விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/சூலை 2012/11

பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/2. முருகா! முருகா!

(ராகம்-நாட்டைக்குறிஞ்சி) தாளம்-ஆதி

பல்லவி

முருகா!-முருகா!-முருகா!

சரணங்கள்

1.
வருவாய் மயில்மீ தினிலே

வடிவே லுடனே வருவாய்!

தருவாய் நலமும் தகவும் புகழும்

தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா)

2.
அடியார் பலரிங் குளரே

அவரை விடுவித் தருள்வாய்!

முடியா மறையின் முடிவே!அசுரர்

முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா)