முல்லைக்காடு/சென்னையில் வீட்டு வசதி

சென்னையில் வீட்டு வசதி

ஒரு வரம் தேவை! உதவுவீர் ஐயா!
திருவரங்கப் பெருமாள் நீரே!
சென்னையில் உங்கள் சிறந்த நாமம்
தெரியாதவர்கள் ஒருவருமில்லை!
பிச்சை எடுத்துப் பிச்சை எடுத்துநான்
பெற்ற பொருளில் மிச்சம் பிடித்துத்
தேன் போட் டுண்ணத் தினையில் ஒருபடி
சேகரித்தேன்! ஆகையால் அதனை
வீட்டில் வைத்து வெளியிற் சென்று
விடிய வந்து எடுத்துக் கொள்கிறேன்.


வீட்டுக் காரன் கேட்டுத் துடித்தான்
“பாட்டுப் பாடும் பராபர வஸ்துவே!
படித்தினைக் கிடமிருந்தால்,
குடித்தனத் துக்கிடம் கொடுத்திருப்பேனே!!”