பாஞ்சாலி சபதம்/28. வாணியை வேண்டுதல்

28. வாணியை வேண்டுதல்

தெளிவுறவே அறிந்திடுதல்,
  தெளிவுதர மொழிந்திடுதல்; சிந்திப பார்க்கே
களிவளர உள்ளத்தில் ஆநந்தக் கனவுபல
  காட்டல் கண்ணீர்த்
துளிவரஉள் ளுருக்குதல்இங் கிவையெல்லாம்
  நீஅருளும் தொழில்க ளன்றோ?
ஒளிவளருந் தமிழ்வாணீ, அடியனேற்
  கிவையனைத்தும் உதவு வாயே. 154