இளையர் அறிவியல் களஞ்சியம்/மார்க்கோனி

மார்க்கோனி செய்திப் போக்குவரத்துத் துறையில் மாபெரும் புரட்சிக்கு வித்திட்ட கம்பியில்லாத் தந்திமுறையைக் கண்டுபிடித்த அறிவியல் மேதை மார்க்கோனியாவார். நமது வீட்டில் உள்ள ரேடியோ எனும் வானொலிப் பெட்டியை முதலில் வடிவமைத்தவர் இவரே. 1874ஆம் ஆண்டில் இத்தாலியிலுள்ள பொலோன எனுமிடத்தில் பிறந்த இவர் இளமை தொட்டே அறிவுக் கூர்மை மிக்கவராகவும்

மார்க்கோனி

ஆராய்ச்சி மனப்பான்மையுடையவராகவும் விளங்கினார். இவர் பள்ளி சென்று பிறரைப்போன்று கல்வி கற்றவர் அல்லர். விட்டிலேயே ஆசிரியரைக் கொண்டு கல்வி கற்பிக்கப்பட்டவர்.

தந்திக் கருவியுடன் மார்க்கோனி

புதியன புனையும் பெருவிருப்புடைய இவர், இளம் பிராயம் முதலே தன் வீட்டிலேயே ஆய்வுக்கூடம் அமைத்து ஆராய்ச்சி செய்து வந்தார். தமது இருபத்தைந்தாவது வயதில் மின் அலை மூலம் செய்திக் குறியீடுகளை அனுப்புவதில் பெரு வெற்றி கண்டார். அதன் பயனாக உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்பே கம்பியில்லாத் தந்தி முறை. இதற்காக 1909 -ஆம் ஆண்டில் இயற்பியலில் நோபல் பரிசைப் பெற்றார்.

இவர் 1912ஆம் ஆண்டில் எதிர்பாராமல் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கித் தன் பார்வையை இழந்தார். இருப்பினும் திறன் குன்றாதவராகப் பணிபுரிந்தார். இரண்டாம் உலகப் போரின்போது கம்பியில்லாத் தந்தித்துறைத் தலைவராகப் பணி புரிந்தார் . 1919இல் பாரிசில் நடைபெற்ற உலக சமாதான மாநாட்டில் இத்தாலியப் பிரதிநிதியாகப் பங்கு கொண்டார். 1987இல் தமது 68ஆம் வயதில் மறைவெய்தினார்.