== 204 (6. ஒளவை பறியுண்ட போன்றுறந்து கொண்டு புகாவாக நல்குதிற நன்றறிந்து பாடுதுமே ம்ை. (இ-ஸ்)-பறியுண்திறம்- பறியுண்ட கூறுபாடு. மழையே இல்லை யான வறணுறு வேளையில் பாரிமகள் - வேள்பாரியின் மனயாட்டி யாகிய நல்லாள். பொன்துறந்துகொண்டு புகாவாக நல்குதிறம் - தான் திறத்தற்காகாத தாலிப் பொன்னைப்பெருக்கி அதனல் உணவுப்பொ ருள் கொண்டு பாண்மகனுக்கு உணவளித்த கூறுபாடு நாம் மேற்பாடு இம் எ. மு. நன்றறிந்து பாடுதும் என்க. என்றது, சிலர் ஈண்டைக்கு வேறு கூறுதல் குறித்தது. இங்குக் குறித்த வரலாறு : "மாரியொன் றின்றி வறந்திருந்த காலத்துப் பாரி மடமகள் பாண்மகற்கு-நீருலேயுட் பொன்றுறந்து கொண்டு புகாவாக நல்கின ளொன்றுரு முன்றிலோ வில்' என்னும் பழமொழிப் பாட்டான் அறிக. பொன்றந்துகொண்டு என்பது உம்பாடம். இதன்கட் பாரி மடமகள் என்றது. பாரியின் மடப்பத்தை யுடைய மனையாட்டியை, நீருலையுட் புகாவாக என்க. உலைநீருட் சோருக எ. று. பொன்னைத் துறந்து அரிகொண்டு அவ்வரி நீருலேயுட் சோமுனவளவிற் பாண்மகற்கு நல்கினள். புகா -உணவு; புகாக்காலை - உணவு வேளை'- என்பது தொல்காப்பியம் (களவி 16). இனி ருேலையுட் பொன்றுறந்து கொண்டு எனக் கிடந்த படியே வைத்து அடுப்பிலேற்றிய நீர் கொதி சோதற்குட் பொன்னைத் தறந்து அரிகொண்டு எனவுரைப்பினும் பொருந்தும். இதற்கு விரைவிற் சோறடுதற் பொருட்டுப் பொன்றுறந்து அரிகொள்ளு முன்னே ருேலையேற்றினள் என்று கருதிக் கொள்க; இங்கனங் கொள்ளாது நீருலேயுட் பொன்னேயே பெய்து புகாவாக நல்கிளுள் எனின் ஒன்றுரு முன்றிலோவில்' என்னும் பழமொழிக்கு அஃதியை யாமை காண்க. (92) 6. ஒளவை பறியுண்ட திறம் முற்றிற்று. இத்திறத்திற் செய்யுள் (92)
பக்கம்:Pari kathai-with commentary.pdf/301
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை