அறிவியல் வினா விடை-இயற்பியல்/ஐன்ஸ்டீன் கொள்கை

8. ஐன்ஸ்டீன் கொள்கை


1. ஐன்ஸ்டீன் என்றால் என்ன?

ஒளி வேதி இயலில் பயன்படும் ஒளியாற்றல் அலகு.

2. ஐன்ஸ்டீனியம் என்றால் என்ன?

ஐன்ஸ்டீன் பெயரில் அமைந்த கதிரியக்கத் தனிமம். புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. குறுகிய நேரமே இருக்கக் கூடிய ஒரிமங்கள் (ஐசோடோப்புகள்) இதிலிருந்து தொகுக்கப்படுகின்றன.

3. ஐன்ஸ்டீன் எண் என்றால் என்ன?

காந்தப் பாய்ம இயக்கவியலில் பயன்படும் பருமனில்லா எண். இது ஒளி விரைவுக்கும் பாய்ம நேர் விரைவுக்கு முள்ள வீதத்திற்குச் சமம்.

4. ஐன்ஸ்டீன் சமன்பாடு என்றால் என்ன? 

நிறை, ஆற்றல் ஆகிய இரண்டிற்குமிடையே உள்ள தொடர்பைக் குறிப்பது. E=mc2

5. இதை ஐன்ஸ்டீன் எந்த ஆண்டில் அறிவித்தார்?

1950இல் அறிவித்தார்.

6. ஐன்ஸ்டீன் வளையம் என்றால் என்ன?

இது ஐன்ஸ்டீன் கூறிய மெய்ந்நிகழ்ச்சி. அதிகச் செறிவுள்ள நிறப் பார்வைக் கோட்டில் நேராக இருக்கும் பொழுது, புள்ளி போன்ற ஒளி மூலம் தன் உருவை ஒரு முழு வட்டமாகத் திரிபடையச் செய்யும்.

7. ஐன்ஸ்டீன் கொள்கைப்படி இடம் என்பது என்ன?

இடம் என்பது ஒரே சீரானது. தற்கால விண்ணியலில் இது ஒரு பெருங்கூறு.

8. ஐன்ஸ்டீன் கொள்கைக்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளதா?

அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. இயற்பியலார் சிலர் தாம் கண்டறிந்த உற்றுநோக்கல்கள் ஆய்வுகள் மூலம் ஐன்ஸ்டீன் கொள்கைக்கு அறைகூவல் விடுத்துள்ளனர். இவை சரி என்று மெய்ப்பிக்கப்படுமானால், ஐன்ஸ்டீன் கொள்கைக்கு ஒருகால் திருத்தம் வரலாம். (1997)

9. நாற்பருமன் என்றால் என்ன?

ஐன்ஸ்டீன் சார்புக் கொள்கைப்படி காலம் நாற்பருமன் ஆகும். இக்கொள்கையில் நாற்பரும உலகின் குறிப்பிட்ட நிலைகளாகக் காலமும் இடமும் கருதப்படுகிறான்.

10. பார்வை ஆயம் என்றால் என்ன?

செயல்முறை நோக்கங்களுக்காக அசையா நிலையில் இருப்பதாக எடுத்துக் கொள்ளப்படும் அச்சுகளின் தொகுதி. எந்நொடியிலும் இடத்தில் ஒரு பொருளின் நிலையை உறுதி செய்யப் பயன்படுவது. நாற்பருமத் தொடரியியத்தில் பார்வை ஆயம் நான்கு ஆய அச்சு களைக் கொண்டது. இவற்றில் மூன்று இடத்தையும், ஒன்று காலத்தையும் சார்ந்தவை.

11. ஐன்ஸ்டின் சார்புக் கொள்கைகளைக் கூறு.

1. சிறப்புக் கொள்கை :1908இல் உருவாக்கப்பட்டது. அது முடுக்கம்பெறாநிலைகளைச் சார்ந்தது. அதன் சுருக்கம் E=mc2. E=ஆற்றல், m = நிறை, c = ஒளி விரைவு.

2. பொதுக் கொள்கை : 1915இல் உருவாக்கப்பட்டது. இதில் முடுக்கப் பெற்ற தொகுதிகளைச் சேர்ந்ததனால் ஈர்ப்பாற்றலை அவர் பகுத்தறிய முடிந்தது. அவர் விண்ணகத்தை நாற் பருமக் கால இடத் தொடர்ச்சியாகக் கருதுகிறார்.

12. ஐன்ஸ்டீன் சார்புக் கொள்கையின் சிறப்பென்ன?

1. நியூட்டன் விசை இயல் திரிபுகளை விளக்குவது.

2. நியூட்டன் விசை இயல்படி புதன் என்னும் கோளின் இயக்கம் முரண்பட்டது. ஆனால், இதை ஐன்ஸ்டின் சார்புக் கொள்கை தெளிவாக விளக்குகிறது. கதிரவன் அருகே செல்லும் ஒளிக்கதிர்கள் அதன் ஈர்ப்புப் புலத்தால் வளைகின்றன என்பது ஆய்வினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

3. எவ்வகை ஆய்வுமின்றித் தம் உய்த்துணர்வினால் மட்டுமே இக்கொள்கையை உருவாக்கியது தனிச் சிறப்பு.

4. காலத்தால் அழியாக் கொள்கை. அறிவியல் வரலாற்றில் ஒர் எல்லைக் கல். இதுவரை இதற்கு ஒரு முடிவான திருத்தம் எதுவும் கூறப்படவில்லை.

13. ஐன்ஸ்டீன் விண்ணகம் என்றால் என்ன?

ஐன்ஸ்டீன் விண்ணக மாதிரி. இது நாற்பருமன் கொண்ட உருளை வடிவப்பரப்பு. இப்பரப்பு ஐப்பருமனுடைய வெளியில் உள்ளது. இதுவே ஐன்ஸ்டீன் கண்ட விண்ணகம்.

14. ஏ-5 என்றால் என்ன?

இது ஒர் குறிப்புச் சவடி. ஐன்ஸ்டீன் பயன்படுத்தியது. இது 84 பக்கங்கள் கொண்டது. சிக்கலான கணித வாய்பாடுகள் இருந்தன. இவை எல்லாம் ஐன்ஸ்டீன் கையாலேயே எழுதப்பட்டவை.

15. ஐன்ஸ்டீன் தம் கொள்கைக்கு எங்கு, எப்பொழுது முதல் விளக்கமளித்தார்?

1915 நவம்பர் பெர்லின் அறிவியல் கழகத்தில் ஓர் ஆராய்ச்சிச் சொற்பொழிவாற்றினார். இதுவே இவர் தம் 

கொள்கைக்கு அளித்த முதல் விளக்கம் ஆகும்.

16. போஸ்-ஐன்ஸ்டீன் புள்ளியியல் யாது?

புள்ளி இயல் எந்திரவியலில் விதி. அலைச் சார்புள்ள துகள் தொகுதிகளுக்கு கட்டுப்படுவது. இரு துகள்கள் பரிமாற்றம் பெறும்பொழுது இந்த அலைச் சார்பு மாறாதது.

17. லைட் குவாண்டம் (ஒளியன்) என்னும் சொல்லலைப் பயன்படுத்தியது யார்?

1905இல் ஐன்ஸ்டீன் பயன்படுத்தினார்.

18. போஸ்-ஐன்ஸ்டீன் பகிர்வு விதி யாது?

இவ்விதி துகள் தொகுதிகளுக்குப் பயன்படக்கூடியது. இத்துகள்கள் சமச்சீர் அலைச்சார்பு உள்ளவை. இப் பண்பு பெரும்பான்மை நடுநிலை வளி மூலக்கூறுகளுக்கு உரியவை.

19. பெட்டியில் கடிகாரம் என்னும் தம் கருத்தை ஐன்ஸ்டீன் எப்பொழுது, எங்குத் தெரிவித்தார்?

1930இல் 6ஆம் சால்வே மாநாட்டில் தெரிவித்தார்.

20. சிப்பஇயல் நிகழ்தகவுகளை ஐன்ஸ்டீன் எப்பொழுது அறிமுகப்படுத்தினார்?

1916 - 1917இல் அறிமுகப்படுத்தினார்.

21. ஏ-5 தொடர்பாகக் கணிதமேதை இராமானுஜத்தின் சிறப்பு யாது?

ஐன்ஸ்டீன் போன்று இராமானுஜமும் தம் கணித வாய்பாடுகளையும் கண்டுபிடிப்புகளையும் ஒரு குறிப்புச் சுவடியில் எழுதிவைத்தார். இச்சுவடிகள் என்றும் பெருமைக்கும் புகழுக்கும் உரியவை.

22. டாக்டர் பாபா, எஸ்.என்.போஸ் ஆகிய இருவரும் கருத்து முறையில் எந்த அறிவியலாரோடு தொடர்புடையவர்கள்?

ஐன்ஸ்டீன்

23. போஸ் புள்ளியியல் என்றால் என்ன?

போஸன்களை ஆராயும் துறை. போஸ் பெயரில் அமைந்தது.