கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின்
தொகு
நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்
தொகு
ஓர் அங்கதக் காவியம்
தொகு
11. கும்பியெரிச்சல் படலம்
தொகு
(வரிகள்: 01-50)
தொகு
- ... ... .... ....
- .... .... .... .....
- தீரா வழக்கும் சென்மப் பகையும் (15)
- உற்றா ருக்குள் உண்டாக் கும்வழி
- அப்பனைப் பிள்ளை அண்டவொட் டாவழி
- பிள்ளையை அப்பன் பேணவொட் டாவழி
- புருசனை மனைவி போற்றவொட் டாவழி
- மனைவியைப் புருசன் மதிக்கவொட் டாவழி (20)
- அண்ணனைத் தம்பி அடுக்கவொட் டாவழி
- தம்பியை அண்ணன் தரிக்கவொட் டாவழி
- மருமகனை மாமன் வஞ்சித் திடுவழி
- மாமனை மருமகன் வதைத்துக் கொல்லும்வழி
- குடியை முடிக்கும் கொடிய தீவழி (25)
- அடிபிடி சண்டை அகலாப் பெருவழி
- மனிதரைப் பேயாய் மாற்றும் பாழ்வழி;
- எண்ணும்படியுடல் என்பெலாந் தெரியக்
- கண்ணும் குழிந்து கன்னமும் ஒட்டி
- வயிற்றுக் கின்றி வறுமையின் மெலிந்து (30)
- என்போல்
- நடைப்பிணம் ஆயிரம் நடக்கும் வனவழி
- வெவ்வழி, சற்றும் வெளிச்ச மிலாவழி
- இருள்வழி செல்பவர் இடறும் கல்வழி
- கூகையும் ஆந்தையும் குடிகொளும் குகைவழி (35)
- நெருஞ்சில் படர்ந்து நிரம்பிய முள்வழி
- ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வ’மென்(று)
- ஔவை சொல்மொழி அறியா மடவழி;
- பெற்ற பிதாத்தன் பிள்ளை கட்குப்
- பழியும் பாவமும் பற்றிய நோயும் (40)
- அழியாப் பொருள்களாய் அளிப்ப தன்றி
- ஒருகா சேனும் உதவாச் சதிவழி!
- இது,
- மக்கள் வழியென மதிக்க வெண்ணாது!
- மருமக் கள்வழி யாகவும் மாட்டாது!
- இருவழி கட்கும் இடைவழி யாய்வரும்
- வழியிது போல்இவ் வையகத்(து) எங்கும்
- உண்டோ? அம்மா! உண்டோ? அம்மா!
- வீடு விற்று விளைநிலம் விற்று,
- ஆடு மாடுகள் அனைத்தும் விற்று, (50)
(வரிகள்: 51-104)
தொகு
- குடிக்கும் செம்பு குழியலும் விற்று
- பாத்திரம் பண்டம் பலவும் விற்று
- தண்டை பாத சரங்களும் விற்று
- காப்புக் காறை கடுக்கனும் விற்று
- பதக்கம் சிற்றுருப் பாம்படம் விற்று (55)
- தாலியை விற்றுப் பீலியை விற்று,
- வக்கீல் சாமி மலரடி களிலும்
- குமஸ்தா மாடன் கோவில் களிலும்
- காட்சித் தெய்வச் சன்னிதி களிலும்
- பழந்தேங் காய்கள் படைப்புகள் வைத்தும் (60)
- வேண்டிய புகையிலை வெற்றிலை வைத்தும்
- விதம்விதம் வேட்டிகள் முண்டுகள் வைத்தும்
- சேலை தாவணி சீட்டிகள் வைத்தும்,
- இன்னும் பலவாறு இவர்க ளிடத்து
- முன்னம் கொண்ட கடன்களை முற்றும் (65)
- குறைகூ றாது கொடுத்தும் முடிவில்
- வழக்கை இழந்து வாய்மண் ணாகி
- உண்ண உணவும் உடுக்கத் துணியும்
- இல்லா தாகி, யாவரும் கைவிட
- முற்றத் துறந்த முனிபுங் கவர்போல் (70)
- பக்கப் பழுத்த பட்டினத் திடிகள்போல்
- “உற்றார் சதமல, ஊரார் சதமல,
- பெண்டிர் சதமல, பிள்ளையும் சதமல,
- இப்பே ருலகில் யாரும் சதமல”
- என்று கூறி இனித்தோ வாளைக் (75)
- கஞ்சிப் புரையே கதியெனச் சென்று
- பக்க மெங்கும் பரந்து சுற்றிச்
- சுவான தேவர் துதித்து நிற்க
- அந்தரம் எங்கும் பந்தர் போட்டுக்
- காக்கைபா டினியர் கானம் பாட, (80)
- பழஅடி யார்கள் பலரொடும் கூடி
- வெட்ட வெளியில் வெண்சோ றுண்டு,
- பட்டைச் சோறும் பாற்சோ றாக
- ஒட்டுத் திண்ணை உறங்கிட மாக
- இருப்பதை நோக்கி இரங்கி இரங்கி (85)
- இழந்த்தை எண்ணி ஏங்கி ஏங்கி,
- அழுபவர் கண்ணீர் ஆறாய்ப் போம்வழி-
- ஐயோ, இவ்வழி ஆகாது ஆகாது!
- ஆடுகள் மாடுகட்கு ஆகும் இவ்வழி-
- மனிதர் செல்லும் வழியா யிடுமோ? (90)
- ... ... .... .... .... ....
- .... ... .... .... .... ....
- கற்றவர் உளரோ? கற்றவர் உளரோ?
- பெற்ற மக்களைப் பேணி வளர்த்திடாக்
- கற்றவர் உளரோ! கற்றவர் உளரோ! (95)
- அறிஞரும் உளரோ! அறிஞரும் உளரோ!
- வறுமைக்கு இரையாய் மக்களை விட்டிடும்
- அறிஞரும் உளரோ! அறிஞரும் உளரோ!!
- நீதியும் உளதோ! நீதியும் உளதோ!
- மாதர் கண்ணீர் மாறா நிலத்தில் (100)
- நீதியும் உளதோ! நீதியும் உளதோ!!
- தெய்வமும் உளதோ! தெய்வமும் உளதோ!
- பொய்வழிப் பொருளைப் போக்கும்இந் நிலத்தில்
- தெய்வமும் உளதோ! தெய்வமும் உளதோ!! (104)
- காரணவன்...தெப் போகல்யாணம் செய்வதெப்போ
- வாரமிகு மக்களொடு வாழ்வதெப்போ- தாரணியில்
- எல்லா ரையும்போல் இருப்பதெப்போ ....
- .... ..... ..... ..... ..... ..... நாம்.
பதினொன்றாவது, கும்பியெரிச்சல் படலம் முற்றும்
தொகு
- நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்
- மருமக்கள்வழி மான்மியம் - கவிமணி
- 1.குலமுறை கிளத்துப் படலம்
- 2.மாமி அரசியற் படலம்
- 3.கேலிப் படலம்
- 4.கடலாடு படலம்
- 5.பரிகலப் படலம்
- 6.நாகாஸ்திரப் படலம்
- 7.கருடாஸ்திரப் படலம்
- 8.வாழ்த்துப் படலம்
- 9.கோடேறிக் குடிமுடித்த படலம்
- 10.யாத்திரைப் படலம்