அண்ணா சில நினைவுகள்/முதலமைச்சருக்கு முதல் விருந்து

முதலமைச்சருக்கு முதல் விருந்து


“காங்கிரசைப் பூண்டோடு அழிப்பதுதான் இனி என். வேலை. எந்தக் காங்கிரசை இந்தத் தமிழ் நாட்டில் வளர்த் தேனோ, அந்தக் காங்கிரசை இந்தத் தமிழ் நாட்டில், வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தி ஒழிக்கப் பாடுபடுவேன். வருகிறேன்! என்று காஞ்சி மண்ணில் 1925-ல் கர்ச்சித்துத், தடியை ஓங்கித் தரையில் தட்டிச் சூளுரைத் தார் தந்தை பெரியார். அந்தக் காஞ்சித் தளபதியோ, தந்தையின் கொள்கைச் செல்வங்களின் வாரிசல்லவா அதனால், தந்தையின் சூளுரையைத் தனயன் மெய்ப்படுத்துவேன் என வெஞ்சினங் கூறித் தனிவியூகம் அமைத்துத், தளராது போரிட்டு, 1967-ல் காங்கிரசைப் புறங்கண்டு விட்டாரே!

6. 3. 1967 அன்று அண்ணா பதவி ஏற்பதாக அறிவிப்பு வந்து விட்டது. ஆர். எம். எஸ். ஊழியர்களின் நீங்காத் துணைவரல்லவா? நான்கு மாதங்களுக்கு முன்புதானே மருத்துவமனையில் இருந்து, யாருக்கும் தெரியாமல் புறப்பட்டுக், காய்ச்சலின் உச்சக்கட்டத்திலும், காரில் ஏறிச் சென்னையிலிருந்து சோலையார்பேட்டை வந்து திரும்பி னார். வேறு எப்போதும் அண்ணா, இவ்வாறு உடல் நலிவு ஏற்பட்டபோது அய்யோ, ஒத்துக்கொண்டோமே, போய்த் திரவேண்டுமே என்று போனதில்லையே!

சரி. அண்ணா வெற்றியை நாம் எப்படிக் கொண்டாடு வது? ஒரு விஷயத்தில் நாம் முந்திக் கொள்வோமே என்று. என் மாநில சங்கத் துணைத்தலைவர் திருச்சி எஸ்.ஏ. ரகீம், ம்ாநிலச் செயலாளர் C. நம்மாழ்வார் ஆகியோருடன் துங்கம்பாக்கம் இல்லம் சென்றேன். அன்று 5.3.67. கையில் என்னிடம் ஒரு பாக்கெட் மில்க் அல்வா இருந்தது. நேரே அண்ணாவிடம் சென்று “அண்ணா வாயைத் திறங்க” என்றேன். திறந்தார். “அண்ணாந்துகிங்க அண்ணா!” அண்ணாந்தார். கைநிறைய அல்வாவை எடுத்து வாயில் போட்டேன். “அட இது எதுக்குய்யா” என்று சொல்லிச் சிறிது மென்றவர்-மெல்ல விழுங்கி விட்டு “அடடே, நல்லாவேயிருக்கிறதே! இன்னும் கொஞ்சம் போடுய்யா!” எனச் சொல்லிய வண்ணம் வாயை அகல விரித்தார். எனக்கென்ன தயக்கம்! கொஞ்சங் கொஞ்சமாக வாயில் இட்டேன். ரசித்துத் தின்றார். அருகிலிருந்த நடிப்பிசைப் புலவர் கே ஆர். ராமசாமிக்கு மிச்சமிருந்த அல்வாவில் சிறு அளவு தந்தேன்.

“இது அச்சாரந்தான். அடுத்தபடியா பெரிய சங்கதி இருக்கு எங்க RMS Union சார்பா ஒங்களுக்கு ஒரு விருந்து கொடுக்கணும். அதுக்குத் தேதி, நேரம் வேனும் இப்பவே சொல்லிடுங்க!” என வற்புறுத்தினேன்.

“இப்ப எங்கய்யா விருந்துக்கெல்லாம் நேரம் இருக்கப் போகுது?”

“நீங்க சட்டப்படி நாளைக்குத்தான் முதலமைச்சர், அதனாலெ, எங்க அண்ணாவா இருக்கும்போதே சம்மதம் சொல்லிடுங்க.”

“சரிய்யா. 14.ந்தேதி வச்சிக்க. ராத்திரியாயிருந்தா வம்பிருக்காது. எங்கே? மெட்ராஸ்லதானே?”

“ஆமாண்ணா ஒங்களுக்கு அதிகத் தொந்தரவு இல்லாமெப் பாத்துக்கிறேன்! வருகிறோம்!“

இசைவு கிடைத்தது. யாருக்கு வரய்க்கும் இந்த நற்பேறு! தலைப்பிள்ளை பெற்ற தாயின் மகிழ்ச்சியும் இதற்கு ஈடோ? முதல் விருந்து எங்கள் விருத்தில்லவா! ஆகா! ஆகா துள்ளிக் குதிக்காத குறைதான்!

மூவரும் தனியே அமர்ந்து சிந்தித்தோம். அமைதியாக விருந்து நடைபெற வேண்டும். ஒட்டலில் அவ்வளவு நாகரிகமாகாது. யாருடைய வீட்டிலாவது செய்தால்தான், Privacy இருக்கும். கழகத் தலைவர்கள் வீட்டில் செய்வது முறையல்ல...ம்...நண்பர் ரகீம் கைகுலுக்கினார். “இங்கே எங்க மாமா வீடு ஒண்னு இருக்குதுகக. அநேகமா, அது இப்ப காலியாதான் இருக்கும். இங்கே தான், ஜெமினி ஸ்டுடியோவுக்குப் பின்னாலே. வாங்க, இப்பவே போய்ப் பார்ப்போம்! எனவே, புறப்பட்டோம். தனியான சிறிய பங்கள்ா. போதும் அருமை, அருமை” என்றேன். திருச்சியில் ஒய்வுபெற்றுத் தங்கியிருந்த எங்கள் தலைவர் ஏ. பி. துளசிராம் அவர்களையும் அழைத்துக் கொண்டோம். RMS ஊழியர்களில் முக்கியமானவர்கள் பங்கு பெற்றனர். கலைஞர் இல்லாமலா? அவரும் வந்தார் விருந்துக்கு!

ரகீமின் நேரடிப் பார்வையில் நெய் மணக்கும் மட்டன் பிரியானி, தக்க பக்கவாத்தியங்களுடன் பிரமாதம். நமது இயக்கத்தின் சிறந்த தொண்டரும், புகைப்பட நிபுண்ருமான நண்பர் சாமுவெல் அன்று எடுத்த படங்கள் என்னிடம் உள்ளன. அண்ணா எவ்வித இடையூறுமின்றிக் குறைந்த துர்ரமே வந்து செல்ல வேண்டியிருந்தது. கலைஞரும் இணைந்து சிறப்பித்தார். எங்கள் ஆனந்தத் துக்கும் அளவிண்டோ?

எந்த விளம்பரமும் இல்லாமல்தான் இந்த விருந்தை நடத்தினோம். ஆனால் அஞ்சல் துறையாயிற்றே-செய்தி பரவாமல் போகுமா? அனைத்து இந்திய மட்டத்தில், தொழிற்சங்க ரீதியாக, எங்களுக்கு எதிரிகள் வலது கம்யூனிஸ்ட் அனுதாபிகளான எங்கள் ஊழியர்கள். ஆனால் இடது கம்யூனிஸ்ட் அனுதாபிகள், என்றும் எங்கள் கூட்டணி. தி.மு.க. அனுதாபிகளின் கைதான் தமிழகத்தில் உயர்வு.

அஞ்சல் துறைத் தோழர்களான G. லட்சுமணன் C. M. பரிபூரணம், கடலூர் N. C. அம்பலவாணன், திருச்சி மாணிக்கவாசகம், தொலைபேசித்துறை கண்க சொரூபன், முத்துராக்கப்பன் ஆகிய பல அருமை நண்பர்கள் என்னிடம் சண்டைக்கே வந்து விட்டனர். அண்ணா எங்களுக்கும் சொந்தமில்லையா என்று! இண்ங்குவது தவிர இவர்களோடு பிணங்க முடியுமா?

சரியென்று துணிந்து, அண்ணாவிடம் அடுத்த மாதமே. இதற்காகச் சென்று, விவரம் சொன்னேன். அருகில் - அப்போது பேராசிரியர் மா.கி. தசரதன், மாயூரம் தொகுதி. நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரவேலு இருந்தனர். “விருந்தை என் வீட்டில் வைத்துக்கொள்ளலாம் கவிஞர்” என்றார் தசரதன். அவர் சுத்த சைவம். பயமில்லை யல்லவா? அண்ணா ஒத்துக்கொண்டார்கள் வருவதற்கு.

இந்த விருந்தில் பிரியாணியில்லை. எல்லாமே மீன், மீன், மீன். பல்வகைத் தயாரிப்புகள். “எங்கே கருணா னந்தத்தைக் காணோம்” என்று அண்ணா வேடிக்கை யாகக் கேட்க, “அவரை மீன் மறைத்துக் கொண்டிருக்கிறது” என்று கலைஞர் கேலியாகப் பதில் கூற, நண்பர் சுபாசுந்தரம் ‘கிளிக்’ செய்துகொண்டே யிருந்தார்.

கடலூர் அம்பலவாணன் “எங்களுக்கும் உங்களுக்கும். தொடர்பு நெருக்கமாக ஏற்பட, ஏதாவது ஒர் அமைப்பு வேண்டும், அண்ணா!” என்று கோரினார். அண்ணா என் பக்கம் கையைக் காட்டி, “இதோ, இவர் ஒருவர் போதுமே!” என உறுதியுடன் பதில் உர்ைத்தார்கள். அனைவர்க்கும் மகிழ்ச்சியே!