8 11. பாயி பத் தமிழாசிரியரைப் பாடியது. 9. ஈடி லவதானி யென்மா துலனினிய சேட விசேடச் செழுமறையோன்-சீடனென கண்ணினேன் பெற்றபய வைலோர் கண்டுவக்கப் பண்ணினேன் வேள்பாரி பாட்டு. (இ-ள்.)-ஈடில் அவதானி-அவதானத்தில் ஒப்பற்றவன்; இந்தத் தமிழாசிரியன் மஹிஷமண்டலத்தை யாண்ட கிருஷ்ணராச உடையார் முன்னே கன்னடமொழியிற் சதாவதானஞ் செய்து காட்டி, அவ் வேந்தராற் பதினுயிரம் பொன்னும், கன்முத்துமாலையும்,தண்டிகையும் பரிசுபெறுதற் சிறப்பான் இங்கினம் கூறப்பட்டது. என்மாதுலன்என்ருயுடன் பிறந்தான். இனிய சேடனென்னும் நாம விசேடத்தை யுடைய செழுமையுடைய வேதியன். இனிய சேடனென்றது, அறி வோடு அமுதகுணமு முடைய சிறப்புப்பற்றி: கஞ்சுடைய சேடனை விலக்கியது. அவனுக்கு மருகனதலே யன்றிச் டேனென்று உலகு சொல்ல அவனை அடைந்தேன் எ-று. பெற்றபயன்-அவ்விதம் கண்ணுதலான் எய்திய பயன்களை; நாவலோர் கண்டுவக்க-நாவன்மை யுடைய புலவர்கள் கண்டு என்தமிழாசிரியனை உவக்கும் வண்ணம்: வேள்பாரி பாட்டுப்பண்ணினேன் என்க. நாவலோர் நன்றுந்திதும் பகுத்துணர்ந்து சொல்லவல்ல நாவன்மையுடையவர் எ-று. ஈடிலவ தானி என்பதல்ை அறிவு மேம்பாடும், சேடவிசேடன் என்பதனற் கல்விமேம்பாடும், செழுமறையோன் என்பதனால் வைதிக ஒழுக்கமேம் பாடும் கூறப்பட்டன. இவற்ருல் ஆசிரியவிலக்கணம் முற்ற சிறை தல் காட்டியவாறு. மாதுலன் என்றது. புண்ணியவயத்தாற் றேகசம் பக்க முடைமையுணர்த்தியதாம். ஆசிரியனை மாதுலன் என்றதஞற் றன்னைமருகனெனக் கொள்ளவைத்துச் சீ ட னெ ன ஆயதையே வெளிப்படுத்துரைத்தவாற்ருன், மருகதைலினும் சீடனதலே தலை சிறந்தது என்று கருதியது குறித்ததாம். பாரிபாட்டு ஆருவது பிறி தின் கிழமை, (9) செய்ங்ான்றி யறிதல். 10. இன்பாற் கரனு ரிராசராசேச்சுரச்சேய் தென்னக காதவர சேதுபதி-மன்னரிவர் வீறுமே வன்ன மிசையாதே லேன்னவே கூறுமே பாரி கொடை.
பக்கம்:Pari kathai-with commentary.pdf/106
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை