புல்லின் இதழ்கள்/பிறவிக் கடன்


37. பிறவிக் கடன்

சைப்பவன் இசையை மறந்தாலும், கல்யாணக்காரர் கச்சேரியை மறந்தாலும், பக்கிரி தண்டலுக்கு வர மறக்கவில்லை.

மாயூரத்தில் ஹரி கச்சேரியை முடித்துக் கொண்டு, ரிடயரிங் ரூமில் தங்கியிருந்தான். அங்கிருந்து அவனுக்கு மதுரைக்குப் போயாக வேண்டும்.

ஹரிக்கு அன்று மன நிம்மதியே இல்லை. அத்தனை வருஷங்களில் அன்றுதான் ‘கல்யாணக் கச்சேரியே’ பண்ணி விட்டதாக எண்ணி வருந்தினான். கல்யாணக் கச்சேரி என்றாலும், அவன் அங்கும் உழைத்துத்தான் பாடுவான். எங்கோ ஒரு மூலையில் ரசிகன் ஒருவன் இருப்பான், அவனுக்காக என்று அநுபவித்துப் பாடத் தவற மாட்டான். ஆனால், அன்று எல்லாரும் ஹரியின் பாட்டைப் புகழ்ந்தாலும், அவனுடைய மனத்துக்குச் சமாதானமில்லை. காரணம், பட்டணத்திலிருந்து புறப்படும் போதே அவனுக்கு மன அமைதி இல்லை.

போனில் காந்தாமணியின் பெயரைக் கேட்டதும் அவன் மிகவும் குழம்பி விட்டான்.

—‘காந்தாமணி பட்டணத்திலா இருக்கிறாள்? அவள் டாக்டர் சேகருக்குத் தெரிந்தவளாகவுமா இருக்க வேண்டும்? என்றாவது ஒரு நாள் அவள் அந்த வீட்டில் வந்து நின்றால் என்ன ஆகும்? கடிதத்தைத் படித்து விட்ட கோபமே இன்னும் சுசீலாவுக்குத் தணியவில்லை. 
37. பிறவிக் கடன்

சைப்பவன் இசையை மறந்தாலும், கல்யாணக்காரர் கச்சேரியை மறந்தாலும், பக்கிரி தண்டலுக்கு வர மறக்கவில்லை.

மாயூரத்தில் ஹரி கச்சேரியை முடித்துக் கொண்டு, ரிடயரிங் ரூமில் தங்கியிருந்தான். அங்கிருந்து அவனுக்கு மதுரைக்குப் போயாக வேண்டும்.

ஹரிக்கு அன்று மன நிம்மதியே இல்லை. அத்தனை வருஷங்களில் அன்றுதான் ‘கல்யாணக் கச்சேரியே’ பண்ணி விட்டதாக எண்ணி வருந்தினான். கல்யாணக் கச்சேரி என்றாலும், அவன் அங்கும் உழைத்துத்தான் பாடுவான். எங்கோ ஒரு மூலையில் ரசிகன் ஒருவன் இருப்பான், அவனுக்காக என்று அநுபவித்துப் பாடத் தவற மாட்டான். ஆனால், அன்று எல்லாரும் ஹரியின் பாட்டைப் புகழ்ந்தாலும், அவனுடைய மனத்துக்குச் சமாதானமில்லை. காரணம், பட்டணத்திலிருந்து புறப்படும் போதே அவனுக்கு மன அமைதி இல்லை.

போனில் காந்தாமணியின் பெயரைக் கேட்டதும் அவன் மிகவும் குழம்பி விட்டான்.

—‘காந்தாமணி பட்டணத்திலா இருக்கிறாள்? அவள் டாக்டர் சேகருக்குத் தெரிந்தவளாகவுமா இருக்க வேண்டும்? என்றாவது ஒரு நாள் அவள் அந்த வீட்டில் வந்து நின்றால் என்ன ஆகும்? கடிதத்தைத் படித்து விட்ட கோபமே இன்னும் சுசீலாவுக்குத் தணியவில்லை. பிறவிக் கடன் 395

‘என்ன தம்பி இது: இப்படி ஒரே முட்டாக் கோவிச்சுக்கறே? சுவாமிமலைக்கு முந்தாநா கிருத்திகைக் குப் போனேன்.”

அம்தல்லாம் வேறே இப்போ ஆரம்பித்திருக் கிறாயா? தேர்த்திருவிழா வருஷத்துக்கு ஒரு தடவை தானே வருகிறது; இது மாதம் ஒரு கும்பல் சேருகிற நாளாயிற்றே என்றா?’

என்ன தம்பி இது, பழைய பேச்சு?’

  • நீ புதிதாகச் சொல்லு.’

தெரு வழியாப் போற போது உங்க ஐயா வூட்டிலே பெரிய பூட்டுத் தொங்கிக்கிட்டு இருந்திச்சு.’

எங்கேயாவது சிங்கப்பூருக்கோ, சிலோனுக்கோ புறப்பட்டுப் போய் விட்டோம்; மூவாயிரம் ரூபாய் போயிற்றே என்று பயந்து விட்டாயாக்கும்?’

என்ன தம்பி இன்னக்கிப் பேச்செல்லாம் ஒரே எடக் காவே பேசறே! பட்டணம் போயிருக்கிறதாச் சொன் னாங்க. நான் புறப்பட்டு வந்திட்டேன்.’

“தெருவில் போகிற உன்னைக் கூப்பிட்டு அவர்களாக நாங்கள் பட்டணம் போனதை உன்னிடம் கூறினார்: களாக்கும்?”

-இல்லே தம்பி, நான்தான் கேட்டேன்.’

  • அதற்குத்தான் இவ்வளவும் கேட்டேன்.’ ‘தப்புன்னா மன்னிச்சுடு தம்பி.’

‘தப்பும் இல்லே, மன்னிப்புமில்லே: சும்மா தமா ஷ-க்குச் சொன்னேன் மாமா, நானே உன்னைத் தேடி 

வர்ரதா இருந்தேன். நம்முடைய விஷயத்தை ஒரு வழியாக முடித்துக் கொண்டு விடுவோம். யாசகம் கேட்கிற மாதிரி நீ என் பின்னாலேயே ஒவ்வொரு தடவையும் சுற்றிக்கொண்டு இருக்கவும் வேண்டாம்: கடன் வாங்கி விட்டவனைப் போல் என்னைப் பற்றி நீ எல்லாரிடமும் விசாரித்துக் கொண்டு இருக்கவும் வேண்டாம்; அதற்கு ஒரு வழி பண்ணி விட்டேன். ‘

சரி, தம்பி.’

ஹரி பெட்டியிலிருந்து நோட்டுக் கட்டை எடுத்து பக்கிரியின் கையில் கொடுத்தான். அதில், தையல் பிரிக்கப் படாத புத்தம் புதிய பத்து ரூபாய் நோட்டுகளாக பல கட்டுகள் இருந்தன.

இதைச் சித்தியிடம் கொடு மாமா. முதலில் தங்கைகள் கல்யாணத்தை சிறப்பாக முடித்துக்கொள் மீதிப் பணத்தைக் கொண்டு குடும்பத்தை நன்றாகக் கூட இருந்து நடத்த வேண்டியது உன் பொறுப்பு, உன்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னால் முடிந்தது இவ்வளவுதான். நீ இனிமேல் என்னைத் தேடவோ, பனம் கேட்கவோ அலைய வேண்டாம். ‘

பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் கையில் வாங்கிக் கொண்ட பக்கிரி பிரமித்து நின்றான்; அவன் கண்கள் கலங்கின.

இவ்வளவும் எங்களுக்கா தம்பி?’’

“அதுதான் எல்லா விவரமும் சொன்னேனே. LD L. **

‘இத்தனைப் பணத்தை ஒருமுட்டா எப்பத் தம்பி பார்த்திருக்கோம்?”

பரவாயில்லை; பழைய தொழிலை மட்டும்....?' பிறவிக் கடன் 397

. சத்தியமா; இன்னமே அந்த வழிக்கெல்லாம் போக மாட்டேன். தம்பி இந்த ஏழைக் குடும்ப த்திலே விளக்கேத்தி வைக்கணும்னு, தெய்வம் உன்னை ஒரு காரணமாத் தான் எங்களுக்குக் காட்டியிருக்கு: அந்த தெய்வத்தோடு கருணைக்குப் பங்கம் வரும்படியா மனசாலே கூட நடத்துக்க மாட்டோம் தம்பி-என்று கரம் கூப்பியபோது பக்கிரியின் தொண்டை கரகரத்தது: கண்களிலிருந்து அவனையும் மீறிக் கண்ணிர் வழிந்தது.