அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/இலட்சுமிக்கு நாராயணர் பதிலுரைத்தல்

இலட்சுமிக்கு நாராயணர் பதிலுரைத்தல்
நன்றுநன்று என்று நாராயணர் உரைப்பார்
சக்தி சிவமும் தாம் உதித்த காலமதில்
எத்திசையும் நாமள் இருபேர் பிறப்பதிலும்
ருத்திரரும் மயேசுரரும் உதித்த நாளதிலும்
பக்தியுள்ள தேவர் பரநாதர் நாளதிலும்
வானோர் தெய்வார் மறைவேத சத்திரமும்
ஈனமாய்ச் சண்டன் இவன் பிறந்த நாளதிலும்
ஆதித்தன் வாயு அண்டபிண்டம் தோன்றியபின்
ஈது உதித்த காலம் இராச்சியம் ஒன்று உண்டு கண்டாய்
அவ்வுகத்தைக் கண்டு ஆதிபிரமா மகிழ்ந்து
இவ்வுகத்து நாமம் என்ன இடுவோம் என்று
மாலும் பிரமவும் மாயாது இருப்போனும்
ஆலோசித்து ஆகமத்தைத் தான்பார்த்து
நீடியயுகம் எனவே நியமித்து உறுதி கொண்டு
தேடிய முப்பொருளும் செப்பினார்காண் அம்மானை