மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/குதிரையை தேரிலே பூட்டு

53. குதிரையைத் தேரிலே பூட்டு

பெரிய பொன் தட்டு. அதில் முத்துக்களும் நவமணிகளும் வகை வகையான ஆபரணங்களும் அடுக்கிவைக்கப் பட்டிருக்கின்றன. பேகன் அத்தட்டை எடுக்கிறான். புலவர் கையில் கொடுக்கிறான். புலவர் அரசில் கிழார் அதனை ஏற்க மறுக்கிறார்.

“பேகனே அளவிலாத செல்வம் அளிக்கிறாய். அது எனக்கு வேண்டாம்”

“புலவரே, தயங்க வேண்டாம் வேண்டியதைக் கேளுங்கள்.”

“மன்னவரே நான் விரும்பும் பரிசில் இது. உன் மனைவிக்கு நீ அருள்காட்டவில்லை. வாடி வதங்கிவிட்டாள். அவள் கூந்தலில் மறுபடியும் நறும் புகை ஊட்டுக. மலர் சூட்டுக. அவள் வருத்தம் தீர்க்க வேண்டி நேரில் குதிரையைப் பூட்டுக. நான் வேண்டும் ஒரே பரிசில் இதுதான்.”