மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/ஒரே மகன்

111. ஒரே மகன்

முதல் நாள் போரிலே, பகைவர் தம் யானையைக் கொன்று, தந்தை மடிந்தான், இரண்டாம் நாள் போரிலே, நிரைகவர்ந்த பகைவரை மறித்துக் கொன்று மடிந்தான் கொழுநன்!

மூன்றாம் நாளும் போர்ப் பறை ஒலித்தது...

கணவனும் தந்தையும் மடிந்த பின்னரும், தன் ஒரே மகனையும் போர்க்கு அனுப்பப் புறப்பட்டாள் அம்மறத்தி

தன் மகனுக்குப் புத்தாடை உடுத்தினாள்; அவன் தலையில் எண்ணெயிட்டு வாரினாள்;

வேல் ஒன்றை எடுத்துக் கையில் கொடுத்தாள்.

“போ, மகனே, போ...

“போர்க்களம் அழைக்கிறது, போ” என்று அனுப்பினாள்.