அறிவியல் வினா விடை - விலங்கியல்/முதுகு எலும்பு இல்லாத விலங்குகள்

5. முதுகு எலும்பு இல்லாத விலங்குகள்

1. அமீபா என்பது யாது?

முதல் தோன்றிகள் பிரிவைச் சார்ந்த ஒற்றைக்கண்ணறை விலங்கு உயிரி. இதன் ஒற்றைக் கண்ணறையே உடல் செயல்கள் யாவற்றையும் செய்வது. இது அடிக்கடித்தன் உருவத்தை மாற்றுவது.

2. பரமேசியம் என்பது யாது?

முன்தோன்றி இனத்தைச் சார்ந்த ஓரணு விலங்கு. நன்னீரில் வாழும் காலணி வடிவ உயிர். வெளிப் புறக்குற்றிழைகள் இதற்கு இயக்கத்திற்கு உதவுகின்றன. இதில் பெருஉட்கரு சிறுஉட்கரு என இரு கருக்கள் உண்டு. இவ்விரண்டில் முன்னது உறுப்பு வேலைகளையும் பின்னது இனப்பெருக்கக் வேலைகளையும் கட்டுப் படுத்துவது.

3. நுண் விலங்கு என்றால் என்ன?

கண்ணுக்குத்தெரியாத உயிரி. எ.டு அமீபா.

4. உணவுக் குமிழ் என்றால் என்ன?

அமீபா, பரமேசியம் முதலிய ஓரணு உயிரிகளில் காணப்படும் கண்ணறையின் செரித்தல் பகுதி.

5. போலிக்கால் என்றால் என்ன?

அமீபா முதலிய உயிரிகள் தங்கள் உணவைப் பற்ற அல்லது நகரத் தற்காலிகமாக உண்டாக்கும் முதல் கால் நீட்சிகள்.

6. கடல் மிதவை வாழ் உயிரிகள் என்பவை யாவை?

மேற்பரப்பு நீர்கள் அல்லது கடலின் நடுஆழப்பகுதியில் வாழும். இவை மிதப்பிகள் நீந்திகள் என இருவகை. எ-டு. நுண்ணுயிர்த் தாவரங்கள், நுண்ணுயிர் விலங்குகள்.

7. துளை உடலிகள் என்பவை யாவை?

இவை மட்டுமே இடம் பெயரா நீர் வாழ் விலங்குகள். ஒற்றை உடற்குழியில் பல துளைகள் உண்டு.

8. உப்பு நீரிலேயே கடற்பஞ்சுகள் காணப்படும் அய்டிரா என்பது யாது?

மெல்லுடலைக் கொண்டகுழி உடலிவகுப்பைச் சேர்ந்தது. உடல் இருபடையாலானது. வாயில் உணர் விரல்கள் சூழ்ந்திருக்கும் இருபாலி.

9. நீராம்பு என்றால் என்ன?

அய்டிரா வாழும் தொகுதியிலுள்ள ஊட்டமிக்க குழாய் உடலி.

10. உணர்விரல் என்றால் என்ன?

மென்மையானதும் மெலிந்ததுமான நெகிழ்ச்சியுள்ள உறுப்பு. உணரவும் பற்றிப் பிடிக்கவும் பயன்படுவது. எ-டு. அய்டிரா

11. மணிஉடலி என்றால் என்ன?

குழி உடலிகளின் வாழ்க்கைச் சுற்றின் ஒரு நிலை. உடல் மணி வடிவில் இருக்கும் உயிர்.

12. இழுது மீன் என்றால் என்ன?

கடல்வாழ் குழிக்குடலி. பனை நொங்கு போன்ற உடல் திண்மை. உணர்விரல்களில் கொட்டனுக்கள் உண்டு. குடை வடிவ உடல்.

13. அய்டிரோசோவா என்றால் என்ன?

குழிஉடலி வகுப்பபைச் சார்ந்தது. எ-டு பவழங்கள், இழுது மீன். சிறப்புத் தலைமுறை மாற்றம் நிகழ்தல். கலவியிலாச் சிற்றுயிரி நீரம்பு நிலையும் கலவியுள்ள பாலாம்பு நிலையும் மாறிமாறி உண்டாதல்.

14. பவழ உயிரிகள் என்பவை யாவை?

குழிக்குடலி வகுப்பைச் சார்ந்தவை. பவழப்பாறைகளை உண்டாக்குபவை. பசிபிக் பெருங்கடலிலும் மையத் தரைக்கடலிலும் காணப்படுபவை.

15. பவழத் தீவு என்றால் என்ன?

வட்டவடிவப் பவழ மலைத் தொடர் மைய உப்பங் கழியைச் சார்ந்தது.

16. இழைப்புழுக்கள் என்பவை யாவை?

உடல் துண்டங்கள் இல்லா விலங்குகளின் பிரிவு உருளை வடிவ உடல். மூச்சுறுப்புகள் இல்லை. குருதிக்குழாய் மண்டலமும் இல்லை. எ-டு. நாக்குப் பூச்சி.

17. நாக்குப்பூச்சி என்றால் என்ன?

குடலில் வாழும் ஒட்டுண்ணி.

18. முட்தோலிகள் என்றால் என்ன?

ஆரச்சமசீருள்ள விலங்குகள். உடல் சுவரில் சுண்ண ஊட்டமுள்ள தட்டுகள் வலுவூட்ட இருக்கும். குழாய்க ளால் இயக்கம் நடைபெறும். எ-டு நட்சத்திர மீன், கடல் அல்லி

18. வாயினின்று விலகியது என்பது எதைக் குறிக்கும்?

நட்சத்திர மீனில் வாய் அமைந்துள்ள பக்கத்திற்கு நேர் எதிர்புறம் இருக்கும் நிலை. திட்டமான மேல்புறம், கீழ்ப்புறம் (வெண்ட்ரல்) இல்லாதபோது, வாய்ப்புறம் வாய் எதிர்ப்புறம் எனக் குறிக்கப்படும்.

20. உடற்குழி என்றால் என்ன?

மிக முன்னேறிய விலங்குகளின்இடைப்படையில் உண்டாகும் பாய்மம் நிரம்பிய குழி. மண்புழு, நத்தை, முட்தோலி முதலியவற்றில் இது முதன்மையானது.

21. கண்ட அமைவு என்றால் என்ன?

கீழின விலங்குகளில் உடல் கண்டங்கள் அல்லது துண்டங்கள் அமைந்திருக்கும் முறை. எ-டு மண்புழு

22. வளைய உடலிகள் என்றால் என்ன?

வளைத்தசைப் புழுக்கள். உடல் வளையங்களானவை. திட்டமான உடற்குழி, உணவுக்குழி அமைந்திருக்கும். எ-டு. மண்புழு,

23. அட்டை அட்டைகள் என்பவை யாவை?

இருபால் பண்புள்ள வளைய உடலிகள். நீரிலும் நிலத்திலும் வாழ்பவை. தட்டையான உடல். உடலின் முன்னும் பின்னம் உறிஞ்சிகள் உண்டு. இவை இடம் பெயரவும் பிடிப்புக்கும் பயன்படுபவை.

24. இருபாலி என்றால் என்ன?

ஒரே உயிரியல் ஆண் பெண் இனப் பெருக்க உறுப்புகள் இருத்தல், மண்புழு.

25. மெல்லுடலிகள் என்பவை யாவை ?

மெல்லுடலிகள்டங்கள் இரா. தசைக்கால் மூடகம் உண்டு. புறக்கூடு ஒட்டாலானது. நிலம், நன்னீர், கடல் நீர் ஆகிய மூன்றிலும் வாழ்வது. எண்காலி, சிப்பி, நத்தை.

26. முதுகு எலும்பு இல்லாத விலங்குகளில் மிகப் பெரிய பிரிவு எது?

கணுக்காலிகள், கரப்பான்.

27. அரசநண்டு என்பது யாது?

உண்மை நண்டன்று. தொடக்க காலக்கணுக்காலி. புழுக்களையும் நத்தைகளையும் உணவாகக் கொள்வது.

28. இரு கிளை உறுப்பு என்றால் என்ன?

நண்டு முதலிய ஒட்டுடலிகளில் காணப்படும் உறுப்பு.

29. இறால் என்பது யாது?

சிறிய நண்டுவகை விலங்கு. கடலில் வாழ்வது உண்ணக்கூடியது.

30. இறால் வளர்ப்பு என்றால் என்ன?

உணவுச் சிறப்புக்கருதி இறால்கள் நன்னீர் வயல்களில் வளர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு ஹெக்டேர் நிலத்திலும் 500-2000 கிகி இறால் கிடைக்கிறது. ஜப்பானில் ஒரு ஹெக்டேருக்கு 6000 கிகி இறால் கிடைக்கிறது.

31. ஆளி என்பது யாது?

இருதிறப்பு ஓட்டு மெல்லுடலி. இதில் முத்து உண்டாகிறது.

32. எண்காலி என்றால் என்ன?

எட்டுக்கால்களைக் கொண்ட மெல்லுடலி. கைநீட்சிகளின் உட்பரப்பில் ஒட்டுறிஞ்சிகள் உண்டு. எ-டு அக்டோபஸ்.

33. கனுக்காலிகள் என்றால் என்ன?

விலங்குலகின் பெருந்தொகுதி, கரப்பான்.

34. கணுக்காலிகளின் சிறப்பியல்புகள் யாவை?

1. புற எலும்புக் கூடு உண்டு.
2. கால்கள் கணுக்களில் இணைக்கப்பட்டிருக்கும். இவை ஒவ்வொரு கண்டத்திலும் இருக்கும்.
3. உடற்குழி சிறியது.
4. நக உயிரிகளில் மட்டுமே குற்றிழைகள் உண்டு.

35. கணுக்காலிகளின் வகுப்புகள் யாவை?

1. நகத்தாங்கிகள் - கரப்பான்
2. தோட்டுயிரிகள் - நண்டு
3. பலகாலிகள் - பூரான்
4. சிலந்தியங்கள் - சிலந்தி

36. பூச்சி என்பது யாது?

இது கணுக்காலி. தலை, மார்பு, வயிறு என உடல் பிரிந்திருக்கும். எ-டு கரப்பான்.

37. பூச்சிக்கொல்லி என்றால் என்ன?

பூச்சிகளைக் கொல்லும் வேதிப்பொருள்

38. பூச்சியுண்ணி என்றால் என்ன?

பூச்சி உண்ணும் விலங்கு, பல்லி.

39. தேனீத்தாண்டவம் என்றால் என்ன?

உணவு ஊற்றுவாயின் திசையையும் தொலைவையும் காட்ட வேலைக்காரத் தேனிக்கள் நடத்தும் இயக்கக் கோலம்.

40. தேன் என்பது என்ன?

பூக்களின் தேன் சுரப்பியிலிருந்து பெறப்படும் நீர்மத்தைப் பூச்சிகள் பாகுநிலையில் இனிப்பாக்குதல். இது கெடாது நீண்ட நாள் இருக்கும். பாதுகாப்புப் பொருள்.

41. தேன் பருந்து என்றால் என்ன?

தேனிக்களையும் குளவிகளையும் தின்னும் பருந்து.

41. தேன் மெழுகின் பயன்கள் யாவை?

பல சேர்மங்கள் சேர்ந்த மஞ்சள் நிறப்பொருள். தன் கூட்டைக் கட்டத் தேனியால் சுரக்கப்படுவது. மெழுகுப் பொருள்கள், மருந்துகள், ஒப்பனைப் பொருள்கள் முதலியவை செய்யப்பயன்படுவது.

43.தேனீ நச்சின் இயல்பு யாது?

தேனிக்கள் கொட்டும்பொழுது, உட்செலுத்தப்படும் நச்சு. குறைந்த அளவு மூலக்கூறு மதிப்புள்ள புரதமும் இஸ்டமைனும் உண்டாக்கும் நொதிகளும் இதில் முதன்மையாக இருக்கும்

44. எறும்புகள் என்பவை யாவை?

சமூகப் பூச்சிகள். சிறகற்றவை, சுறுசுறுப்பானவை. உணரிகள் உண்டு. வீட்டுத் தொற்றுயிரிகள்.

45. எறும்பால் பரவல் என்றால் என்ன?

விதைகள் முதலியவை எறும்புகளினால் பரவல். எ-டு. கேஃவிபோரஸ் வகை விதைகள்.

46. அரக்கு என்பது யாது?

பெண் அரக்குப்பூச்சி உண்டாக்கும் பிசின். இது இசைத்தட்டுகள் செய்யவும் நகை வெற்றிடங்களை நிரப்பவும் பயன்படுகிறது.

47. பெராமோன் என்றால் என்ன?

செய்தித் தொடர்பிற்காகப் பூச்சிகள் சுரக்கும் வேதிப்பொருள்.

48. நிலைநிறுத்திகள் என்பவை யாவை?

குறுகிய கரணை வடிவமுள்ள உண்மை ஈக்களின் பின் இறக்கைகள் பறக்கும் பொழுது அதிர்ந்து, நிலை நிறுத்திகளாகச் (சமனாக்கிகளாக) வேலை செய்பவை.

49. வண்ணத்துப்பூச்சி என்றால் என்ன?

இறக்கைகளும் செதில்களும் உள்ள பூச்சி. இறக்கைகளாலும் செதில்களாலும் உடல் மூடப்படுவது. தொகுப்புணரிகள் இருப்பதால் அத்துப்பூச்சியிலிருந்து வேறுபடுவது. குழல்வாய் தேன் உறிஞ்சும் சிறப்புறுப்பு.

50. போலிப்புணர்ச்சி என்றால் என்ன?

தன் நிறமொத்த பூவைப் பூச்சி என எண்ணி, அதனை ஆண்பூச்சி புணரமுயலுதல். விளைவு அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுதல். நிறமட்டுமல்லாமல் வடிவமும் மணமும் புணருவதற்குக் காரணம்.

51. குழல் வாய் என்றால் என்ன?

உறிஞ்சுகுழல் எ.டு வண்ணத்துப்பூச்சி.

52. இனப்பிரிவு என்றால் என்ன?

தேனி, எறும்பு முதலிய சமூகப்பூச்சிகளில் காணப்படும் பிரிவு. எ-டு. அரிசி, வேலையாட்கள், ஆண்கள்.

53. மரவட்டை என்றால் என்ன?

பயிருண்ணி. காற்றுக் குழாய்மூலம் மூச்சுவிடுவது. உருளை வடிவ உடல் முதல் மூன்று வட்டுக்களைத் தவிர ஏனைய ஒவ்வொன்றும் ஈரிணை ஊரும் கால்களைக் கொண்டவை.

54. பற்றிகள் என்றால் என்ன?

சில ஆண் பூச்சிகளின் வயிற்றின் பின் முனையில் காணப்படும் ஒரினை இணையுறுப்புகள். கலவியின் பொழுது பெண்பூச்சியைப் பற்றப் பயன்படுபவை.

55. உள்ளுறை வளர்ச்சி என்றர் என்ன?

சில ஈக்களில் முட்டை பொறிந்ததும் இளம் உயிரிகள் தாய் உடலிலேயே தங்கி ஊட்டம் பெறும். முதிர்ச்சியடைந்ததும் அவை வெளியேறிக் கூட்டுப் புழுவாகும்.
56. கொசுக்கள் என்பவை யாவை?

நோய் பரப்பும் உயிரிகள். குயூலக்ஸ் பேட்டிகன்ஸ் யானைக் காலையும் அனோபிலிஸ் மலேரியாவையும் பரப்புபவை.

57. அனோபிலிஸ் கொசு என்றால் என்ன?

மலேரியா நோயைப்பரப்புவது.

58. இதைக் கண்டறிந்தவர் யார்?

சர் ரெனால்டு ராஸ்.

58. மின்மினி ஒளிர்வது எவ்வாறு?

இதன் வயிற்றுத் துண்டங்களில் ஒளி உறுப்புகள் உள்ளன. இங்கு லுசிபெரின் என்னும் வேதிப்பொருள் லுசிபெரஸ் என்னும் நொதியினால் ஆக்ஸிஜன் ஏற்றம் பெறுவதால், நிற ஒளிர்வு இரவில் உண்டாகிறது.

60. சிலந்தியங்கள் என்றால் என்ன?

கணுக்காலியின் ஒரு வகுப்பு. இதில் தேள், சிலந்தி முதலியவை அடங்கும்.

61. இவற்றின் சிறப்பியல்புகள் யாவை?

1. நிலத்தில் வாழ்பவை
2. உடல் மேற்பரப்பு அல்லது காற்றுக்குழல் மூலம் மூச்சு விடுபவை.
3. தலை, மார்பு, வயிறு என உடல் கண்டங்கள் பிரிந்திருக்கும்.
4. தலை - மார்பில் முதிர்ச்சி நிலையில் நான்கிணை கால்கள் இருக்கும்.

62. ஒட்டுறுப்பு என்றால் என்ன?

இணையுறுப்பாக உள்ள புறவுறுப்பு. இவ்வுறுப்பு கணுக்காலிகளில் உண்டு. இணை இணையாக இருப்பது. இணையின் ஒவ்வொரு பகுதியும் கணுக்களால் ஆகியிருக்கும். இக்கணு அமைப்பே கணுக்காலிகளுக்கு அப்பெயர் வழங்கக் காரணம்.

63. ஒட்டுறப்புகளில் மிகப்பெரியது எது?

யானையின் துதிக்கை.

64. உணரிகள் என்றால் என்ன?

தலையில் பொருந்தி இருக்கும் கணுக்காலிகளின் ஒட்டுறுப்புகள்.

65. சிற்றுணரிகள் என்றால் என்ன?

நண்டின விலங்குகளில் உணரிகளுக்கு முன்னுள்ளவை, சிறியவை, கணுக்களாலானவை. ஓரினை முதல் உணர் உறுப்புகளே சிற்றுணரிகள் ஆகும்.

66. மட்டப்பட்டு என்றால் என்ன?

கூட்டுப்புழுப் பருவம் தாண்டி முதிர்ந்த நிலையில் பட்டுப் பூச்சி வெளிவந்தவுடன், அதன் கூட்டிலிருந்து எடுக்கப்படும் நூல்.

67. தரத்தில் மிகக் குறைந்தது. நிமிளை என்றால் என்ன?

மஞ்சள் நிறப்படிவ உயிர்ப்பிசின். அணிகலன்களில் பயன்படுவது.

68. மாலதியான் என்பது யாது?

பாதுகாப்பான பூச்சிக்கொல்லி.

69. மெலானிள் என்பது என்ன?

தாவரங்களிலும் விலங்குகளிலும் காணப்படும் நிறமித் தொகுதிகளில் ஒன்று.