252 த மி ழ் வ ர ல ள வ மார்க்கண்டேயர்ை பாடல்கள் மயங்கிருங் கருவிய விசும்பு முககை வியங்கிய விருசுடர் கண்ணெனப் பெயரிய வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம் வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்துப் பொன்னங் திகிரி முன் சமத் துருட்டிப் பொருநர்க் காணுச் செருமிகு முன்பின் முன்ளுேர் செல்லவுஞ் செல்லா தின்னும் விலைகலப் பெண்டிரிற் பலமீக் கூற வுள்ளேன் வாழியர் யானெனப் பன்மா ணிை லமக ள ழுத காஞ்சியு முண்டென வுரைப்பரா லுணர்ந்திசிளுேரே ' (புறம். 362.) தினே : காஞ்சி துறை பெருங்காஞ்சி. இம் மார்க்கண்டேயனர் பாடல் தொல்காப்பியனுர்க்கு முற். பட்ட தலையாய ஒத்தென்பது முன்னர்க் கூறினம். இதனுல் இது தொல்காப்பியத்துக்கு முந்திய இலக்கியமாதல் தெரிய லாம். இவ்வாசிரியர் உலக நிலயாமையை உணர்ந்திசிகுேர் உரைப்பரென்று ஒருவர் க்கோ பலர்க்கோ அறிவுறுத்தியது இஃதெனக் கொள்ளத்தகும். இப்பாடலில் மயங்கிருங்கருவிய விசும்பு முக கை ” என்றது உலகு ஆதற்குப் பிற பூதங் களுடன் முதற்கட் கலந்த செழுங்கருவி யாதலையுடைய ஆகாயம் முகமாகக் கொண்டு : * கிலங் தீ ர்ேவளி விசும்போ டைந்துங் கலந்த மயக்க முலகம் ' என்பது தொல்காப்பியம் (மரபி. 89). இம்மயக்கத்திற்குப் பெருங்கருவி யாதற்றன்மை விசும்பிடத்ததாதலின் அதனே ஐம் பொறியையு முடைய முகனகக் கூறினர். இயங்கிய இருசுடர் கண்ணென என்றது நாளுமியங்கின. இரு சுடர்களாகிய ஞாயிறுக் திங்களுங் கண்கள் என்று சொல்ல என்றவாறு.
பக்கம்:Tamil varalaru.pdf/260
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை