அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/புத்தகங்களினால் உண்டாகும் நன்மை


(47) புத்தகங்களினால் ண்டாகும் ன்மை



பிரபல நகைச் சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் வீட்டுக்குக் கிறிஸ்துமஸ் விழா சமயத்தில் நண்பர் ஒருவர் வந்தார். அவரும் ஒரு நூல் ஆசிரியரே. -

ட்வைனின் புத்தக அறைக்குள் நுழைந்தபோது, தரையில் ஏராளமான புத்தகங்கள் அடுக்கடுக்காக வைத்திருப்பதைக் கண்டார். -

“இவை எல்லாம் உங்களுக்கு வந்த கிறிஸ்துமஸ் பரிசுகளா?"என்று நண்பர் கேட்டார்.

"ஆமாம்” என்று தலையசைத்தார் ட்வைன்.

"நமக்குப் புத்தகங்களையே பரிசு அளிக்கிறார்களே, ஏன்? புத்தகங்களைத் தவிர வேறு ஒன்றும் நமக்குத் தேவை இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்களா?" என்று நண்பர் கேட்டார். .

"இருக்கலாம்; அதனால் என்ன? புத்தகங்கள் என்றாலே எனக்குப் பிரியம் அதிகம். உதாரணமாக, இதோ இந்தக் கனமான புத்தகங்களைப் பாருங்கள்! பூனைகள் மீது விட்டெறிய இவற்றை விடச் சிறந்த பொருள் வேறு கிடைக்காது. சிறிய புத்தகங்களை மேஜை, நாற்காலிகளின் கால்களுக்கு அடியில் வைத்தால் அவை ஆடி அசையாமல் இருக்கும். இதோ இருக்கிறதே தோல் பைண்டு செய்த புத்தகம், இதிலே சவரக் கத்தியைச் சுகமாகத் தீட்டலாம். ஆகையால்,புத்தகம் அருமையான பொருள். அவற்றையாரும் எனக்கு நிறையத் தாமாட்டேன் என்கிறார்களே. அது தான் என் மனக்குறை” என்றார் ட்வைன்.