ஆலமரத்துப் பைங்கிளி/எழுதிச் செல்லும் விதியின் கை

13
எழுதிச் செல்லும் விதியின் கை!

ஊர் வாய் முண முணத்தது-வல்லமை அதிகம்: எதிரொலிக்குப் பலம் மிகுதி.

“முத்தம்மாவும் முருகேசனும் புண்ணியம் செஞ்ச வுங்கதான்-புருஷன் - பொண்சாதி ஆகிப்பிட்டாங்க. அவங்க மாரியாத்தாளுக்கு எடுத்துப் போட்ட பூ கல்ல பூ.ஆத்தாடியோ முத்தம்மா கழுத்திலே மஞ்சக் கயிறு ஏறுறதுக்குள்ளே எத்தனை தொல்லை, என்ன பாடு? .. பாவம், முருகேசன் தவியாத் தவிச்சிப் பூட்டானே?. அன்னிக்கு எலுதி வச்சவன் தலையெழுத்தை அழிச்சி எளுதிப்பிடத்தான் தலைகீழா நின்றான் மாயாண்டி. முடிஞ்சிதா?...முத்தம்மாவும் முருகேசனும் சின்னஞ் சிறுசுகள். செல்லத்தேவன் கம்மாயிலே மீன் கண்டு பிடிச்சி விளயாடுற காலத்திலே இருந்து இதுக ரெண்டும் புருஷன் பொண்டாட்டி விளையாட்டு விளையாடிச்சுதுக. இன்னிக்குத்தான் அதுக கனவு பலிச்சுது. பிள்ளையும் குட்டியுமா சொகமாயிருக்கோணும். ஊர் காத்தா அந்த மாரியாத்தா காப்பாத்தனும்!..."

முதல் இரவு-போதையும் போதமும் 'உடலுறவு’ கொள்ளும் ஒரு சுபதினம்!

"இரவே, நீ வா!"-தம்பதி சமேதராக வரவேற்றனர்.

இரவு வந்தது. இரவு மட்டுமா வந்தது. நிலவும் வந்தது; தென்றலும் வந்தது.

முத்தம்மாவுக்கு வெட்கம் வந்துவிட்டது. 'நாணம்’ என்ற சொல்லைத்தான் போடவேண்டும், இல்லையா? ஆமாம், நாணம் வந்துவிட்டது.

முருகேசன் கனத்துக்குக் கணம் தன்னையே இழந்து கொண்டிருந்தான்.

மதுக்கிண்ணம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. சட்டத்தைத் தூர விலக்கி வைத்துவிட்டு; உலகத்திற்கு கண்ணாம்பூச்சி விளையாட்டுக் காட்டி விட்டு!

“மு...த்...த...ம்...மா..."

"......"

"ஏலே, பொண்ணு!"

"ம்...."

அவள் சிரிக்கவில்லை; அவன் சிரிக்கச் செய்து விட்டான்.

மேனியில் தவழ்ந்து கிடந்து, பிறகு சரிந்து விழுந்து, பிறகு தன் நிலை அடைந்து கொண்டிருந்தது சுங்கடிச் சேலை.

அமைதி.

விண் மீன்களின் சிரிப்பில் வெட்கம் வந்துவிட்டதோ இளசுகளுக்கு. வரட்டும், வரட்டும்.

“முத்தம்மா!...அந்தப் பயல் மாயாண்டி நம்ப ரெண்டு பேரையும் கூண்டோடே கைலாசத்துக்கு அனுப்பிப்பிடத்தான் திட்டம் போட்டிருந்தான். ஆன முடியல்லே! தெய்வமின்னு ஒண்னு இல்லாமையா?அந்தத் தெய்வம் இல்லையானா நம்ப ரெண்டு பேரும் இப்பிடி

தன்னந்தனியே அடைபட்டுக் கிடக்க ஏலுமா?...நான் சொல்றேன் பாரு!-அந்தப் பய மவன்-மாயாண்டி நிஜமாகவே ரோசக்காரனாயிருந்தா இம்மா நேரம் களுத்திலே தூக்குக் கயிற்றை மாட்டிக்கிட்டிருக்கனும்!..ஆ! இப்போ நெனச்சாக்கூட மனசு திகிலப்படுதே? போன கிளமை நம்ப கண்ணுலப்பந்தலிலே கூட துணிஞ்சு இரக்கப்படாம தீ வச்சுப்பிட்டானே?.....தெய்வம் நின்னு கொல்லுமுன்னு பெரியவங்க- நாலும் அறிஞ்சவுங்க சொல்லுறதுண்டு. வரட்டும்”

“மச்சான், நல்ல நாளும் பெரிய நாளுமா நீங்க எதுக்கு இப்ப அந்தப் பாவியைப் பத்தி மனசிலே நெனக்கறீங்க? முறைப் பொண்ணு குறிதவறிப் போயிடுச்சேன்னு ஆத்திரம் அவனுக்கு!”

“கட்டாணி முத்தே! ஒன்னே நான் எப்பவும் மறக்கவே மாட்டேன். அந்த நாளிலே நாம்ப ரெண்டு பேரும் நாவ மரத்தடியிலே ராக்காச்சி அம்மன் பொட்டலிலே நின்னு கையடிச்சுச் சத்தியம் செஞ்சிக்கிணமே, அதை நீ காப்பாதிட்டே. அது போதும்."

"அத்தான் வேறே பேச்சு பேசமாட்டீங்களா?”

“ஒ...!” என்று உத்தாரம் சொன்னன் உரிமை பூண்டவன். அவன் கண்களிலே மோடி கிறுக்கியது.

ஒலைக் குடிசையைப் பிய்த்துக்கொண்டு காற்று வீசத் தொடங்கியது. முல்லைச் சிரிப்பிரும்பிக் கொண்டிருந்த தாரகைகள் மண் குடிசையை வசந்த மண்டபமாக ஆக்கிக் கொண்டிருந்தன.

ஜோடிப் பெருமூக்சு அனற் காற்று.

கொட்டா மணக்கெண்ணெய் அகல் விளக்கை அணைக்க இரு உயிர்கள் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தன. அப்பொழுது...

"மச்சான்!"

"என்ன, முத்தம்மா?..."

காற்றும் மழையும் கலந்தடித்தது.

'சக்தி காற்றாகி விட்டாளா?'

‘உலகம் ஒடுநீராகிவிட்டதா?’

விளக்கு அணைந்தது!

“ஐயோ, மச்சான்!” என்று அலறினாள் முத்தம்மா.

ஒலக்குடிசை பிய்த்துக்கொண்டது. கம்பும் கழியும் சிதறி ஓடின.

முத்தம்மா மயங்கி விழுந்தாள்.

முருகேசன் விக்கி விக்கி அழுதான்.

மாயாண்டி சிரித்தான்—அகங்காரச் சிரிப்பு:ஓங்காரச் சிரிப்பு.

பத்துருபாய் நோட்டுகள் இருபது சிதறி ஓடின.

அருகில் நின்ற கையாட்கள் சிரித்தனர்.

ரத்தப்பலி ஏற்க ' வேளை' பார்த்துத் துடித்துக் கொண்டிருந்த அந்த ‘பிச்சுவா'வை வீசி எறிந்தான் மாயாண்டி.

ஏலே, காத்தா, தீத்தான்! பாத்திங்களா, ஆண்டவன்கூட எம்பக்கமாயிட்டாரு! இல்லாப் போன, பாவம் முத்தம்மா—முருகேசன் முதல் இரவு அன்னிக்கு சமயம் பார்த்து இப்படிப் புயலும் வெள்ளமுமா உலகம் சீரளியுமா?...எனக்கு கிடைக்கவேண்டியவளை அந்தப் பயல் முருகேசன் அடைஞ்சிட்டான். இதை பார்த்துக்கிட்டு

நான் சும்மாயிருப்பேனா? ம்! புறப்படுங்க... காற்று மழை ரெண்டு பேரையும் பலி வாங்கிறதுக்கு முன்னாடி நான் பழி வாங்கவேணும் ஜல்தி!...”

கத்தி மின்னியது. வெட்டிப் பாய்ந்த மின்னல்கள் கத்திக்கு அழகு கூட்டிற்று.

ஓடினான் மாயாண்டி.

காற்றும் மழையும்!.ஊழிக் கூத்தின் தொடக்கமா?.. முடிவா?..

உலகம் அழுதது; “கடவுளே! உனக்கு ஈவு இரக்கம் இல்லையா?...ஏழைபாழைங்களே ஏன் இப்படி ரெண்டாக் தடவையும் சோதிக்கிறே?...மூணு வருசத்துக்கு முந்தி உண்டான பசி இன்னங்கூடவா அடங்கலை?. ஐயோ! நாங்க இனி எங்கே போவோம்? என்ன செய்வோம்?. தெய்வமே! எங்களை ஏன் படைச்சாய்?...பாவி!

மாயாண்டியின் சிரிப்பு எல்லை கடந்தது. அந்தக் குடிசை தெரிந்தது-முத்தம்மா, முருகேசன் குடிசை!

"ம்...ஆரம்பியுங்க!" - கவண் கற்கள் குடிசையைச் சாடிப் பறந்தன.

கத்தியைக் குறிவைத்து வீசப்போனான் மாயாண்டி: வலது கை ஓங்கி உயர்ந்தது.

மறுகணம். “ஐயோ!” என்று அலறிக் கீழே விழுந்தான். அவனுடைய உடம்பின்மீது ஆலமரக்கிளே தவழ்ந்து கிடந்தது. ரத்த நீரை சிந்தியது வாயிலிருந்து கண்களைத் திறந்தான்; மர்ணம் விளையாடியது.வாலைக் குமரி போலே!

கைகள் இரண்டினையும் சேர்த்து, மிச்சம் மீதப்பட்ட பலத்தைத் துணைக்கு அழைத்துக்கொண்டு ஆலமரக் கிளையைத் தரையில் தள்ளிவிட்டு, எழும்ப முயன்றான். முடியவில்லை. ரத்தநுரை புது வெள்ளமாகப் பெருக்கெடுத்தது. வஞ்சத்தின் நிறம் சிவப்பா?

முதன் முறையாகக் கண்ணீர்விட்டான். யார்?மாயாண்டி!

மனம் பேசியது? எனக்கேனுதான் இந்தப் புயலும் வெள்ளமும் தோணுச்சுதா...? என் மனசைத் திறக்கவா? இல்லே, நான் இந்த லோகத்தையே ஒரே முட்டாத்துறங் திறவேதான?...புத்தம் புது தம்பதிகளோட வாழ்வுக்கு முடிவுதேடி வஞ்சம் தீர்க்க மனசிலே நெனச்சேன்: இப்போ, ஆண்டவனே எனக்கு முடிவு தேட நெனச்சிட்டாரே ஐயோ!...பாவம், முருகேசனுக்கும் முத்தம்மாளுக்கும் இன்னிக்குத்தானே சாந்திக் கண்ணாலம்!... என்ன ஆனங்களோ, இந்தப் புயலிலே?.மண் குச்சாச்சே?...”

தெய்வமே, நீ வாழி!-சாவின் சங்நிதியிலாவது மனச் சாட்சியை விழித்துக்கொள்ளச் செய்துவிட்டாயே!

யானைப் பலம் வந்தது. மனித மனம் கூட்டுள் அடங்கிக்கொண்டது. ஒடினன்.

விண்ணக் கிறுக்கிச் சென்றது மின்னல். பாழடைந்த வீட்டில் தனித்தனியே கிடந்தார்கள் முருகேசன்-முத்தம்மா தம்பதிகள்!

மாயாண்டி இரண்டாம் முறையும் அழுதான்.

“நீங்க ரெண்டுபேரும் என்ன மன்னிப்பீகளா?...... பொழுது விடிய இன்னம் பத்து நாழிப் பொழுதுக்கு

மேலேயே இருக்குது. நல்லநாளும் அதுவுமா தேதிவைச்ச சாந்திக் கண்ணாலத்தை மாத்தப்படாது. இதையும் உங்க வீடு கணக்காகவே நெனச்சுகிடுங்க. முத்தம்மா, போம்மா!...ஊம்...நீயும் போ, முருகேசா கடவுளே, இப்பத்தான் நான் நிசமான மாயாண்டியா ஆனேன் மனுசன் ஆனேன்!...”

தலை நீட்டிய நிலவு ஓடியே ஓடிவிட்டது!