கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்/தொழில் வளர்ச்சியும் இரு கவிஞர்களும்

தொ தில் இaை Eர்ச்சியா, இரு தரிஞர்களுக்க. உழைப்பாளி . மக்களிடம் கடவுளைக் காணும் மேற் கூறிய கண்ணோட்டத்தில் இரு கவிஞர்களுக்குமிடையே வேறுபாடான பார்வை , இருப்பதற்கும் காரணம் உண்டு, இந்திய நாட்டில் தொழில் வளர்ச்சி ஏற்படவேண்டுமெனக். கனவு கண்டவர் பாரதி. தாம் இயற்றிய “புதிய ஆத்திசூடி” யிலேயே' **கைத்தொழில் போற்று, கூடித் தொழில் செய்" என்றெல்லாம் அவர் ஆணையிட்டார். மேலும், கரத்தாலும் கருத்தாலும் உழைப்பவர்களிடையே, அதாவது உடல் உழைப்பால் உழைக்கும் மக்களையும், அறிவின் பலத் தால் உழைக்கின்ற அறிவாளிக் கூட்டத்தையும் ஒன்றாக்கி, அவர்களிடையே பேதம் காணாமல் எல்லோரையுமே அவர் உழைப்பாளிகளாகக் கருதினார். இதனாலேயே அவர் கலைமக ளைப்பற்றிப் பாட வரும்போதுகூட, ' கை வருந்தி உழைப்பவர் தெய்வம்; கவிஞர் தெய்வம்" (வெள்ளைத் தாமரை) என்று இருசாராரையும் இணைத்துப் பாடுகிறார். மேலும், இரும்பைக் காய்ச்சி உருக்குவார்,.. எந்திரங்கள் வகுப்பார் முதலிய எந்திரத் தொழிலாளர்களைப் பாராட்டிப் பாடும் அதே பாட்டில், பாட்டும் செய்யுளும் கோத்திடுவோரையும் இணைத்து, அவர்களையும் தொழிலாளர்களாகவே மதித்துப் பாடுகிறார். 54 . அதாவது பாமர மக்களின் உடல் உழைப்புக்கும், படித்த வர்க்கத்தாரின் மூளை உழைப்புக்கும் உயர்வு தாழ்வு இருப்ப தாகக் கருதப்படும் Errய்மாலத் திரையைக் கிழித்தெறிந்து, இருவரையும் ஒன்றாக்கிக் காட்டுகிறார். ஆம், அவரது பார்னலயில் கவிதை இயற்றுவதும், கன எந்திரங்களைச் சமைப்.!தும் தொழிலாகத்தான் படுகிறது. இதனால் தான் அSavர் நம்மைப்பற்றிப் பாடும்போதும், “ நமக்குத் தொழில் கலிகை” என்று பெருமிதத்தோடு பாடுகிறார். இத்தகைய கவிஞர் இந்திய நாட்டின் எதிர் காலம் பற்றிக் குறிசொல்ல வரும்போதோ, நல்லகாலம் வருகுது, நல்ல காலம் வருகுது; வேத புரத்திலே வியாபாரம் பெருகுது; தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான். எந்திரம் பெருகுது; தந்திரம் வளருஆ; - எட்டு லட்சுமியும் ஏறி வளருது!... என்று குடுகுடுப்பை அடிக்கிறார். தொழில் வளர்ச்சியைப் .. பற்றி அவர் இவ்வாறு கனவு கண்... தால் தான் அவர் பாடிய

  • L.Xாரத தேசம் என்ற பாட்டில், இந்திய நாட்டின் எதிர் கால

எத்திரத் தாழில் வளர்ச்சிக்கான, *: ஐந்தாண்டுத் திட்டங் கரையே நீட்டுவதுபோல், பல்வேறு ஆணைகளை நமக்கு அடுக்கடுக்காய்ச் சொல்கிறார், வெட்டும் கனிகள் செய்து தங்கம் முதலாம் வேறுபல பொ(ளும் குடைந்தெடுப்போம்; - எட்டுத் திசைகளிலும் சென் றிவை விற்றே எண் ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்... காசி நகர்ப் பல்லவர் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்.... பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும் பண்ணி மலைகளென வீதி குவிப்போம்! இட்லது.த் ஜியங்கள் கொண்டு வருவார் காசினி வணிகருக்கு அவை கொடுப்போம். 55 ஆயுதம் செய்வோம்; நல்ல காகிதம் செய்வோம்; ஆலைகள் வைப்போம்; கல்விச் சாலைகள் வைப்போம்;... - தடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்; ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்... சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்... சந்தி தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்.... கலை வளர்ப்போம்; கொல்லருலே வளர்ப்போம்... ஓவி&ம் செய்வோம்; நல்ல ஊசிகள் செய்வோம்; உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்! - இவ்வாறு கவிதையில் மட்டுமல்லாமல், டாரதி 'தாம்." எழுதிய பல கட்டுரைகளிலும் தொழில்வளர்ச்சி, வர்த்தகப் பெருக்கம் ஆகியவற்றின் அவசியத்தை வற்புறுத்தியுள்ளார்.

    • வருங்காலம்* (கட்டுரைகள் : சமூகம்) என்ற கட்டுரையில் -

அவர் பின்வருமாறு எழுதுகிறார் : <<உலகம் எவ்வளவு தீவிரமாக மாறிக்கொண்டு வருகிறது என்பதைத் தமிழ் நாட்டார் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். ஒவ்வொருவரும் சிற்சில விவகாரங்களில் மனத்தைப் பதிய வைத்துக்கொண்டு, வெளியுலகத்தின் மாறுதல்களிலே புத்தி செலுத்தாமல், அற்ப விருப்பங்களிலும் அற்பச் செயல் களிலும் நாளையெல்லாம் கழியவிட்டு, கிணற்றுத் தவளைகள் போல் வாழ்வதிலே பயனில்லை, வர்த்தகம் செய்வோர் கோடிக்கணக்கான பணப்புழக்கம் ஏற்படும்படி பெரிய வர்த் தகங்கள் செய்ய வழி தேட வேண்டும்...., ராஜதந்திரிகளும் மந்திரிகளும் கண்டு வியக்கும்படியான பெரிய பெரிய யோசனைகள் செய்து நிறைவேற்றிப் புகழ் பெறவேண்டும். கைத்தொழில்களின் விஷயத்திலே நாம் இப்போது காட்டி வரும் சோர்வும் அசிரத்தையும் மிகவும் அருவருப்புக்கு இடம் தருகின்றன....நம்முள்ளே கல்வியும் செல்வமும் உ£ை..யோர் கூடி ஆராய்ச்சிகள் செய்து, வெளிநாடுகளில் ஆவலுடன் வாங்கக்கூடிய மாதிரிகள் எவை என்பதைக் கண்டுபிடித்து, அவற்றை' நமது தொழிலாளர்களைக் கொண்டு செய்வித்தால் மிகுந்த லாட்முண்டாகும். இரும்புத் தொழில் உலகத்திலே இலGAL:மையும். செல்வமும் கொடுப்பது. எல்லாவிதமான எவர்த்தி தாழில்களும் தற்காலத்தில் இரும்பு - எந்திரங்க. ளாலேயே செய்யப்படுகின்றன. ஆதலால் நமது தேசத்துக் கொல்லருக்கு நாம் பலவிதங்களிலே அறிவுறுத்தியும், ஜீவன செ ர்யங்களும் ஏற்பாடு செய்து கொடுத்தும், இடத்துக் சி.பி இயகன் நகரை இருப்புத் தொழில்களை வளர்க்க வேண்டும்... .. டே ஆம், புதிய உயிர்” என்ற கட்டுரையிலும் பாரதி (தொழில் வளர்ச்சியை வற்புறுத்திப் பேசுகிறார். **மேன்மை திலே.) நீ! வேண்டுமா ?, கைத்தொழில்கள் பெருகும்படி செய்ய வேண்டும். சத்தியமில்லை என்று சொல்லி ஏங்கு வதிலே பயனில்லை. எப்படியேனும் செல்வத்தை வளர்க்க. வேண்டும். சோம்பேறியாக ஒருவன் பலா த்தைக் குவித்து, வைத்துக்கொண்டு, அக்கம் பக்கத்து ஜனங்கள் பட்டினி இடத்து சாவதைப் பார்த்துக்கொண்டிருப்பது மிகவும் கொடி! பாவம். கைத்தொழில்களும், வியாபாரங்களும் ஏற்படுத்தி, அக்கம்பக்கத்தாரிடம் சரியானபடி வேலை வாங்கிக் கொண்டு, சரியானபடி கூலி கொடுக்கவேண்டும் என்று பணக்காரர்கள் தொழில் வளர்ச்சிக்கான துறையில் முதலீடு செய்து எந்திரத் தொழில்களைப் பெருக்க வேண்டும் என்று யோசனை கூறுகிறார். பாரதிக்கு * 'இரும்புத் தொழில் உலகத்திலே வலிமையும் செல்வம் கொடுப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் எந்திர வளர்ச்சியைப்பற்றிய தாகூரின் கருத்தோ இதற்கு நேர் மாகவே உள்ளது. எந்திர்' வ€T'ர்ச்சியே அவருக்குப் பூத பைச.:சமாகத் தோன்றியது. எந்திரத்தைப் பற்றித் தாகூர் 53 கவிதை - எழுதியுள்ளார், அதன் கருத்துரை வருமாறு :

  • (எந்திரமே! எல்லோரும் உன்னை வாழ்த்துகிறார்கள்; .

நாங்கள் உன்னைத் தொழுகிறோம்; உன்னை வணங்குகிறோம்; உன்னைக் கெளரவிக்கிறோம்! எந்திரமே! ஓ, எந்திரத் 57 தெய்வமே! உனது தீப்பிழம்புகளும் இடி முழக்கமும் வானத் தைக் கிழிபடச் செய்கின்றன. கடகடத்து உருளும் உன் சக்கரங்களெல்லாம் வேகமும் பேரொலியும் மிகுந்த காம்பீரி யத்தோடு எதிரொலிக்கின்றன. எந்திரமே! உனக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். உனது . ஒரேயொரு மூர்க்கமான பாய்ச்சல் உலகத்தையே தூர்த்துத் துடைக்கும் வெற் றி கரமான அனற்பிழம்புகளை உருட்டி விட்டுவிடுகின்றது எந்திரமே! ஓ, எந்திரக் கட வுளே! உனது சக்தி உறுதியான கனி த்தாதுவை உருக்கிவிடுகிறது; பழம் பெரும் பாறையின் ஜீவனுள்ள 'வித்தையே: நொறுக்குகிறது; பண்டைக் காலத் தின் நிலையான பொருட்களையெல்லாம் உடைத்துத் தள்ளு கிறது. எல்லோரும் வாழ்த்துகிறார்கள்! எல்லோரும் வாழ்த்து கிருர்கள்! எந்திரமே!' நீ ஒரு கழுகு,' 'உனது கூரிய நகங்கள் பூமியின் குடடி உருவிப் பிடுங்கி, வெளியே விரித்துப் போடு கின்றன. எந்திரமே! எந்திரத் தெய்வமே! நீ ஒரு மேகம்; உனது நிழலின்கீழ் பூமியையும், வானத்தையும், கடலையும் இருளடிக்கச் செய்யும் பொல்லாத. புயல்கள்தான் தாவிப் பறக்கின்றன. எந்திரமே!. எந்திரமே! எல்லோரும் உன்னை வாழ்த்துகிறார்கள், நீயோ இரக்கமற்ற மந்திரவாதி; நீ பூதப் பொருள்களையெல்லாம் உன் இஷ்டப்படி கட்டுண்ண வைத் திருக்கிறாய். எந்திரமே!. எல்லோரும் உன்னை வாழ்த்து கிறார்கள்! நீயோ உலகத்தையே உனது பணயக் கைதியாகச் சிறைப்படுத்தியுள்ளாய். உனது சேவகர்களான நாங்களோ உன்னைத் தொழுகிறோம்...” - எந்திரங்களைக் கண்டு தாகூர் எவ்வளவு தூரம் பயந்திருக் கிறார்' என்பதற்கு இந்தப் பாடல் தக்க சான்றாகும் “'லெட்டுக் கனிகள் செய்து, தங்கம் முதலாம் வேறு பல பொருளும் குடைந்தெடுப்போம்" என்று பாரதி சுரங்கத் தொழிலை வர வேற்றுப் பாடுகிறார், தாகூருக்கோ அது பூமாதேவியின் குடலே உருவி மாலை போடும் கொலைகாரச் செயலாகத் தோன்றுகிறது ; எந்திரத்தின் வேகம் பூமியையே தூர்த்துத்

  • கங்கை -4 துறை:கும் அskாகப் படுறது. மேலும் அதன் நிழலின்

கீழ் 22: 57: இஞ131 டித்துப் போகிறது. அதற்கு மனிதர்க கெல்லால் அடிமை 3ள். எதி,திரானது பகாசூரனைப்போல் 32: 17தர் 2673 4.2.23திதுவதாக இருட்ட.! தால், மக்கள் படத் 13:'ல் 449:5.த உரைக்கம் செலுத்துகிறார்கள்! எந்திரத்தை இல்வா: நீதான்' தாக. : ார்க்கினர். அதன் ஆக்க சக்தியைப் பத்திகம், அதனால் கிட்டும் .ஓலன்களையும் பற்றிய நினைவே அங்கு: எழலர் ஸ்லை. தாசரின் இந்தக் கருத்தை அவர் அமேரிக்கால் பேசிய இந்தியாவில் தேசியம்” என்!) தலைப் 14ன் பிரசங்கத்திலும் நாம் காண்கிறோம். அப்:ோது அவர் <<ன்று உலகில் காணப்படும் பெரிய கைத்தொழில் , ஸ்தா'.: $37 க்கா!லேகே. எனக்கு - ந.பிக்கையில்லை. . அ லை

  • தி:2:2:7ல் இருப்பதே அழகுஷ்பு 14.?மைப்புக்கு அவை? முரணாக

அ ன் >># என் 4.12) தக் காட்டுகி நந்து. - இயற்கையின் +5:2:த் த ::se; ' * 2: 23766t":5: _யங்கரத்தில் தோற்றமளிப் 4.? காதல் காட்சி தருகிறது. 5தர 3ாகரிக

: : :10 A4 23:22தில் தீப் சலிட்டுட்டுப் புத்37,5,த் திரட்டு -

இ... ஃ ப்ட ர் தம்:*: 2:14:3 தக்*?" தன ஆ !!! தப் 'ட' பைக் சிவப்; 352 S.ரர்கள்' கதலி ப ரற்க; :மறுப்பதால், எந்திரங்களின் 4.!!! 5:3 3 44 4.1) 20.! தால், அந்த நல்ல லு 43:1ர்ச்சிகளை ஏளனம் இதே போ?iyரம் ஜப்பான் நாடு எத்திரத் தொழில் வளர்ச்சியில் தான்:: நியுள்ளதையறிந்த தாகூர் --அதனைக் குறித்து மிகவும் அச்சத்தோடு, பின்வருமாறு எழுதி இப்போது ஜப்பானிய நாகரிகத்தைப் பயமுறுத்தும் மாறு தலைக் கண்டு நான் எனது சரீரத்துக்கு நேரும் பயம் போல் அஞ்சுகிறேன், ஜப்பான் மானுடச் செல்வமெல்லாம் 53 நிறையப் பெற்றிருந்தது. இப்பொழுதோ ' 4மானு. ரத்தத் எதைக் குடிக்கும் சாத்தானுடைய தாய்களை ஐரோப்பிய நீர்க்குகைகளிலே தான் வளர்க்கலாம் என்பதில்லை. ஓப்பா னிலும் அவற்றைக் குடியேற்ற 2 ரீ தத் துன்பங்களை இவர டே?*சட்டு ():வர்க்க முடியும் என்பதை நிரு! டணம் (ஈசய்க விட்ட து........?* மேற்கண்ட சுற்றுக்களில் பிரதிபலிக்கும் தான் கருத்தென்ன? *6ாந்,திரம் அழகாக இல்லை; அது கு5.4மாக உள்ளது; அது பசங்கரமானது, மணித '2.கணர்ச்சிகள் எந்திரங்களை ஏற்க மறுக்கின்றன, அதன் பாலை தடை மறிக்கின்றன; மறிக்கின்ற அந்த உணர்ச்சிகக மனிதன் திண்டல் செய்கிறான். எந்திரங்கள் சாத்தானிகர Sira; அந்தக் கருத்தின் சாராம்சம். தாகூர் ஏன் எந்திரங்கனை - இவ்வாறு கருதினார் என்பதை நாம் புரிந்து 3காள்வதற்க மன், - . :ாரதி இதைப் பற்றி என்ன தெரி' ? கிறார் - எனப் 1.??ர்ப்போம். 14 உலகத் தொழிலத்தும் உavந்து (செய்வோம்" என்று பாரதி நமக்கு ஆணையிட்டார். ஆம், உவந்து தான், பகாத் அல்ல! பாரதி எந்திர சொர்ஃபியை வரவேற்றார். எந்திரங்கள் திரவட்படுவதால், ஆப்காட் ஆ : தார்த்தத் துடைக்கப்பட்டுப் xே stTexாள்! என்றே; அவரே பொல' ;;ம் 1.3% னகையும் அழிந்து, அ5:487 கோர சொ:54 மரகக் 3:7ாட்சியளிப்பாள் என்றோ பாரதி கருதவில் சில, மாறாக, எந்திர வளர்ச்சியால் பூமண்டலத்தின் வாழ்வும் வளமும் பெருகி, புதிய பொலிவும் பூரிப்பும் திகழும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இதனை எயில் வெர்றாரன் (1855-1916} என்ற பெல்ஜியக் கவிஞரைப் பற்றி, தாம் எழுதப் புகுந்த ஒரு கட்டுரையில் பின்வருமாறு. குறிப்பிடுகிறார் : வலிமை ஓர் அழகு; அழகு ஒரு வலிமை, எந்திர ஆலை, நீராவி வண்டி, நீராவிக் கப்பல், வானத்தேர்., 'பெரிய 60 பீரங்கி எல்லாம் அழகுதான். உலர்ந்த கவிகள் வலிமை. வடை டேxாருள்க&r அவ்வக் காலத்தில் வழங்கிய வரையிலே வர்ணனை செய்துதான் இருக்கிறார்கள். இதிலே புதுனம் ஒன்றும் இல்லை... வலிமையே அழகு. ஒரு பொருளின் வெரியுருத்தைப் i.Jார்த்து அது அழகா, இல்லையா என்று நீர் Actrனம்' ' செய்யலாகாது. . எந்திரங்களிலே வலிமை நிகழ்கின்றது, ஆதலால் அவை அழகுடையன. அவற்றைக் கவி :{கழ்ச்சி செய்தல் தகும்” (உல்லாச யாத்திரை : பாரதி தமிழ்}.' மேற்காட்டிய இரு கவிஞர்களின் கூற்றுக்களிலிருந்து, தாகடரிடமிருந்து பாரதி முற்றிலும், துலாம்பரமாக வேறு பட்டு நிற்கிறார் என்பதை நாம் காண்கிறோம். எந்திரங்களைக் சசர்கள் புகழ்ச்சி செய்தல் வேண்டும் என்கிறார் பாரதி, தாகரோ அவற்றைச் "" சாத்தானின் நாய்கள்?' என இகழ்ச்சி செய்கிறார். இந்த வேறுபாட்டுக்குக் காரணம் என்ன? இரு கவிஞர்களின் வாழ்க்கைச் சூழ் நிலையில் நிலவிய வேறுபாடுதால் இதற்குக் காரணம். எப்படி ? - உலக த்தில் ஏற்பட்டுவரும் மாறுதல்களைப் பற்றிய பிரக்ஞையே இல்லாத கிணற்றுத் தவளைச் சூழ் நிலையிலிருந்த ஒரு குட்டி அமீனான எட்டயபுரத்தில் பிறந்து வளர்ந்தவர் {பாரதி; அவர் அந்த ஜமீன் தாருடன் சில காலம் தங்கி யிருந்தவர்; அவரிடம் சில காலம் பணியாற்றியவர். என்றாலும், அந்தக் கவுண்டனூர் சமஸ்தான வாழ்க்கை பாரதிக்கு அதிருப்தடையே தந்தது. எட்டயபுர மன்னரின் கீழ் தாம் பணியாற்ற நேர்ந்த துர்ப்பாக்கிய நிலையை அவரே மனம் நொந்து பாடியிருக்கிறார். அந்த மன்னரிடம் தாம் பணி செய்ய நேர்ந்த பாவத்தால், கவிதைக் காதலியே தம்மைவிட்டு அகன்றதாக அவர் கூறியுள்ளார். '. (தென் திசைக் கண்ணொரு சிற்றூர்க் கிறைவனாம் . திருந்திய ஒரு வகைத் துணையெனப் புகுந்து, அவள். பணி செய்ய இசைந்தேன், பததகி, தீ! என்னைப் பிரிந்து மற்றதன் நினை... திமிங்கில உடலும் 'சிறிய புன்மதியும் , ஓரேழ் பெண்டிரும் உடையதோர் வேந்தன் - . . தன் பணிக் கிசை, ஆ, என் தருங்கெலாம் அழிந்து , வாழ்ந்தான்.... என்று தம்மைத் தாமே நொந்து பாடியுள்ளார் (கவிதைக் காதலி). திலப்பிரபுத்துவத்தின் அகழிமுதலைச் சூழ்நிலை யிலே வாழ்ந்த பாரதி அதனை. நஞ்சென வெறுத்தார். தமது வறுமையையும் எண்ணிப் பார்க்காமல் ஆரம்பத் திலேயே அந்தச் சூழ் நிலையிலிருந்து தம்மைத்தாமே அறுத்துக் கொண்டு வெளியேறி, தேசத்தின் புதிய எழுச்சியோடும் விழிப்போடும் தம்மை ஐக்கியப்படுத்தித் தம்மைத் தாமே வளர்த்துக் கொண்டவர் பாரதி, நிலப்பிரபுத்துவத் தளையை முறித்து, அசுர வேகத்தில் முன்னேறத் துடித்தவர் அவர். எனவே நிலப்பிரபுத்துவச் சமுதாயத்தின் பல்வேறு கொடுமைகளையும் அவர் கண்டித்தார், இந்திய நாட்டில் எந்திர வளர்ச்சி ஏற்பட்ட வேண்டுமென த் துடித்தார். ஆனால் தாகூரோ ஜமீன் தாரிக் குடும்பத்தில் ஒரு குட்டி ஜமீன்தாராகப் பிறந்து வளர்த்தவர்.. பேராசிரியர் மாயூன்' சபீர் சொல்வது போல், " அந்தக் காலத்திலிருந்த பிராமண ஜமீன்தார்களிலிருந்து அப்படி யொன்றும் மாறுபடாத" ஜமீன் தாராகத்தான் அவர் வாழ்ந்து வந்தார். ஜமீன்தாரி வாழ்க்கையான அந்த நிலப் பிரபுத்துவத் தலையிலும் ஓரளவு சுகம் கண்டு, அதிலிருந்து விடுபடத் தயங்கியவர் அவர், எந்திர வளர்ச்சியோ நிலப்பிரபுத்துவச் சமுதாயத்துக்கு ஏகிரி ; அதன் 'சாவு மணி. அது - வளர வளர நலப்பரபுத்துவம் தனது பிடிப்பில் தளர்ந்து தளர்ந்து தானே மாண்டுபோகும். இது சரித்திரத்தின், பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத நியதி. எனவே ஜப்பானின் எந்திர வளர்ச்சியைப் பார்க்கின்ற தாகூருக்குத் தம்மையறியாமலே உள்ளுணர்வு உறுத்துகின்றது. அதனைத் “தமது 'சரீரத்துக்கு நேரும் பயம் போல" அவர். காண்கின்றார்; கண்டு அஞ்சுகிறார். எந்திரங்களைப் பற்றிய ஆசைgது கவிதையில் எந்திரமானது "பண்ணக் காலத்தின் நிலயான பொருள்களை யெல்லாம் 3.டைத்தத் தள்ளுகிறது” என்று அவர் கூறும்போது, நீண்ட. ' நெடுங்காலமாக நிலையாக இருந்து ' , வரும் நிலப் 8. பிரபுத்துவச் சமுதாய அமைப்பை எத்திரங்கள் உடைத் தெரிவதைத்தான் அவரது உள்ளுணர்வு கண்டுணர்ந்து அச்சம் கொள்கிறது. மேலும் எந்திரங்களை, மனித உணர்ச்சிகள் 431 ற்க மறுக்கின்றன என்றும், அவற்றின் பால தடை மறிக்கின்றன என்றும் அவர் கூறுகிறார் அல் 233பா ? ஆனால் உண்மையில் தாகூரின் உணர்ச்சிகள் தா?" எந்திரங்கள் ஏற்க மறுக்கின்றன; அதன் வருகையை {பாக்க எண்ணுகின்றன. நிலப்பிரபுத்துவுச் சமுதாயத்தின் விளைவான கொடுமைகளையும், அதன் மிச்ச சொச்சங்' களே யும் எதிர்ந்தவர் தான் தாகூர். எனினும் அந்தச் சந்தேகத்தின் ஆணிவேரையே பிடுங்கியெறியும் வலிமை ஜாய்ந்து எத்திர 'வளர்ச்சியைக் காணும் போதோ, அதனை மற்றி ஓம் நிராகரிக்கும் அளவுக்கு அவரிடம் நிலப்பிரபுத் து? பிடிப்பும், அதன்மீது அபிமானமும் இருந்தன என்பது தான் உண்மை எனத் தெரியவருகிறது. எனவே எந்திர

  • பளர்ச்சியைப் புகழ்ச்சி செய்ய அவர் தவறுகிறார்; தயங்கு

சினர். இந்த உண்மையை நாம். கூச்சநாச்சமின்றி ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். பாரதிக்கும் தாகூருக்குமிடையே நிலலிய வேறு பல கருத்து மாறுபாடுகளும்கூட, இந்த வேற்று மையின் காரணமாகவே ஏற்பட்டன என்று சொல்லலாம். தாகூரி...கிருந்த இந்தப் பிடிப்பின் தளையை அவரே உனார்ந்து, அதனைக் களைந்தெறிய முன்வருவதற்கு அவருக்கு வெகுகாலம் பிடித்தது. அவரது அந்திம காலத்தில் தான் அந்த மாறுதல் - பேரிடம் ஏற்பட்டது. இந்த மாறுதல் பற்றிய உண்மையை அவரது வாய்மொழி மூலமாகவே நாம் பின்னர் காண்போம்.