அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஆய கலைகளைக் கற்ற அன்னி

2. ஆயகலைகள் கற்ற அன்னி!


தத்தை இல்லாமல் வெறிச்சோடிக் கொண்டிருந்த வீடு: கண்ணீரும் கம்பலையுமாக அழுது கொண்டே இருந்த வீடு, இரண்டையும் கண்டு அன்னி முகத்தில் ஏதோ ஒர் சோகமேகம் படர்ந்து நகர்வது போல அவளது எண்ணங்கள் மாறி மாறி வந்து மோதின!


டாக்டரான வில்லியம் பிறகு வியாபாரமும் செய்து ரதோ வாழ்ந்து வந்தார்! போதிய செல்வம் ஒன்றையும் தனக்கேன சேர்த்து வைக்கும் சிந்தனையற்று வாழ்ந்துவந்து விட்டார்.


தனது மகன் ஹாரியையாவது. அந்த வணிகத்தில் ஈடுபடுத்தி வழிகாட்டினாரா என்றால், அதையும் தவறி வீட்டார்.


மகன் ஹாரி, வழக்குரைஞராக வேண்டும், புகழ்பெற வேண்டும், பொருள் ஈட்ட வேண்டும்; பெயரும் செல்வாக்கும் ஆவனைத் தாலாட்ட வேண்டும் என்ற ஆசை ஊஞ்சலிலே சாகும் வரை ஆடிவிட்டாரே ஒழிய, வாழ்க்கையை அவனுக்குக் கற்றுக் கொடுக்காமல் போய்விட்டார்.


அவர் உயிரோடு இருந்தபோதும் இதே ஆசையைத் தனது மனையிடமும் கூறி, இந்த அவரது அவாவைத் தவறாது ஈடேற்ற வேண்டும் கேட்டுக் கொண்டார்! எமிலியும் சரி என்றே வாக்கும் தந்து விட்டார். கணவரின் அந்த ஆசையை நிறைவேற்ற வழி என்ன என்று யோசித்துக் கொண்டே இருந்தார் எமிலி!


அப்போது எமிலியின் உறவினர்களான சர் வில்லியம் உட், வெஸ்டரின் உன் என்ற இருவர் அவர் வீட்டுக்கு வருகை தந்தார்கள். எப்படியும் எமிலி குடும்பம் முன்னேற வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள்!


உயர்திலைப் பள்ளிக் கல்விவரை ஹாரியைப் படிக்க வைத்து, பிறகு வணிகம் நடத்துவதற்குரிய முதலீட்டுப்பணமும் கொடுப்பதாகவும் கூறினார்கள்.


இவர்களது. உதவியை எமிலி ஒப்புக்கொள்ளவில்லை. தனது கணவரின் ஆசையை அவர்களிடம் கூறி, அதனை நிறைவேற்றவே திட்டமிட்டு வருகிறேன் என்றார் எமவி.


அவளிடம் மகனைப் படிக்க வைக்கும் அளவிற்குப் பணம் இல்லை; என்றாலும், படிக்கவைத்தே தீருவேன் என்ற மன உறுதி ஒன்று போதாதா? இறுதியில் ஓர் முடிவுக்கு வந்தாள் எமிலி என்ன முடிவு அது?


ஹாரோ என்ற குன்றின் மீது ஹாரோ என்ற உயர் நிலைப்பள்ளி உள்ளது. அங்கே தனது இரு மக்களையும் அழைத்துச் சென்று அந்தப் பள்ளியிலே சேர்த்துவிடவும், ஒரு வீட்டடை வாடகைக்கு எடுத்து அதிலே தங்கிக் கொண்டும், ஹாரோ பள்ளி மாணவர்களுக்காக ஒர் உணவு விடுதி நடத்தி அந்த வருவாயில் மக்களைப் படிக்க வைக்க முடியும் என்ற முடிவுக்கு எமிலி வந்தார். அதன்படி பிள்னைகனைப் பள்ளியில் சேர்த்தார்; உணவு விடுதியும் நானாவட்டத்தில் நன்றாகவே நடைபெற்று வந்தது. அதற்கு அந்தப் பள்ளித் தலைமையாசிரியர் அவளது கஷ்ட நிலைகளைக் கண்டு உதவியும் செய்தார்.


கல்வியில் ஹாரி சிறந்து விளங்கினார்: எமிலிக்கும் அதைக் கண்டு மகிழ்ச்சி; ஆன்னியும் தன்கு படித்தாள்! எமிலி உறவினர்களாக வந்தவர்களும் தங்கனால் முடித்த உதவிகளைத் தவறாமல் செய்து வந்தார்கள்.


தாயார் எமிலி அன்னிக்குரிய எல்லா மத ஒமுக்கங்களையும் கற்றுக் கொடுத்தார். இவற்றுள் அன்னி இயேசு மீது காட்டிய அளவிலா அன்பும்-பற்றும் குறிப்பிடலாம்! ஒரே பெண் அல்லவா அன்னி அதனால் மகள் மீதும் அதிக ஆசை வைத்து வளர்த்து வந்தார் எமிலி,

அன்னி அன்றாடம் அடுத்த வீட்டுக்குப் போய் ஆடிப் பாடி மகிழ்வார்; அப்படி ஒருநாள் ஆடிப்பாடி ஓடிவந்த அன்னியின் அழகு நிகழ்ச்சியை, அந்த வீட்டிற்குப் புதிதாக வருகை தந்திருந்த விருந்தாளி அம்மையார் பார்த்து ரசித்தார்:


மான்குட்டி போல துள்ளிவந்த காட்சியினையும், அன்னியின் அழகும், உடற்பொலிவும், அறிவொளி படர்ந்த முகவழகும், இனிமையான, அமைதியான பேச்சழகும், அந்த அம்மையாரை வெகுவாகக் கவர்ந்து விட்டன.


அன்னியை அன்போடு அழைத்த அவர், தன் மடிமீது அமரவைத்துக் கொண்டு ஏதோ பேசுமாறு சில கேள்விகளைக் கேட்டார். இனிமையாக, அடக்கமாக, அமைதியாக, மகிழ்வு ததும்ப அன்னி பதில் கூறிய பாங்கு விருந்தாளி அம்மாவுக்கு மேலும் அன்பைப் பெருக்கிற்று.


அந்த அம்மையார் மறுதாள் அன்னி வீட்டிற்குள் வத்தார்! அன்னி உட்பட எமிலியும் சேர்ந்து அந்த அம்மாவை வரவேற்று உபசரித்தார்கள்.


விருத்தானி அம்மா. எமிலியை நோக்கி, அன்னிக்குரிய கல்வி, உணவு, உடை போன்ற செலவுகளூச் செய்து தான் வளர்த்து வருகிறேன். எனது சகோதரன் மகள் என்னுடன் தான் இருக்கிறாள். அவளுக்குத் துணையாக இருக்கும். நீங்கள் மனமார சம்மதித்து உத்திரவு தந்தால் என்னோடு அழைத்துப் போகிறேன், என்று கேட்டார்.


எமிலி அந்த முடிவை ஏற்கவில்லை. அப்போதும் அந்த அம்மையார்: அன்னியை விடுமுறைகள் வரும்போதெல்லாம் உங்களது வீட்டுக்கு அனுப்பி விடுகிறேன் அவனது கல்வி முன்னேற்றத்துக்கு நான் பொறுப்பு என்றார்.

எமிலி சிறிது நேரம் அமைதியாகச் சிந்தித்தார். நாம் மறுத்தக் கூறியும் கூட இந்த விருந்தாளி அம்மா ஏன் இள்வளவு விடாட்பிடியாக நம்மை வற்புறுத்துகிறார் என்று யோசித்தார்!


அன்னி ஒரு பெண். நாம் மாணவர்கள் பள்ளியிலே உணவு விடுதி நடத்துகிறோம். அது நல்லதல்ல. அன்னிக்கு கல்வி அளிப்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. ஆகையால், இந்த அம்மாவுடன் அனுப்புவதுதான் மிகவும் நல்லது; பொறுப்பானது என்று அந்த அம்மையாரைப் பார்த்து, சரி அம்மா அழைத்துச்செல்லுங்கள் என்றார். அன்னி, அம்மாவின் அன்புச் சொல்லுக்கு ஆட்பட்டு அந்தம்மாவுடன் சென்றார்.


அன்னியை உடன் அழைத்துச் சென்ற அந்த அம்மையாரின் பெயரி மிஸ் மேரியட். அவர் செல்வம் அதிகமாக உள்ள ஒரு சீமாட்டி கேப்டன் மேரியட் என்ற புகழ் பெற்ற ஒரு நாவலாசிரியரின் தங்கை, திருமணமாகாதவர்.


மிஸ் மேரியட் பெருந்தன்மை மிக்கவர்; நல்ல பண்பாளர்: கருணை உள்ளம் கொண்டவர்; அவருடைய ஆண்ணனின் மகள் ஒன்றையும் அவர் அன்னியைப் போல் வளர்த்து வருகிறார்!


அன்னிக்கும், அண்ணன் மகளுக்கும் சேர்த்து கல்வியளிப்பதே மிஸ் திட்டம் ஒரு குழந்தைக்கும் பதிலாக இருவர் இருந்தால், அவர்கள் சேர்ந்து படிக்கவும் உண்ணவும், உறங்கவும், விளையாடவும் வசதியாக இருக்கும் என்பதால் அன்னியை அழைத்து வந்தார்:


அன்ன சத்திரமோ, தானமோ ஆயிரம் செய்வதை விட, ஒரு குழந்தைக்குக் கல்வி கற்பிப்பது சிறந்த ஓர் அறம் என்பதனை அவர்புரிந்தவர். அதனால், அன்னியை விடாப்பீடியாகத் தன்னுடன் அழைத்துக்கொண்டு வந்தார்

இருவருக்கும் மிஸ் மேரியட்டே கல்வி போதித்தார், சிறு குழந்தைகளுக்கு இயற்கையோடு இணைந்த வழியிலும், எளிய முறையிலும் கல்வி கற்பிப்பதே சிறந்த வழி என்ற கருத்துடையவர் அவர். அதனால், புதிய முறையிலேயே கல்வியைப் போதித்தார் இருவருக்கும். இதனால் அன்னிக்கு மேரியட் கல்வி புகட்டும் முறை அவளுக்கு எளிமையாகவும்-சுலபமாகவும் இருந்ததால், தொடர்பாக அவரிடம் கல்வி கற்றார்கள் ஆக்குழந்தைகள்.


அன்னி மேரியட்டிடம் சுமார் ஏழாண்டுகள் தங்கிப் படித்தார் விடுமுறைகள் வரும்போதெல்லாம் தனது தாயாரையும், தமையனையும் பார்க்க அன்னி ஹாரோ சென்று விடுவாள். மற்ற நாட்களில் மேரியட்டுடன் தங்கியே கல்வி கற்றாள்! அதற்கேற்றார் போல எந்த வசதிக் குறைவையும் மேரியட் ஏற்படுத்தியதில்லை.


அன்னியையும், மற்றும் இரு பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு உல்லாசப் பயணம் செல்வார். இதனால் குழந்தைகள் பார்க்க வேண்டிய காட்சிகளை நேரில் பார்த்துப் பரவசப்படுவார்கள். கல்வியிலே முழுமை பெற முடியும் என்பது மேரியட் கொள்கை.


இக் காலத்துப் பள்ளிகளிலும் இன்றும் மாணவர்கள் எக்ஸ்கர்ஷன் போவதைப் பார்க்கிறோம் இல்லையா அதனைப் போல:


ஜேர்மனிக்கு கேரியட் அழைத்துச் செல்லும் போது அன்னிக்கு வயது பதினான்கு இருக்கக்கூடும். அந்த வயதில் உல்லாசப் பயணம் சென்றால் பார்க்கும் காட்சிகள் எல்லாம் மனத்தில் பகமரத்தாணி போல பதியும் அல்லவா? ஜெர்மன் நாட்டில் மூன்று மாதங்கள் தங்கி பல இடங்கனை நால்வரும் பார்த்தார்கள். அந்த பயணத்தால்


குழந்தைகள் பெற்ற பயன்கள் மிக அதிகமாக இருத்தன,

அந்த நேரத்தில் பள்ளி விடுமுறைக் காலம் வந்தது. ஹாரோவுக்குச் சென்று தனது தாயுடனும், அண்ணனுடன் தங்கினாள் அன்னி. விடுமுறை கழிந்த்தும் மேரிடயட்டிடம் வந்த போது மேரியட் அப்போது பாரிஸ் நகரில் தங்கி இருந்தார். அன்னியும் அவருடன் பாரிசில் தங்கினார்.


கல்வி கற்ற நேரம் போக, மிகுதியான நேரத்தில் பாரிசில் வரலாற்றுப் புகழ்மிக்க இடங்களை எல்லாம் மேரியட்டுடன் சென்று அன்னியும் கண்டார். கலைக் கூடங்கள், மாதா கோயில்கள், சோலைகள் போன்ற இடங்களுக்கும் அவர்கள் சென்றார்கள்.


இதனால் குழந்தைகள் உலக அறிவு, வரலாற்று அறிவு பெற்றார்கள். இவ்வாறு ஏழு மாதங்கள் பாரிஸ் நகரத்தையும், வேறு சில இடங்களையும் பார்த்துவிட்டு, மீண்டும் லண்டன் மாநகரம் திரும்பினார்கள்.


ஏட்டுக் கல்வி மட்டுமே ஒரு குழந்தைக்கு அறிவு வளர்ச்சியை ஊட்டிவிடாது என்பது மேரியட் கருத்து. உடற்பயிற்சியிலும், உள்ளத்தின் வளர்ச்சியிலும் குழந்தைகளுக்கு கவனமளிக்கும் பயிற்சிகளைப் பெறச் செய்தல் வேண்டும். அதற்கான உதவிகளை மேரியட் குழந்தைகளுக்குச் செய்தார்.


குழந்தைகள் நீண்ட தூரம் நடந்து உடலுறம் பெறவும், குதிரைச் சவாரி செய்யவும், நிலா விருந்துகளுக்கு ஏற்பாடுகள் செய்தும் குழந்தைகளை மகிழச் செய்தார். இதனால் குழந்தைகள் குறையே இல்லாமல் கல்வி கற்றார்கள். இத்தகைய கல்வியை அன்னி பெற்றது. அவளது நல்ல நேரமே என்று அவள் தாயார் எமிலி அடிக்கடி கர்த்தரிடம் முறையிட்டுக் கூறுவார்.


அதே நேரத்தில் மிஸ் மேரியட் இடத்தில் மிகவும் கராறான சம்பவங்களும் உண்டு. அந்த கண்டிப்பு மத விவகாரங்களில் மட்டும்தான்; பிற அனைத்திலும் சர்வ சாதாரணமாகவே பழகுவார்.


கிறிஸ்துவத்தில் மேரியட் மிகவும் ஆழ்ந்த பற்றுடையவர்; அவர் எப்படியோ இறை விஷயத்தில், அப்படியே அவரைச் சார்ந்தவர்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர். அந்த அம்மையார் இறை ஒழுக்கம் என்னவோ, அதே சீலங்களே அன்னிக்கும், அண்ணன் மகளுக்கும் போதித்தார்.


வேறு என்ன கண்டிப்பு: காலை மாலை மாதா கோயில் தொழுகைக்குப்போக வேண்டும்: கணிந்துருகிக் கர்த்தரைத் தொழல் வேண்டும். இவற்றில் ஒழுங்காக நடக்க வேண்டும் என்பதுதான் மேரியட்டின் கராரும். கண்டிப்புமாகும். இது கூடவா ஒழுகக்கூடாது?


விளையும் பயிர் முளையிலே என்பார்களே, அதனை போல மேரியட் போட்ட இறைவிதைதான் அன்னிக்குள் உருவான மதப்பற்றும், இயேசுநாதர் அன்பும் என்றால் மிகையாகா.


குழந்தைகள் ஒவ்வொன்றும் சுயமாக வாழ்வதற்குப் பயிற்சி பெறல் வேண்டும் என்பது மேரியட் கருத்து. அதற்குரிய பயிற்சிகளையும் அன்னி பெற்றார். இந்த பயிற்சியின் விடா முயற்சிதான் பிற்காலத்தில் அன்னிக்கு உதவியாக இருந்தது மட்டுமல்ல; போதிய தைரியத்தையும் தாராளமாகக் கொடுத்தது எனலாம்.


பதினாறு வயது முடிந்த பாவையானாள் அன்னி; வீடு திரும்பும் நேரமும் வந்தது: கல்விப் பயிற்சியும் முடிந்தது: அப்போது மேரியட் அன்னியிடம்:


"அன்னி குழந்தையாக என்னுடின் வந்தாய் இப்போது பதினாறு வயது பெண்ணாகப் போகிறாய்! என் னால் உனக்கு என்னென்ன செய்ய முடியுமோ, அவற்தை எல்லாம் செய்து முடித்து விட்டேன் இனி உனது வாழ்க்கை உன்னுடைய கையிலேதான் இருக்கிறது', என்று கூறியது தான் தாமதம்:


அன்னி மெய்மறந்து, உணர்ச்சி மேலிட்டு ஓவெனக் கதறினாள்: ஒரே அழுகை வளர்ப்புப் பாசம் முகமெலாம் கண்ணீரும்; வியர்வையும் முத்துக்களாகின: மேரியட் அன்னிக்கு ஆறுதல் கூறினாள்; அழாதே அன்னி; நினைக்கும் நேரமெலாம் வந்து போகலாம் நீ" என்று தட்டிக் கொடுத்து தேறுதல் கூறினாள்!


மேரியட் அன்னியின் கல்விக்காக எடுத்துக்கொண்ட அரிய முயற்சிகள், அக்கனவு உணர்வுகள், சாதாரண மானவை. பெற்ற தாயிடமும் பெற முடியாத எல்லாவித வசதிகள், வாய்ப்புகள், ஒழுக்க உணர்வுகள், சில வாழ்க்கை முறைகள் அனைத்தையும் அன்னி பெற்றாள். பிறமொழிகளான ஜெர்மன், பிரான்ஸ் மொழிகளைக் கற்க மேரியட் உதவினாள் இதனால், மிஸ் மேரியட் ஒரு சிறந்த செவிலித் தியாகவல்லியாகவும் திகழ்ந்தார்.


பழக்கத்தில் வளர்ந்த ஒழுக்கம் வழக்கமாகி விட்ட பிறகு, அதை மாற்றுவதென்பது மிகமிக அரிய செயலே ஆகும்.


மேரிட்டை விட்டுப் பிரிந்த அன்னி, ஹர்ரோவுக்கு வந்த பின்பு நேரத்தை வீணாக்கவில்லை. காலம் பொன் போன்றது என்று கூறிய அறிஞன் சிந்தனைக்கேற்ப, ஒய்வு நேரத்தில் சங்கீதம் கற்றார்.


நூலகத்து நூல்களை எல்லாம் புரட்டி புரட்டிப் பார்த்து ஏந்தி வந்து அதன் நுட்பங்களை எல்லாம் மனத்தில் பதித்தார்:

இழந்த சொர்க்கம், மோட்சப் பயணம், சாக்ரடிஸ், பிளாட்டோ, தாந்தே, வேர்ட்ஸ் வோர்த், கூப்பர், ஷெல்லி, பைரன், கிட்ஸ், விட்மன், வால்டர்ஸ்காட், செனதே. ஸ்பென்சர், மில்டன். கிங்ஸ்லே சேக்ஸ்பியர் போன்ற எண்ணற்றோர் நூல்களை அக்கறையுடன் படித்தார். படித்தார் என்ப்து கூட சாதாரணப் பழக்கம்; அவற்றுடன் இரண்டற ஒன்றி விட்டார் எனலாம்:


அன்னிக்கு வில்வித்தைப்பயிற்சியும் உண்டு நாடோடி ராணி என்ற கருப்புக் குதிரை அன்னியிடம் இருந்தது. எப்போதும் அதன் மீதே சவாரி செய்து பிடித்தமான கிராமத்து மாதா கோவில்களுக்குச் செல்வார். ராஜா தேசிங்குக்கு நீலவேணி குதிரை ஒரு வீரப் பரியாக எப்படி இருந்ததோ, அதனைப் போல 'நாடோடி ராணியும்' அன்னிக்கு கிராம மக்களின் ஆறிவை வளர்த்து பரிதாபத்தையும் எழுப்பும் பாடக்குதிரையாக இருந்தது என்று கூறலாம்.