அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/052-383

48. விருதுபட்டி பறையர்கள் விஷபேதியால் மடிகின்றார்களாமே!

அந்தோ விருதுபட்டியில் வாசஞ்செய்யும் பெரியசாதிகளென்போர்களே இன்னும் உங்களுக்கு இதக்கம் வரவில்லையா. வன்னெஞ்சமாறவில்லையா. பறையர்கள் என்போர் உங்களை ஒத்த மக்களல்லவா.

பொதுவாகக் கட்டி வைத்துள்ள திருக்குளங்களிலும் கிணறுகளிலும் அவர்களைத் தண்ணீர் மொண்டு குடிக்கவிடாமல் உப்புத்தண்ணீரையும் குட்டைகளிலுள்ள அசுத்த நீர்களையும் அருந்தி விஷபேதிகண்டு, வெகு ஏழைக்குடிகள் மடிகின்றார்களாமே, அவைகளைக்கண்டேனும் உங்களுக்கு இதக்கம் பிறக்கவில்லையா. மிருகங்களுக்கு ஜலம் மொண்டுகொடுத்து காப்பவர்கள் இந்த மக்களை ஆதரிக்கமனமில்லையா.

இத்தகையாய் மனிதர்களை மனிதர்களாக பாவிக்காத இந்துக்கள்வசம் சுயராட்சியங்கொடுத்துவிட்டால் பறையர்கள் என்னும் இப்பரதேசிகளை இன்னும் எங்கு பரக்கடிப்பார்களோ விளங்கவில்லை, இந்து தேசத்திலுள்ளவர்களின் இவ்வகைக்கொடூரச் செயல்களையறியா, கனம் லார்ட்மார்லியவர்கள் இந்தியர்களில் ஒருவருக்கு எக்சிகூட்டி மெம்பர் உத்தியோகமளிக்க வழிபார்க்கின்றார் இதுவும் ஏழைகளின் துர்ப்பாக்கியமே.

- 2:38; மார்ச் 3, 1909 -