அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/சக்திதேவியின் சாபம் தீர்த்தல்

சக்திதேவியின் சாபம் தீர்த்தல்
ஆதியேனாதி ஆதித்திருவுளமே
சோதியே என்னுடைய சூல்சாபந் தீரும்
என்று வுமையாள் எடுத்து மிகவுரைக்க
நன்றெனவே யந்த நாராயணருரைப்பார்
சாபமது தீர சாந்தி மிக வளர்த்தார்
தாபமுடன் மாயன் சாந்தியது வளர்க்க
அம்மை உமையாளின் ஆனசாபந் தீர்ந்து
செம்மையுடன் கயிலை சென்றனர் காணம்மானை
சத்தி சாபந்தீர்த்துத் தவலோகமே யனுப்பி
தத்தியாய்ச் சூரனையுஞ் சங்காரஞ் செய்து அந்த
சூரனூர் தன்னைத் தீயோன் தனக்களித்து
வீரசூரன்றனையும் மேலுமந்த யுகத்தில்
பார இரணியனாய்ப் படைத்தார் காணம்மானை