தொல்காப்பியங் கூறும் நூல் வகைமை 317 எனப் பண்ணத்திக்கு இலக்கணங் கூறுதலான் பி சியொடு மானும் ' என்றது அடிபற்றியதாகாது பொருள் பற்றியதே யாமென்பது துணியலாம். பேராசிரியரும் பிசியொடும் ” என்ற உம்மையாற் பொருளொடு புணராப் பொய்ம் மொழி யோடும் பொருளொடு புணர்ந்த நகையோடும் (செய். 173) ஒக்கு மென்றுணர்க " என்பதன ற் பாட்டிடைக் கலந்த உரை நடை யென்பது இஃதென்று கொண்டு மேற்கூறிய அறுவகை யுள் உரையின் கண்ணடங்குமாறு பொருட் பொருத்தங் கூறுதலும் ஈண்டைக்கு நோக்கிக் கொள்க. இவற்ருற் பண்ணத்தி என்பது மேற்கூறிய ஆறனுள் பொருள் இயைபால் ஒன்ருவதோ அன்றி அவற்றின் வேருகிய இசைப்பாட்டாவதோ அறிஞரே ஆராய்ந்து கொள்வாராகுக. பேராசிரியர் ' மெய்வழக்கில்லாத புறவழக் கி&னப் பண்ணத்தியென்ப. இது எழுதும் பயிற்சியில்லாத புற உறுப்புப் பொருள்களைப் பண்ணத்தி என்ப என்பது. அவையா வன :-நாடகச் செய்யுளாகிய பாட்டுமடையும் வஞ்சிப்பாட்டும் மோதிரப்பாட்டும் கடகண்டும் முதலாயின. ' என்பர். இஃது இசைப்பாட்டாயின் இழைபு என்பதன் கண்ணும், நாடகச் செய்யுளாயின் புலன் என்பதன் கண்ணும் அடங்கும் என்று கண்டுகொள்க. இனி, ஒருவனப் பழி க் .ே த வைத செய்யுணுால்களும், மகனேத் தாய் வைவதுபோல அன்பாற் பழிகாந்து மொழியுஞ் செய்யுணுால்களும் இருந்தன என்பதும். அவற்றிற்கு முறையே செம்பொருளங்கதம், பழிகரப்பங்கதம் என்பன பெயர்கள் என் பதும் மக்கள் மனப்பாங்கின் இவையும் நிகழ்தற்கு அமயம் பல உண்டாதலால் அவற்றிற்கேற்ப அவ்வகை நால்கள் பல இருக் தன என்பதும், அங்கதக் தானே யரிறபத் தெரியிற் செம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே ' (செய்யுளி. 134) என்பதனுல் அறியப்படும். இனிச் செய்யு ாைல்களேயன்றி உரைநடை நூல்களும் நான்கு வகையாகப் பகுப்புண்டு இக்காட் டில் வழங்கின என்பது, o பாட்டிடை வைத்த ' (டிெ. 173)
பக்கம்:Tamil varalaru.pdf/325
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை