மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/மனத்தின் வேகம்

16. மனத்தின் வேகம்


ஒரு தையற்காரர், கட்டிலில் உட்கார்ந்து தைத்துக்கொண்டிருக்கிறார்... அவர் மனம் விரைகிறது...

ஊரிலே திருவிழா வந்து விட்டது... அதனைச் சென்று காண வேண்டும். அவர் மனக்கண் முன் திருவிழாக் கூட்டம் நின்றது.

மனைவியோ, தன் தாய் வீட்டில் குழந்தை பெற்றிருக்கிறாள். அவளையும் பார்த்தாக வேண்டும்!

குழந்தை வீறிட்டு அழும் குரல் அவர் காதுகளில்கேட்டது.

தையற்காரர் உள்ளம் விம்மி யெழுந்தது. அப்புறம் என்ன?

இரு கைகளும் நூலைக் கோத்து வாங்குகின்றன. வலது கையிலுள்ள ஊசி ஏறி இறங்குவதைப் பார்க்க முடிய வில்லை... அவ்வளவு வேகம்!

சோழன் நற்கிள்ளியை வென்று வாகைகொள்ள வந்தான் ஒரு மல்லன்.

மற்போர் மன்றத்தில் போர் தொடங்கி விட்டது! மற்போர்! மற்போர்!

நற்கிள்ளியின் கைகள், தையற்காரனின் ஊசிபோல் விரைகின்றன...

அப்புறம்?- மல்லன் மண்ணைக் கவ்வினான்!