இங்கிலாந்தில் சில மாதங்கள்/நகைப் பித்து

நகைப் பித்து

நம் நாட்டுத் திருச்சந்நதிகள் முக்கியமாக அம்மன் சந்நதிகளில் அத்தெய்வங்கள் அந்தக் கோயிலின் அந்தஸ்து ஒட்டி. ஆபரணங்கள் அணிந்துள்ளன. தெய்வங்களுக்குப் பொன்னும் மணியும் கிரீடங்களாகவும் அணி ஆபரணங்களாகவும் சூட்டி அழகு பார்க்கிறோம், இது நம் நாட்டுக் கலாச்சாரம்.

நம் பெண்கள் அழகாக இருக்கின்றனர். அவர்களுக்கு அந்தஸ்தைச் சேர்க்கப் பொன்னும் மணியும் அணியும் நகைகளாக அமைகின்றன. அவர்களை அழகாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறவர்கள் போட்டுக்கொள்கிறார்கள்; இல்லாதவர்கள் இருந்தால் நல்லது என்று எண் கிறார்கள். சில சமயம் இரவல் வாங்கியும் போட்டுக்கொள்கின்றனர். அழகுக்காகப் போட்டுக் கொள்ளும் நகைள் அந்தஸ்தின் அடையாளமாகவும் மாறுகிறது.

இந்த நிலைமை அங்கு இல்லை. அவர்கள் அந்தஸ்துக்காக அணிவது இல்லை; அழகுக்காக ஒன்று இரண்டு போட்டுக்கொள்கிறார்கள். கழுத்தில் செயினாக இருக்கலாம்; கையில் மோதிரமாக ஒளி தரலாம்; அவ்வளவுதான். அது அவர்கள் கலாச்சாரம். அவர்கள் பெண்மையிலிருந்து விடுபட முயல்கிறார்கள்; ஆண்களோடு போட்டியிடுச் சரிசமமாக வாழ முயலும் முயற்சியில் பெண்மைக்கே. உரிய தனித்துவங்களை அவர்கள் வளர்த்துக்கொள்வது இல்லை. ‘ஆண்களோடு பெண்களும் சரிநிகர்ச் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே’ என்று பாரதி குரல் கொடுத்தான். பிற நாட்டில் வாழ்கிறார்கள் அதுபோல நாமும் இந்த நாட்டில் வாழ்வோம் என்று குரல் கொடுத்தான். அப்படிச் சொல்லிவிட்டுப் பெண்கள் நிறை. நகைகளைப் போட்டுக்கொள்வதில் அர்த்தமே இல்லை; பொன் விலங்குகளைத் தகர்த்து மேல் நாட்டுப் பாணியில் உடை உடுத்தும் போக்கு இப்பொழுது இங்கும் வளர்ந்து வருகிறது. தனிச் சலுகைகளைத் தவிர்ப்பது தக்கது என்று உணர்கின்றனர், என்றாலும் இந்தச் சூழ்நிலை அவர்களை மாற்றிக்கொள்ள இடம் தருவதில்லை; வாய்ப்பு இல்லாததால் அவற்றைக். குறைத்துக்கொண்டு வாழும் வகை இப்பொழுது வளர்ந்து. வருகிறது.