அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/அங்கே போகலாமா?


(48) ங்கே போகலாமா?


அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நிகழ்வதற்கு முன்பு, வெண்டல் பிலிப்ஸ் என்ற சீர்திருத்தவாதி ஒருவர் இருந்தார்.

அவர் நாடெங்கும் சுற்றி நீக்ரோக்களின் விடுதலைக்காகப் பாடுபட்டு சொற்பொழிவு நிகழ்த்தி வந்தார்.

ஒகியோ மாநிலத்தில் பாதிரிகள் சிலர் வந்து சீர்திருத்தவாதியைச் சந்தித்தனர். "ஐயா, நீங்கள் தானே வெண்டல் பிலிப்ஸ்?" என்று கேட்டார்.ஒரு பாதிரி.

"ஆமாம்” என்று பதில் அளித்தார் பிலிப்ஸ். "நீக்ரோக்களின் விடுதலைக்காகப் பாடுபடுவதோடு, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே உங்கள் கருத்து அல்லவா?” என்று கேட்டார் பாதிரியார்.

"ஆமாம்.அதுவே என் கருத்து” என்றார் பிலிப்ஸ். "அப்படியானால், நீங்கள் ஏன் இங்கே வந்து சொற்பொழிவு செய்கிறீர்கள்? நீக்ரோக்கள் மிகுந்த மாநிலத்தில் போய்ச் சொற்பொழிவு நிகழ்த்துவதுதானே” என்றார் பாதிரி. -

"மன்னிக்க வேண்டும் நீங்கள் ஒரு பாதிரியா?" என்று கேட்டார் பிலிப்ஸ்.

"ஆமாம்” என்றார் பாதிரி.

நரகத்தில் அவதியுறாதபடி பாவிகளை எல்லாம் ரட்சிக்க முயற்சிப்பது உங்கள் வேலை இல்லையா?” என்று கேட்டார் பிலிப்ஸ்.

"ஆமாம் ஐயா, அதுவே என் வேலை" என்றார் பாதிரி.

"அப்படியானால்,நீங்கள் என் இங்கே இருந்துகொண்டு காலத்தை வீணடிக்கிறீர்கள்? நரகத்துக்குப் போய் உழைக்கலாமே” என்றார் பிலிப்ஸ்.

பாதிரி வாயடைத்துப் போனார்.