இளையர் அறிவியல் களஞ்சியம்/மூச்சு மண்டலம்

மூச்சு மண்டலம் : நாம் உயிர் வாழ சுவாசம் அவசியம். நாம் காற்றை உள்ளே இழுப்பதையும் வெளியே விடுவதையும் 'சுவாசம்’ என்கிறோம். மனிதர்கள் மட்டுமல்லாது விலங்கினங்களும் தாவரங்களும் சுவாசித்தே உயிர் வாழ்கின்றன.

மூச்சு மண்டலத்துள் ஐந்து முக்கிய உறுப்புகள் அடங்கியுள்ளன. மூக்கு, குரல் வளை,

மூச்சு மண்டலம்

தொண்டை, மூச்சுக்குழல், நுரையீரல் ஆகியனவாகும். நாம் உள்ளிழுக்கும் மூச்சு, மூக்குத் துவாரங்கள், குரல்வளை, தொண்டை வழியே மூச்சுக்குழல் மூலம் நுரையீரலை அடைகிறது. மூச்சுக்குழலுடன் நெஞ்சின் இரு புறமும் பரவியுள்ள நுரையீரல் இணைக்கப்பட்டுள்ளது. இருபுற நுரையீரல்களிலும் எண்ணற்ற காற்றுச் சிற்றறைகள் உள்ளன. இச்சிற்றறைகளின் உட்புறத்தில் நுண்ணிய இரத்த தந்துகிகள் எனும் இரத்தக் குழாய்கள் ஏராளமாகப் பரவியுள்ளன. நாம் சுவாசிக்கும் காற்று துரையீரல் காற்றுச் சிற்றறைகளை நிரப்புகிறது. இக்காற்றிலுள்ள ஆக்சிஜனை இரத்தத் தந்துகிகள் கிரகிக்க இரத்தம் சுத்தப் படுகிறது. உடலெங்குமிருந்து தந்துகிகள் மூலம் வரும் அசுத்த இரத்தம் நுரையீரல் சிற்றறைகளை அடைய அங்கிருந்து கார்பன்டை-ஆக்சைடு கழிவுப் பொருளாக மூச்சுக் காற்றாக வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு நிமிடமொன்றுக்கு 18 முறை மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுகிறோம்.

ஓடும்போதும் வேலை செய்யும்போதும் அதிக சக்தி தேவைப்படுகிறது. இதனால் உடல் உயிரணுக்களுக்கு அதிக ஆக்சிஜன் தர, வேகமாகச் சுவாசிக்க வேண்டியதாகிறது.

மனிதர்களைப் போன்றே மற்ற உயிரினங்களும் சுவாசிக்கின்றன. அவற்றிற்கு மூச்சுவிட தனி உறுப்புகள் உண்டு. ஓரணு உயிரான அமீபா நீரிலுள்ள ஆக்சிஜனை சுவாசித்து உயிர் வாழ்கிறது. மீன்கள் தங்கள் செவுள்கள் மூலம் ஆக்சிஜனைச் சுவாகிக்கிறது. தாவரங்கள் தங்கள் இலைகளிலுள்ள துவாரங்கள் மூலம் ஆக்சிஜனை வெளியிட்டு கார்பன்-டையாக்சைடைசுவாசிக்கின்றன, புழு, பூச்சிகளுக்கும் சுவாசம் தேவைப்படுகிறது. அவ்ற்றிற்கு அதற்கென தனி உறுப்பு உண்டு. ஆயினும், இவற்றிற்கு மூச்சை வெளியிட தனி உறுப்பு இல்லை.