விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/சூலை 2012/12

சிலப்பதிகாரம்
இரண்டாவது மதுரைக்காண்டம்
22.அழற்படு காதை

ஏவல் தெய்வத் தெரிமுகம் திறந்தது

காவல் தெய்வங் கடைமுகம் அடைத்தன

அரைசர் பெருமான் அடுபோர்ச் செழியன்

வளைகோல் இழுக்கத் துயிராணி கொடுத்தாங்கு

இருநில மடந்தைக்குச் செங்கோல் காட்டப் 5

புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்

அரைசு கட்டிலில் துஞ்சியது அறியாது

ஆசான் பெருங்கணி அறக்களத்து அந்தணர்

காவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு

கோயில் மாக்களும் குறுந்தொடி மகளிரும் 10