அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/எனக்கும்கூட பயம்தான்

(9) னக்கும்கூட யம்தான்


ஐஸன்ஹோவர், அமெரிக்க ஜனாதிபதியாவதற்கு முன், கொலம்பியா பல்கலைக் கழகத்தின் தலைவராக இருந்தார்.

அப்பொழுது, பேராசிரியர் ஒருவர் ஐஸன்ஹோவரிடம் சென்று. “தளபதி அவர்களே! நீங்கள் இங்கே வருவதற்குமுன், நாங்கள் எவ்வளவு பயந்து கொண்டிருந்தோம் தெரியுமா” என்று வெட்கத்தோடு சொன்னார்.

ஐஸன்ஹோவர் சிரித்துக் கொண்டே, 'அப்படியா! இங்கே வருவதற்குமுன் உங்களைப் பற்றி நான் என்ன பயம் பயந்து கொண்டிருந்தேன் தெரியுமா? அதைக் கேட்டால் உங்களுக்கு வேடிக்கையாக இருக்கும்” என்றார்.

பழகாததால் ஏற்படும் குறையே பயத்துக்குக் காரணம்!