அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/பதில் எழுதாத காரணம்


(54) தில் ழுதாத காரணம்



பிரபல ஆங்கில எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங் வீட்டில் வளர்த்து வந்த மரத்தின் மீது லண்டனில் ஒடிக்கொண்டிருந்த பஸ் ஒன்று மோதியது.

கிப்ளிங்குக்குக் கோபம் தாங்க இயலவில்லை. பஸ் முதலாளிக்கு டிரைவர் மீது குறை கூறி, கடுமையாகக் கடிதம் எழுதினார் கிப்ளிங். அந்தப் பஸ் முதலாளி ஒரு சிற்றுண்டிச்சாலை முதலாளியும்கூட.

கிப்ளிங் எழுதிய கடிதத்தை, அந்தச் சிற்றுண்டிச் சாலையில் எல்லோருடைய கண்களுக்கும் தெரியும்படியாக வைத்தார் முதலாளி.

அதைப் பார்த்த ஒருவர், நல்ல விலை கொடுத்து அந்தக் கடிதத்தை வாங்கிக் கொண்டார்.

தம்முடைய கடிதத்துக்குப் பஸ் முதலாளியிடமிருந்து பதில் வராததால், மறுபடியும் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து கடிதம் எழுதினார் கிப்ளிங், ஆனால், அதற்கும் பதில் வரவில்லை.

மறுநாள் கிப்ளிங், மிகுந்த கோபத்தோடு சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று, மன்னிப்புக் கடிதம் எழுதாமைக்காக முதலாளியைக் கடிந்து கொண்டார்.

முதலாளி கிப்ளிங்கிடம் மன்னிப்புக் கேட்டபடியே “நான் வேண்டும் என்றேதான் உங்கள் கடிதத்துக்குப் பதில் எழுதவில்லை. ஏனென்றால், நான் உங்கள் கடிதத்துக்குப் பதில் எழுதாவிடில் நீங்கள் எனக்குக் கடிதம் எழுதிக் கொண்டே இருப்பீர்கள். அந்தக் கடிதங்களை எல்லாம், பிரமுகர்களின் கையெழுத்து வேட்டைக்காரர்களுக்கு விற்றால் எனக்கு நல்ல வருமானம் கிடைக்கிறதே" என்றார்.