76 த மி ழ் வ ர லா வ என வந்தவிடத்துப் பரிமேலழகர், அதனுல் இக்கற்பிற் போல தலைவர் நீங்குதலறியாக களவிற் புணர்ச்சியையுடைய மகளிர் அவரொடு மாறுகொண்டு துணிக்கும் குற்றமுடையரல்லார் இப்புணர்ச்சியை வேண்டு ன்ெற பொருளிலக்கணத்தையுடைய தமிழை ஆராயாக கல் வர் களவொழுக்கத்தைக் கொள்ளமாட்டார். ' எனக் கூறிய உரையால் அறிக. இதல்ை இக்கந்தருவ வழக்கமே முன்னே மறையோர் வழக்கமாயிருந்ததென்றும், நாளடைவில் பொய்யும் வழுவுக் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணமென்றுங் கண்டு கொள்க. இவ்வுண்மையை ஆண்டுப் பேராசிரியர் கந்தருவ வழக்கம் மறையோர் ஒழுகிய நெறியாக லான், மறையோராறு என்ருன் என்பது ' எனக் கூறினர். இதலைன்றே ஆசிரியர் தொல்காப்பியனுர், இன்பமும் பொருளு மறனு மென்ருங் கன்பொடு புணர்ந்த வைத்தினை மருங்கிற் காமக் கூட்டங் காணுங் காலை மறையோர் தேஎத்து மன்ற லெட்டனுட் டுறையமை கல்யாழ்த் தனமையோ ரியல்பே ' (தொல். களவி. 1) எனச் சூத்திரம் வகுத்தார். கந்தருவமாவது ஒத்தகுலனும், குணனும், அழகும், அறிவும், பருவமும் உடையார் யாருமில் ஒரு சிறைக்கண் அன்பு மீதாரத் தாமே புணர்ந்து ஒ ழு கு ம் ஒழுக்கம். என்னே ? ஒத்த குலத்தார் தமியா யோரிடத்துத் தத்தமிற் கண்டதம் மன்பின-லுய்த்திட வந்தர மின்றிப் புணர்வ ததுவரோ கந்தருவ மென்ற கருத்து எனவும், முற்செய் வினேயது முறையா வுண்மையி னெத்த விருவரு முள்ளக நெகிழ்ந்து
பக்கம்:Tamil varalaru.pdf/84
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை