எதிர்பாராத முத்தம்/பாடல் 28


28

தெய்வப் பாடல்

குமரகு ருபரன் பாடல்
கூறிப்பின் பொருளும் கூறி,

அமரரா தியர்வி ருப்பம்
ஆம்படி செய்தான் ; மற்றோர்

அமுதப்பாட் டாரம் பித்தான்.
அப்பாட்டுக் கிப்பால் எங்கும்

சமான மொன் றிருந்த தில்லை
சாற்றுவோம் அதனைக் கேட்பீர் ;

தொடுக்கும் கடவுட் பழம்பாடற்
றொடையின் பயனே ! நறைபழுத்த

துறைத்தீந் தமிழின் ஒழுகும்நறுஞ்
சுவையே! அகந்தைக் கிழங்கை அகழ்ந்

தெடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்
கேற்றும் விளக்கே! வளர்சிமைய

இமயப் பொருப்பில் விளையாடும்
இளமான் பிடியே ! எறிதரங்கம்,

உடுக்கும் புவனம் கடந்து நின்ற
ஒருவன் திரு வுளத்தில் அழ

கொழுக எழுதிப் பார்த் திருக்கும்
உயிர் ஓவியமே ! மதுகரம் வாய்

மடுக்கும் குழற் காடேத் துமிள
வஞ்சிக் கொடியே வருகவே!

மலையத் துவசன் பெற்ற பெரு
வாழ்வே வருக வருகவே !"