உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/போற்றுதல்

34. போற்றுதல்

நம்மை மெச்சுவாரையேயன்றி நாம் மெச்சுவாரை நாம் ஒருபொழுதும் நேசிப்பதில்லை.

-ரோஷிவக்கல்டு

பிறன் ஒருவனை அவன் விரும்பும் வண்ணம் மதித்தல் கடினமான காரியம்.

- வாவனார்கூஸ்

யாரையேனும் மதித்துத்தான் தீரவேண்டுமானால், அவர் பிழையின் சுமையைத் தாங்கும் விதத்தை வைத்து மதிக்க வேண்டுமேயன்றி, அவர் அச்சுமையை ஏற்படுத்திக்கொண்ட காரியத்தை வைத்து மதிக்கலாகாது.

-மார்லி
உன் தகுதி பிறர்க்குத் தெரிய வேண்டுமானால் பிறர் தகுதியை நீ அங்கீகாரம் செய்க.
-பழமொழி
பிறருடைய உத்தமச் செயல்களை மனமுவந்து போற்றுதல் அவைகளை ஒரளவு நமக்கும் சொந்தமாக்கிக் கொள்வதாகும்.
-ரோஷிவக்கல்டு

★ ★ ★