்லாம் யோசித் துக் கொண்டிருப்பேன். அப்படி யோசித்து, ஒரு விதமாக இப்படி ஆரம்பித்து, இப்படி நடத்தி, இப்படி முடிவுக்குக் கொண்டுவா வேண்டுமென்று தீர்மானித்தவுடன், ஏ, என்னும் ஒரு அரசருக்கு, பி, என்னும் ஏக புத்திரனுண்டு, சி, என்னும் மற்ருெரு அரசருக்கு, டி, இ என்னும் இரண்டு புத்திரிகள் இருந்தாக எ தன் குமானுக்கு மணம் செய்விக்க விேண்டித் தன் மந்திரிகளுடன் ஆலோசித்து எப் என்னும் ாயபாரிபை சி அரசரிடம் அனுப்பினர், என்று இம்மாதிரி யாகக் காட்சி காட்சியாக ஒரு காகிதத்தில் குறித்துக்கொண்டே
பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/84
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை