அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/பதிப்பாளரின் குழப்பம்


(58) திப்பாளரின் குழப்பம்



பிரசித்தி பெற்ற புத்தகப் பதிப்பாளர் ஒருவர், தினமும் தாம் சந்தித்து, உரையாடல்களில் கேட்ட சிறப்பான கருத்துக்கள் ஆலோசனைகள், பதிப்பின் தந்திரங்கள் எல்லாவற்றையும் அவ்வப்போது துண்டு துண்டாக எழுதி தம்முடைய சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டே இருப்பார். இரவில் தனியே உட்கார்ந்து, நினைவுக் குறிப்புக்கள் அனைத்தையும் கவனமாக ஆராய்ந்து, விளக்கமாக எழுதி, ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டே தூங்கச் செல்வார்.

ஒரு நாள், பிரபல கதாசிரியர் ஒருவர், சிறு காகிதத் துண்டில் 'டிங்கிள்ஸ் பீல்' என்ற ஒரே வார்த்தையை எழுதி, அந்தப் பதிப்பாளரின் சட்டைப் பைக்குள், அவருக்குத் தெரியாமல் போட்டு விட்டார். 

அன்று இரவு, வழக்கம் போல் பதிப்பாளர் நினைவுக்குறிப்புகளை எல்லாம் எடுத்து ஆராய்ந்த போது, 'டிங்கிள்ஸ் பீல்' துணுக்குக் காணப்பட்டது. இதை எதற்காகக் குறித்தோம் என்று வெகுநேரம் யோசித்து யோசித்துப் பார்த்தார். எவ்வளவு நேரம் கண் விழித்தும் ஒன்றும் புரியவில்லை. தூக்கமும் பிடிக்கவில்லை. அந்த வாரம் முழுவதும் இதே சிந்தனைதான்.

அலுவலகத்துக்குப் போனால் அங்கேயும் ஆழ்ந்த சிந்தனையோடு டிங்கிள்ஸ் பீல்' என்று தனக்குள் உருப்போட்டுக் கொண்டே அங்கும் இங்கும் உலாவுவார். 'டிங்கிள்ஸ் பீல்' தலைவலி தீர்ந்த பாடில்லை. -

ஒரு வாரம் ஓடியது. இனி, 'இந்த ஞானத்துணுக்கு நமக்கு வேண்டாம். எக்கேடும் கெட்டுப் போகட்டும். இதனால் பைத்தியம் பிடிக்காமல் தப்பித்துக் கொண்டால் போதும்' என்று தீர்மானித்து 'டிங்கிள்ஸ் பீல்' அடியோடு விட்டு ஒழித்தார் பதிப்பாளர்.