அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/உயர்ந்து விட்டார்


(52) யர்ந்து விட்டார்


ஸிங்க்ளேர் லூயிஸ் என்ற ஆசிரியர் நோபல் பரிசு பெற்றவர்.

இளமையில் அவர், பெரிய புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் விளம்பரத் துறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு வாரச் சம்பளம் 23 டாலர்.

இரண்டாவது ஆண்டில், “இன்னும் இரண்டு டாலர் சம்பள உயர்வு வேண்டும்” என்றுதுணிவோடு கேட்டுவிட்டார் லூயிஸ்.

உரிமையாளரும் அவ்வாறு சம்பள உயர்வு அளித்தார். ஆனால், கொடுக்கும்போது, "லூயிஸ்,நீ நல்ல புத்திசாலியான இளைஞன்தான். ஆனாலும் அடிக்கடி சம்பள உயர்வு கேட்கிறாயே; அது சரியல்ல. இப்பொழுது, நீ பார்க்கும் வேலைக்கு இதுவே மிக உயர்ந்த சம்பளம், தெரிந்ததா?” என்று கூறினார்.

அதற்கு பிறகு, பதினைந்து ஆண்டுகள் ஆகவில்லை

நிறுவனத்தின் உரிமையாளர், அதே லூயிஸுக்கு, புதிய நாவல் ஒன்றுக்கு, அதன் கையெழுத்துப் பிரதியைக்கூடப் படித்துப்பார்க்காமல், நம்பிக்கையாக 75,000 டாலர் முன்பணம் கொடுக்க முன்வந்தார் என்றார் ஆச்சரியமாக இல்லையா?